Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூயாவின் ஏடு தொடக்கல்...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா...கற்பனையில் அகோரத்தில் கவிதையில் உள்ள காதலியின் பெற்றோரை போட்டு தள்ள வேண்டியதா போச்சு...அதுக்காக என்னை யாரும் பிச்சுவாங்காதிங்க பிளீஸ்.. :lol:

  • Replies 60
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

எல்லாரும் அமைதியாக இருப்பதை பார்த்தால் யோசிக்க வேண்டி இருக்கு தான் புதிரவன் :lol:

கவிதைக்கு பாரட்டுக்கள் & வாழ்த்துக்கள்

தூயா எல்லாக் கவிதையும் நல்லாயிருக்கு.

என்ன எல்லாரும் காதலன் அப்பிடிச் சொல்லமாட்டான் என்று சொல்லுறியள்?எனக்குத்தெரிஞ்ச ஒரு உண்மைக்கதை எழுதுறன் பாருங்க அதில வாற காதலன் போடுற உடுப்பு முதல் படிக்கிற பாடம் வரை தன்ர விருப்பத்தை காதலி மேல திணிப்பதை.

  • தொடங்கியவர்

மனிதர்கள் அப்படி தானே? சுயநலகாரர்கள்.

என்னை மிகவும் கோவபடுத்தும் விடயமே அது தான்?

வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது.

அதில மற்றவர்கள் விருப்பத்திற்கு வாழ்ந்தால், எங்கட விருப்பத்திற்கு எப்படி வாழ்வது...

வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது.

அதில மற்றவர்கள் விருப்பத்திற்கு வாழ்ந்தால், எங்கட விருப்பத்திற்கு எப்படி வாழ்வது...

பிள்ளை தூயா உங்கடை அப்பா அம்மாவிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..........

  • தொடங்கியவர்

மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் எமக்கு விரும்பியபடி நாம் வாழ்வதில் என்ன தப்பு??

  • 1 year later...

அட தூயாவும் முன்னொரு காலத்தில் கவிதை எல்லாம் எழுதி கலக்கி இருக்கிறீங்கள்.. :huh:

இனிப்பும் கசப்புமாய் என் காதல்

காதலுக்கு பல எதிரிகள்

இங்குண்டு மற்றவர்களுக்கு?

ஏனோ எனக்கு என்

காதலே எதிரியாய் போனதேன்?

அன்பாய் தான் இருக்கிறான்

அழகாய் தான் எனை ரசிக்கிறான்

நிறைவாய் தான் தருகிறான்

நிறைமதியாய் எனை தாங்குறான்

இருந்தும் எனக்கேனோ

நிம்மதியாய் ஒருநாளும்

உறங்கமுடியவில்லை..

என்னவனின் அன்பு

முகம் இதுவெனில்

அவன் அடுத்த முகம்...

நண்பர்கள் உனக்கெதுக்கு

வேண்டாம் என விட்டுவிட்டேன்

நானிருக்க சுற்றம் ஏன்

அதை கூட விட்டு விட்டேன்

படிப்பெதற்கு, வேலை எதற்கு

நான் உன்னை பார்த்துக்கொள்வேன்

அவன் மேல் உள்ள அன்பில்

அத்தனையும் துறந்துவிட்டேன்

கடைசியில் வந்தது எனை பெற்றவர்கள்

நானா? அவர்களா?

என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?

எப்படி தான் சுவாசிக்க முடியும்?

கல்லானானுல் கணவன்

புல்லானாலும் புருஸன்

என வாழவா??

அல்ல

எனக்கென ஒரு மனம்

இருக்கென நான் முதலில்

உணர்ந்து

வேறு பாதை செல்லவா?

இனிக்கும் காதல்

எனக்கு மட்டும்

இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!!

-----------------------------------------------------------------------------------------------------

எனக்கென ஒரு மனம்

இருக்கென நான் முதலில்

உணர்ந்து

வேறு பாதை செல்லவா?

பிரச்சனை இங்கேதான் வருகின்றது. உங்கள் காதலனின் மனமும் உங்கள் மனமும் ஒரேமாதிரி இருக்கவேண்டும். வேறுபட்ட எண்ணங்களை, கருத்துக்களை, கொள்கைகளை, விருப்பங்களை, இரசனைகளை கொண்டவர்களினால் காதலிக்க முடியாது. சண்டை பிடிக்கமட்டுமே முடியும்.

  • தொடங்கியவர்

அது ஒரு கனாக்காலம். யாழும் நான் தமிழ் கற்றுகொண்ண்டிருந்த காலம். எழுதிப்பார்க்கலாம் என ஆரம்பித்தது. பின்னர் மற்றவர்கள் நலன் கருதி நிறுத்திவிட்டேன்.. கிகிகி

அப்படியல்ல என்பது என் கருத்து

வித்தியாசமாக இருந்தாலும் ஒருவருடைய உணர்வுகலை மற்றவர் மதிக்க தெரிந்திருந்தால் மகிழ்வாக வாழலாம்.

[நீங்களும மப்பு, கவிதை, கதை எலுதினால் அதில் வரும் கதாபாத்திரங்கள் நானாகவா இருக்க வேண்டும்?] ;)

இனிக்கும் காதல்

எனக்கு மட்டும்

இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!!

தூயிஸ் நல்லா இருக்கு கவிதை...............உங்களுக்குமா ஓ பழைய கவிதையா அப்ப சரி இப்ப உங்களின் என்னவன் எப்படி இருகிறார்........ :P

காதல் முற்றி கவிதை வந்திருப்தாக தெரிவில்லை...

கவிதை முதிர்ச்சியுள்ளதாக தெரிகிறதே..

உங்கள் காதலன் குழந்தை மனம் கொண்டவர்..

உங்கள் மேல் அளவில்லாத பாசம் கொண்டவர் ஆனால் அவர் உங்கள் அன்பை சோiனை செய்வது போல் உள்ளது..

அப்படியென்றால் உங்கள் அன்பை நீங்கள் சரியான விதத்திலி; வெளிப்படுத்தவில்லை..

நீங்கள் உங்கள் காதலை சரியாக அவருக்கு உணர்த்தும் போது அவராகவே பறித்த உறவுகளை வேலையை எல்லாம் திருப்பிக்கொடுப்பார்..

தவறு அவரில் இல்லை உங்களில் காதலை நம்பிக்கைப்படுத்துங்கள் அன்பை உணரத்துங்கள்..

எல்லாம் நலமாகும்..

தூயா,

"வித்தியாசமாக இருந்தாலும் ஒருவருடைய உணர்வுகளை மதிக்க தெரிந்திருந்தால் மகிழ்வாக வாழலாம்."

இப்படி சொல்லுறீங்கள். இது நடைமுறைக்கு உண்மையில் சாத்தியமா? எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாதபோது, ஏமாற்றங்கள் மிஞ்சும்போது மதிப்பும், மகிழ்ச்சியும் எவ்வாறு தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்?

"ஒத்தமுனைவுகள் ஒன்றை ஒன்று தள்ளும், ஒவ்வாதமுனைவுகள் ஒன்றை ஒன்று கவரும்!"

இந்த தத்துவம் காந்தங்களிற்கு [magnet] மாத்திரமே பொருந்தும். மனிதர்களிற்கு இதன் எதிர்மறையே உண்மை என்று நினைக்கின்றேன்.

[ஆனாலும், உணர்வுகளை மதிக்கும் உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகின்றேன். ;) ]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.