Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்வினை தன்னைச் சுடும் கட்டம் இது

Featured Replies

தன்வினை தன்னைச் சுடும் கட்டம் இது

இலங்கையில் நடைபெற்ற போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டு இப்போது அனைத்துலக ரீதியாக முக்கிய பேசுபொருளாக மாறி யுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்களில் முதலில் முகிழ்த்த இந்த விவகாரம் ஐரோப்பிய நாடுகள் பலவற் றுக்கும் பரவியது.

அதன் முதலாவது விளைவு, போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாகும். ஆனால் இலங்கை அரசு ஏதோ வகையில் பல தரப்புகளின் உதவியைப் பெற்று அந்த விடயம் விவாதத்துக்கு வராது தடுத்துவிட்டது.

அதன் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு அத்துறையில் அந்தப் பணியில் கைதேர்ந்த நிபுணர்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்ற பலமான கோரிக்கையும் நிறைவேறவில்லை.

இந்த முயற்சியையும் இலங்கை அரசு ""புகுந்து விளையாடி'' தடுத்துவிட்டது. ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையில் நிலவிய தனிப்பட்ட முறையிலான நட்புமுறையின் செல்வாக்கு அதற்குப் பயன்பட்டதாகச் சொல்லப்பட்டது.

அதன் பிறகு, பல வட்டகைகளின் அழுத்தங்களின் பின்னர், ஐ.நா. செயலாளர் நாயகம் இதுவிடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்கவென நிபுணர் குழு ஒன்றை நியமித்திருக்கிறார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் தயாரித்த ஆடைகளுக்கு வழங்கிய ஜி.எஸ்.பி + வரிச்சலுகையை கடந்த ஜூலை மாதத்தோடு நிறுத்தியது. மனித உரிமைகள் தொடர்பாகவும் மற்றும் அவசரகாலச்சட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத் தப்பட்டு வருவது குறித்தும் சில நிபந்தனைகளை விதித்து ஜி.எஸ்.பி வரிச்சலுகையை ரத்துச் செய்தது ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள் ஏற்கக் கூடியவை அல்ல என்றும் அவை இலங்கை அரசின் நல்லாட்சியைப் பாதிக்கும் என்று கூறியும் அவற்றை ""கெப்போர்'' காட்டி நிராகரித்தது எம் நாட்டு அரசு.

ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவை நியமித் தமைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து, உள்நாட்டின் நியமிக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழு போதுமானது என்று தெரிவித்து கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தை முற்றுகையிட்டும், அதன் முன்னால் உண்ணாவிரதம் செய்வித்தும் பெரும் எதிர்ப்பைக் காட்டியது அரசாங்கம்.

இலங்கை அரசாங்கத்தின் பல வகையான தாழ்ந்த தராதர நடவடிக்கைகள், மேற்குலக நாடுகள் மத்தியில் அதற்குப் பெரும் அபகீர்த்தியை உண்டாக்கின. இந்த அபகீர்த்தியை, அதனால் உண்டான களங்கத்தைக் களையாவிட்டால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலங்கை தொடர்பான விடயங்களில் முரண்டு பிடித்து, வெளிக்காட்டப்படாத பகைமை நிலை ஒன்றைத் தோற்றுவிக்கும் ஆபத்தான நிலை அரும்பியிருந்தது.

இதனைக் ""கண்டுபிடித்து'' உணர்ந்து கொண்டதால், தனக்கு ஏற்படக்கூடிய இழப்புக்களைப் புரிந்துகொண்ட தால், இலங்கை அரசாங்கம் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் நற்பெயர் வாங்குவதற்குப் பகீரதப் பிரயத்தனம் செய்ய ஆரம்பித்துள்ளது. மிக முக்கியமாக, பிரதானமானதாக, போரினால் உண் டான களங்கத்தை நீக்குவதற்கு அரசு அக்கறை காட்டிச் செயற்படுவது புலப்படுகிறது.

அபிவிருத்தித் திட்டங்களுக்கு என்றும் திறைசேரி உண்டியலைச் சரி செய்வதற்கு என்றும் வெளிநாடு களிடம் இருந்தும் உலக வங்கியிடம் இருந்தும் கடன் பெறுவதற்கு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளின் தயவில் தங்கி இருக்க வேண்டிய நிலை இந்நாட்டு அரசுக்கு உள்ளது.

அதுமட்டுமன்றி, நலிவுற்ற நிலையில் தனித்து நின்று மற்றைய நாடுகளைப் போன்று அபிவிருத்தி அடைய முடியாத ஒரு நாடு இலங்கை என்பது மறுக்கப்பட முடியாத, மறைக்கப்பட முடியாத யதார்த்தம்.

இத்தகைய ஒரு பின்புலத்தில் நாட்டின் வளர்ச்சி கருதி, இதுவரை உண்டான அல்லது தேடிக்கொண்ட அப கீர்த்தியை நீக்க வேண்டிய நிலை எமது நாட்டுக்கு அரசாங்கத்துக்கு உண்டு. அது தவிர்க்க முடியாத தட்டிக்கழிக்க முடியாத தேவையுமாகும்.

ஆனால்....

எமது செயற்பாடுகளால், மனத்தாங்கல் மற்றும் கௌரவப் பிரச்சினையால் தூர விலகி நிற்கும் நாடுகளை எமக்கு அருகில் மீண்டும் கொண்டு வருவதற்கு நாட்டு மக்களின் வருமானத்தில் வருடாந்தம் பில்லியன் ரூபாக் கணக்கில் பணத்தைச் செலவிடுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அந்தப் பெருந்தொகையை இந்நாட்டு ஏழை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்குச் செலவிடலாமே!

அரசாங்கத்தின், அதன் அமைச்சர்களின் ""கொம்பன்'' தனத்தையும், முன்யோசனையற்ற நடவடிக்கைகளையும் ஈடு செய்வதற்கு அதுவே மாற்றுவழிகளைக் கண்டாக வேண்டும்.

பணச்செலவில்லாத வழிமுறைகளைக் கண்டறிய வேண்டிய பொறுப்பும், அதற்கான யுக்தியும் அரசாங் கத்திடமிருந்தே வரவேண்டும். முன்பின் யோசிக்காமல் இந்நாட்டுக்கு உதவும் செல்வாக்குள்ள, நாடுகளுடன் முண்டிய அரசே அதன் விளைவைத் தவிர்க்கவும் போக் கவும் வழி தேட வேண்டும்.

தன்வினை தன்னைச் சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும் என்பதனைப் புரிந்துகொள்ளாமல் செயலாற்றிய அரசினர், அபகீர்த்தியைத் துடைக்க மக்களின் வரிப் பணத்தைச் சுரண்டுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனைக் கருத்திற்கொண்டு, சிதைந்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்குத் தனது நிலைப்பாடுகளை மாற்றி, பகைமை உணர்வை நீக்கிப் புதிய பாதையில் பயணிக்க முன்வரவேண்டும்.

தவறு செய்வது இயற்கை; அதனைத் திருத்திக்கொள்ள மனங் கொள்வதே பெருந்தன்மை; நற்பயன் தரவல்லதும் அதுவே. அரசதரப்புச் சற்று நிதானத்துடன் இது தொடர்பில் செயற்பட மனங்கொள்ளுமா? தான் செய்த தவறுக்கு, பெரிய விவகாரத்தைப் பின்விளைவு நோக்காது செயற்பட்ட தவறை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். இது விடயத்தில் கௌரவம் கெட்டுப்போவதற்கு அதே முழுப் பொறுப்புமுடையது.

[ உதயன் ] - [ Oct 25, 2010 04:00 GMT ]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்க ஒண்டும் பங்கி மூனுக்கும், இரசாயனபக்சாவிட்கும் பெரிய நட்பு இல்லை. பங்கி மூநிண்ட மருமகன் இந்திய இராணுவத்தினன்.

இந்தியாவின் பாரசீக குடும்ப கொங்கிரஸ் கட்சி தான் தனது பவரை பாவித்து வெளிநாடுகளை முடக்கி சிங்களவனுக்கு இரண்டு விகித வட்டியில் காசும், முன்னூறு இராணுவ அதிகாரிகளையும், நான்கு போர் கப்பல்களையும் கொடுத்து நம்மை அழிக்க உதவியது.

மற்றும், உதயன் பத்திரிகையாளர்களுக்கு, "குரங்கின் கையில் பூமாலை" என்ற பழமொழி தெரியாதாக்கும். இந்த சிங்கள குடும்ப தாதாக்கள் ஸ்ரீ லண்கவை பிச்சு புடுங்கி குப்பை தொட்டியாக்கி விட்டு தான் ஓய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்வினை தன்னைச் சுடும் கட்டம் இது

தவறு செய்வது இயற்கை; அதனைத் திருத்திக்கொள்ள மனங் கொள்வதே பெருந்தன்மை; நற்பயன் தரவல்லதும் அதுவே. அரசதரப்புச் சற்று நிதானத்துடன் இது தொடர்பில் செயற்பட மனங்கொள்ளுமா? தான் செய்த தவறுக்கு, பெரிய விவகாரத்தைப் பின்விளைவு நோக்காது செயற்பட்ட தவறை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். இது விடயத்தில் கௌரவம் கெட்டுப்போவதற்கு அதே முழுப் பொறுப்புமுடையது.

[ உதயன் ] - [ Oct 25, 2010 04:00 GMT ]

இதெல்லாம் ரொம்ப ஓவர்... சின்ன பிள்ளைகளை அடிச்சு திருத்தணும்... வளர்ந்த பிள்ளைகளை அறிவுறை சொல்லி திருத்தணும் என்பார்கள்..

dec-news-rajapakse.jpg

ஆனா இது எந்த கேட்டகிரியிலும் வராத கேசு.. :lol: இதை நான் முன்னர் சொன்ன மாதிரி ஹெண்டில் பண்ணனும் :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அதர்மங்கள் சிதறிப் போவது நடந்தே தீரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.