Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும்.

இழப்பதற்கு இனி எதுவுமேயில்லையென்று கூறிக்கொள்ளும் குரல்களும் எங்கள் வாழ்வுக்கு அடுத்த வழியை யார் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற ஏக்கங்களை மட்டும் சுமக்கின்ற ஏதிலிகள் வன்னியில் மிஞ்சிய குடிகளாக இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட ஊர்களைத் தேடிச்சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்கிவரும் நேசக்கரத்தின் ஊர்கள் நோக்கிய தேடலில் எமது நேசக்கரத்தை எதிர்பார்த்திருக்கிறது கிளிநொச்சி மணியன்குளம் என்கின்ற கிராமம்.

இக்கிராமத்தில் உள்ள புதியகுடியிருப்பு , பழையகுடியிருப்பு , விநாயகபுரம் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளைச் சேர்ந்த 40 குடும்பங்கள் சுயதொழில் முயற்சிக்கான உதவியினை வேண்டியிருக்கிறார்கள்.

இக்குடும்பங்களில் அதிகளவிலானோர் பெண்களாக உள்ளனர். குறிப்பாக போரில் கணவர்களை இழந்தவர்கள் தடுப்பு முகாமில் இருக்கும் கணவர்களின் மனைவிகள் மற்றும் கணவர்களால் கைவிடப்பட்டவர்களாகவும் ஊனமடைந்தவர்களாகவும் காணப்படுகிறார்கள்.

இந்தப் பெண்களை நம்பிய இவர்களது குழந்தைகள் தமது கல்வியைத் தொடரவோ நல்ல சத்துணவுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். மணியன்குளம் குடியிருப்பிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 20 பிள்ளைகளுக்கான ஒருவருடத்துக்கான கல்வியுதவியினையும் வழங்குவதற்கான உதவிகளையும் வேண்டுகிறோம் உறவுகளே….!

ஒரு குடும்பத்துக்கு இலங்கை ரூபா 15ஆயிரம்ரூபாவை அவர்களது சுயதொழில் முயற்சிக்கும் ஒரு பிள்ளைக்கான கல்விக்காக மாதாந்தம் ஆயிரம்ரூபாவை வழங்கவும் முதற்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளோம். இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்பும் உறவுகள் இணையுமாறு வேண்டுகிறோம்.

ஒரு குடும்பத்துக்கு = 15000ரூபா

40 குடும்பங்களுக்கும் = 15000 x 40 = 600000ரூபா (ஆறுலட்சம் ரூபாய்)

ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் = 1000 ரூபா

ஒரு பிள்ளைக்கு ஒருவருடத்திற்கு = 1000 x 12 = 12000ரூபா (பன்னிரண்டாயிரம் ரூபா)

20 பிள்ளைகளுக்கும் மொத்தம் ஒருவருடத்துக்கான தேவை = 240000ரூபா(இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபா)

இத்திட்டத்திற்காக எதிர்பார்க்கும் உதவி மொத்தம் – 840000ரூபா (எட்டுலட்சத்து நாற்பதாயிரம் ரூபா)

இவ்வுதவியை கட்டம் கட்டமாக செய்யவுள்ளோம். ஒவ்வொரு குடியிருப்பாக உதவிகளைக் கொடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒவ்வொருவர் முன் வந்து ஒவ்வொரு குடும்பத்திற்கான நேசக்கரத்தினை வழங்குவீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் சிறுதுளி அவர்களின் வாழ்வில் பெருவெள்ளமாகும் என்கின்ற நம்பிக்கையில் உங்கள் உதவிகளை வேண்டுகிறோம்.

உதவ விரும்பும் உறவுகள் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்:-

Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy 0049 6781 70723 begin_of_the_skype_highlighting 0049 6781 70723 end_of_the_skype_highlighting

Sri – 0033 611149470 begin_of_the_skype_highlighting 0033 611149470 end_of_the_skype_highlighting

Skype – Shanthyramesh

Skype – Srigowripal

www.nesakkaram.org

DSC03121.jpg

www.nesakkaram.org

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்துக்கு தொழில் தொடங்க... 15 ஆயிரம்ரூபா

தமிழனின் நிலையைப்பாருங்கள்

யாழில் உள்ள எல்லோரும் ஒவ்வொரு குடும்பத்தை எடுப்போமா...?

நான் தயார்

Edited by விசுகு

முதலாவது - அண்மையில் ஒரு நிகழ்வு. எனக்கு தெரிந்தவர் ஒருவர் சென்றிருக்கிறார், அங்கு வந்தவர்கள் அரைக்கரைவாசி தமிழர்களும், சிங்களவர்களும்!! சில சிங்களவர்களுடன் அவர் கதைத்துக் கொண்டு போகும் போது கூறியிருக்கிறார், தனக்கு வன்னியில் வயல்கள் இருப்பதாக ... உடனடியாக ஒரு அங்கிருந்த ஒரு சிங்களவர், அவரிடம், நீர் அதை விற்க விரும்பின், நான் அதனை வேண்டுகிறேன்! என்று கேட்டிருக்கிறார். அதுவும் லண்டனில் வாழும் சிங்களவர், வடபகுதியில் வாழ்ந்தே பழக்கமில்லாத சிங்களவருக்கு எவ்வாறு, ஏன் அந்த ஆசை?????? இப்படியாக வாங்க முற்படும் சிங்களவர்களின் செய்திகள், பலர் மூலம் கேட்க்கக்கூடியதாகவுள்ளது.வடக்கில் வயல், நிலங்களை/காணிகளை/சொத்துக்களை வாங்க முற்படும் பணம் படைத்த சிங்களவர்கள்!

இரண்டாவது - சிங்களம் திட்டமிட்டு, புலி அழிப்பு எனும் பெயரில் தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள்/உடைமைகள்/சொத்துக்கள் மீது ஏற்படுத்திய அழித்தொழிப்பினால், இன்று வாழ்வதற்கே வழியற்று நடுத்த்ருவில் நிற்கும் மக்கள், தாம் வாழ தம்மிடம் இருக்கும் ஒரே சொத்தான நிலங்களை விற்க முற்படுவதும், அதனை கொள்ளை விலையில் பல சிங்களவர்கள் வாங்க முற்படுவதும் நாளாந்தம் நடைபெற தொடங்கியிருக்கிறதாம்!

மூன்றாவது - திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள்! சந்ததி சந்ததியாக பிறந்து/வளர்ந்து/புரண்டு/படுத்தெழுந்த மண்ணில் விட்டு எம்மக்கள் துரத்தப்பட்டு, இன்று இராணுவமுகாங்களென்றும், பாதுகாப்புவலயங்கள் என்றும் கூறி, அம்மக்களை மீள்குடியேற விடாது தடுத்து, அவர்களின் நிலங்கள் திட்டமிட்ட சிங்கள இராணுவ ஆயுதக்குடியேற்றங்கள்! இந்த சிங்கள இராணுவ ஆயுதக்குடியேற்றங்கள் வருங்காலங்கள் அருகருகே உள்ல கிராமங்களில் வாழும் எம்மக்களுக்கும் உயிருக்கு கூட உலை வைக்கக்கூடியதாக வரப்போகிறது!

இவைகளுக்கு தொடர்ந்து நாம் அனுமதிக்கப்போகிறோமா?????? இல்லை அம்மக்களின் வாழ்வாதாரங்களை சற்றேனும் உயர்த்தி, அவர்களை அம்மண்ணில்/எம்மண்ணில் நிரந்தரமாக வாழ வழி சமைக்கப் போகிறோமா?????

.... மே18இற்குப்பின் நாம் விட்ட தவறுகளில் மிக பாரியது ... அங்கு அழிவுகளை சந்தித்த மக்களுக்கு கை கொடாது விட்டது! ஒருபுறம் அவர்களுக்கு செய்யும் உதவிகளை சிங்களம் அபகரிக்கும் எனும் பயம்! இன்னொருபுறம் புலத்தில் மே18இற்குப்பின்னம் சரியான அரசியல் வழி நடத்தல்; இல்லாமை!!!

.... நாம் தொடர்ந்து விட்டுக் கொண்டிருக்கும் தவறுகள் ... அவைகளே சிங்களம் செய்ய முனையும் செயல்களுக்கு, எரிவதற்கு எண்ணையாகிறது!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

லா சப்பலில் வழமையாக வரும் ஒரு வாடிக்கையாளர் சிங்களவர் எனது மைத்துணரைக்கேட்டிருக்கிறார்

நான் ஊருக்கு போகின்றேன் நீங்கள் போகவில்லையா என்று.

இவரும் இல்லை நான்;போகவில்லை நீங்கள் ஏன் திடீரென்று போகின்றீர்கள் என்று கேட்டிருக்கின்றார்.

அந்த சிங்களவர் நான் யாழ்ப்பாணத்தில்ஒரு காணி வேண்டிவிட போகின்றேன் என்று சொல்லியிருக்கிறார்.

மீண்டும் ஒரு மாதம் செல்ல கடைக்கு வந்தவரிடம் எனது மைத்துணர் கேட்டிருக்கிறார்

யாழில் காணி எங்கு வாங்கினீர்கள் என்று.

அவர் சொல்லியிருக்கிறார்

அந்த அளவுக்கு என்னிடம் பணமில்லை. என்ன விலையப்பா யாழ்ப்பாணத்தில் காணி என்று......

பாருங்கள் எவரோ இவர்களை தூண்டி விடுகிறார்கள்.

இது கூட புரியாது எனது இனம்..........???

  • கருத்துக்கள உறவுகள்

Sorry.......

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குடும்பத்துக்கு தொழில் தொடங்க... 15 ஆயிரம்ரூபா

தமிழனின் நிலையைப்பாருங்கள்

யாழில் உள்ள எல்லோரும் ஒவ்வொரு குடும்பத்தை எடுப்போமா...?

நான் தயார்

லட்சங்கள் கொடுத்து பெரும் முதலீடுகளை இட்டு முன்னேற அவர்களிடமும் ஒன்றுமில்லை எங்களாலும் அது முடியாது. அன்றாடச் சீவியத்தை வழிநடத்த ஒரு சிறு துரும்பை இப்போது பிடித்து எழச்செய்வோம்.

உறவுகளிடம் கையேந்தி நிற்கிறோம். பார்ப்போம் எவ்வளவுக்கு வெற்றியளிக்கும் என்பதை கிடைக்கப்பெறும் உதவிகளில் இருந்துதான் பார்க்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும்.

DSC03121.jpg

DSC03123.jpg

DSC03166.jpg

DSC03250.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தில் உள்ள பெண் மணியன் குளத்தைச் சேர்ந்தவர். முள்ளிவாய்காலில் ஒழு குழந்தையும் கணவனும் இறந்து விட்டார்கள். மிஞ்சிய ஒரு மகனுடன் உயிர் தப்பியவர். மணியன்குளத்தில் மீண்டும் குடியேறி இந்தப் பெண் கடந்தமாதம் பாம்பு கடித்து இறந்துவிட்டார். இவரது 4வயது மகனை இவரது தாயார் மிகுந்த வறுமையின் மத்தியில் பராமரித்து வருகிறார். கடந்த மாதம் இப்பெண்ணை எங்களுடடைய தொடர்பாளர் தீபச்செல்வன் சந்தித்திருந்தார். சந்தித்த போது இப்படத்தை எடுத்து வந்தார். இம்மாதம் திரும்ப இங்கு போன போது அந்தப்பெண்ணும் படமாகத் தொங்க அவளது குழந்தை அம்மம்மாவுடன்.....

DSC03121.jpg

உங்கள் உதவிகள் இந்தக் குடும்பத்தின் குழந்தைக்கும் குழந்தையின் அம்மம்மாவுக்கும் கூட மறுவாழ்வைக் கொடுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணியன்குளம் மக்களை இங்கே பார்த்துள்ளோர் தொகை 118. கிட்டத்தட்ட 5ஆயிரம் பேர் வரையில் அங்கத்துவம் வகிக்கிறோம். தாயகம் தேசியம் தன்னாட்சி பற்றி அதிகம் அக்கறைப்படும் தமிழர்கள் நாம் 40 குடும்பங்களுக்கு ஒரு வாழ்வைக் கொடுக்க பின்னிற்கிறோம் ??????????? வெறும் பார்வையாளர்களாக ????????? <_<:D :D :blink:

மணியன்குளம் மக்களை இங்கே பார்த்துள்ளோர் தொகை 118. கிட்டத்தட்ட 5ஆயிரம் பேர் வரையில் அங்கத்துவம் வகிக்கிறோம். தாயகம் தேசியம் தன்னாட்சி பற்றி அதிகம் அக்கறைப்படும் தமிழர்கள் நாம் 40 குடும்பங்களுக்கு ஒரு வாழ்வைக் கொடுக்க பின்னிற்கிறோம் ??????????? வெறும் பார்வையாளர்களாக ????????? <_<:D :D :blink:

...... பணமல்ல, மனம் இருந்தால் ....!!!!

... சிலவேலை இங்கு பலர் வேறு வழியாக உதவக்கூடும்! அவர்கள் இங்கு கூறவில்லை என்பதற்காக, எல்லோரையும் ஒரு தட்டில் வைப்பது தவறு!

... நாம் எல்லாவற்ருக்கும் ஏன் தாயகம்/தேசியம்/தன்னாட்சியை நோவான்! ஏன் முன்பு நாம் புலி எதிர்ப்பெ ஒழிய, எமக்கும் தமிழ் மக்களின் வாழ்வில் அக்கறையிருக்கிரது என்று கூறித்திறிந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாம் கொட்டி அள்ளித்தானே செய்கிறார்கள்!!!????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... சிலவேலை இங்கு பலர் வேறு வழியாக உதவக்கூடும்! அவர்கள் இங்கு கூறவில்லை என்பதற்காக, எல்லோரையும் ஒரு தட்டில் வைப்பது தவறு!

... நாம் எல்லாவற்ருக்கும் ஏன் தாயகம்/தேசியம்/தன்னாட்சியை நோவான்! ஏன் முன்பு நாம் புலி எதிர்ப்பெ ஒழிய, எமக்கும் தமிழ் மக்களின் வாழ்வில் அக்கறையிருக்கிரது என்று கூறித்திறிந்த மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் எல்லாம் கொட்டி அள்ளித்தானே செய்கிறார்கள்!!!????

ஒரு தட்டில் எல்லாரையும் வைக்கவில்லை. இங்குள்ள யாரும் ஏதும் உதவவில்லையென்றும் கூறவரவில்லை. ஆனால் அதிகம் 3சொற்களை உச்சரிப்பதில் காட்டும் அக்கறையை ஏன் இத்தகைய விடயங்களில் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டுவதில்லையென்ற வருத்தம்தான்.

இங்கு மாற்றுக்கருத்தையோ அல்லது மறுகருத்தாளர்களையோ கூப்பிட வேண்டாம் நெல்லையன். கொட்டிக்கொடுத்தவர்களே மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொடுக்க வேண்டிய நிலையிலிருந்து மாறி எல்லாரும் பாரத்தை சுமக்கத் தயாராக வேண்டும். தொடர்ந்து உதவுவோரிடமே நாங்களும் திரும்பவும் இறஞ்சுகிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மணியன்குளம் முதலாவது திட்டத்தில் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார் அவுஸ்ரேலியாவிலிருந்து ஈசன் அவர்கள். 150அவுஸ்ரேலிய டொலர்களை பேபால் ஊடாக அனுப்பி வைத்துள்ளார்.

கட்டார் நாட்டிலிருந்து மேலும் இரண்டு குடும்பத்துக்கான உதவியை றோஷன் அவர்கள் உதவியுள்ளார்.

இதுவரை 3குடும்பங்களுக்கான உதவிகள் தயாராகவுள்ளது. இன்னும் ஆறுகுடும்பங்களுக்கான உதவிகளை தருவதாக சில நண்பர்கள் வாக்குறுதியழித்துள்ளார்கள். எல்லாமாக 9குடும்பங்களுக்கான உதவி அடுத்துவரும் நாட்களில் உதவிகளை எதிர்பார்த்திருக்கும் உறவுகளிடம் கொண்டு செல்வோம்.

மீதமாக இன்னும் 31குடும்பங்களுக்கான உதவிகள் தேவைப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டாரிலிருந்து சுவாமிநாதன் அவர்கள் ஒரு குடும்பத்துக்கான உதவியை வழங்க முன்வந்துள்ளதோடு ஒரு பிள்ளைக்கான கல்விச்செலவையும் தர முன்வந்துள்ளார். இவர் ஒரு தமிழகத்து உறவு. தமிழர் என்ற உணர்வோடு எம்முடன் கைகோர்த்துள்ள சுவாமிநாதனுக்கு நன்றிகள்.

30 குடும்பங்கள் இன்னும் உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.