Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள புரமாகுமா வசந்தபுரம்?

Featured Replies

மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயமும், அதனைத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளும் யாழ்ப்பாணத்தை சிங்கள மயமாக்கும் நிகழ்ச்சிநிரலுடன்தான் அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் சென்று தம்மை அங்கு குடியமர்த்துமாறு கோரி யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைப் பார்வையிடுவதற்காகவே அமைச்சர் யாழ். சென்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிங்கள மக்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுவதற்காக அரங்கேற்றப்படும் நாடகத்தின் ஒரு அங்கமே மில்ரோய் பெர்னான்டோவின் யாழ். விஜயம் என்பது இப்போது தெளிவாகத் தெரிகின்றது. தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நகர்வுகளுக்காக சிங்களத் தரப்பு காத்துக்கொண்டிருக்கும் நிலையில்தான் கொழும்புத்துறையிலுள்ள வசந்தபுரம் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியை சிங்களவர்கள் தமது பூர்வீக பூமி என உரிமை கோரியிருக்கும் நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த தமிழர்களைப் பலவந்தமாகவாவது வெளியேற்றுவதற்கு இராணுவ உதவியுடன் ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர் மில்ரோய் பொர்னான்டோ, ரயில் நிலையத்தில் தங்கியிருந்த சிங்களவர்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றார். அவர்களுடைய கோரிக்கைகளை தான் புரிந்துகொள்வதாகவும், அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருக்கின்றார். இதனையடுத்து யாழ். செயலக அதிகாரிகளுக்கு அவர் பிறப்பித்த உத்தரவில், இந்த சிங்களக் குடும்பங்கள் குடியிருந்தமைக்கான ஆதாரங்களைக் கண்டறியுமாறும், அதேவேளையில் அவர்களுக்கு மாற்று நிலங்களைக் கண்டறியுமாறும் கேட்டுக்கொண்டிருந்தமையின் உண்மையான நோக்கம் என்ன என்பது அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

யாழ்ப்பாணம் வந்திருக்கும் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் பூர்வீகமாக இருந்துள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்கு அப்பால், யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய அரச காணிகளில் இவர்கள் அனைவரையும் குடியேற்றிவிடுவதுதான் அரசாங்கத்தின் இலக்காக இருக்கின்றது. ஆனால், யாழ்பாணத்தைப் பொறுத்தவரையில் அவ்வாறு குடியேற்றங்களை மேற்கொள்வதற்குப் பொருத்தமான அரச காணிகள் இல்லாதததுதான் சிங்களவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை. இந்தப் பின்னணியில்தான் இவர்களுடைய பிரச்சினை இழுபறியில் உள்ளதுடன், வசந்தபுரத்தை நோக்கி அரச தரப்பினரது கவனமும் திரும்பியுள்ளது.

இது தொடர்பாக இணையத்தளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மில்ரோய், 'இவர்களுடைய மீள்குடியேற்றத்துக்கு வசதியாக அரச காணிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளனவா என்பதை ஆராயுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். இருந்தபோதிலும் முன்னர் தாம் வசித்துவந்த காணிகளில் மீண்டும் குடியேறுவதற்கு அவர்கள் விரும்பினால் உரிய ஆவணங்கள் அனைத்தும் அவசியம். ஏனையவர்களுக்கு அரச காணிகளில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ தெரிவித்திருக்கும் இந்தக் கருத்துக்களின் உள்நோக்கம் என்ன என்பது புரிந்துகொள்ளப்பட முடியாத ஒன்றல்ல.

தற்போது யாழ்ப்பாணத்தில் தமது பூர்வீக நிலம் இருப்பதாகக் கூறி வந்திருப்பவர்களில் யாரிடமுமே அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. தாம் வசித்துவந்த இடம் எது என்பதையோ அல்லது அதன் முகவரியையோ கூட அவர்களால் சரியாகக் கூறமுடியவில்லை. இந்த நிலையிலும் அவர்களுக்கு காணியைக் கொடுத்து அவர்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதைத்தான் அமைச்சரின் கருத்துக்கள் புலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

அமைச்சர் மில்ரோய் மட்டுமன்றி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும், ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்த்தர்களும் யாழ்ப்பாணம் சென்று இவர்களைப் பார்வையிட்டுள்ளார்கள். இதனைவிட அடிக்கடி யாழ்ப்பாணம் சென்றுவரும் சிங்கள வர்த்தகர்களும் இவர்களைச் சென்று பார்வையிடுவதுடன் இவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்துவருகின்றார்கள்.

கொழும்புத்துறை மணியந்தோட்டத்திலுள்ள வசந்தபரம் பகுதியில் இவர்களைக் கொண்டுசென்று குடியேற்றுவதற்கு இராணுவ உதவியுடன் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டபோதிலும் யாழ். அரச அதிபர் இதனை பின்னர் மறுத்திருந்தார். வசந்தபுரம் பகுதியில் இருந்த இராணுவ முகாம் காரணமாக அப்பகுதி மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை. 1995 இல் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது வீடுகளை விட்டு வெளியேறிய இப்பகுதி மக்களை மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எதனையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.

போர் முடிவுக்கு வந்து ஒன்றரை வருடம் சென்று உயர் பாதுகாப்பு வலயமும் நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னரும் கூட இந்தப் பகுதி மக்கள் தமது பூர்வீக நிலத்தில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படாமையால் தொடர்ந்தும் அவர்கள் வெளி இடங்களிலேயே தங்கியிருந்துள்ளனர்.

இந்தப் பகுதிகளில் இருப்பதாகக் கூறப்படும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கோ அல்லது அப்பகுதி மக்களை மீளக்குடியேற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்காத நிலையிலேயே - சிங்களவர்களை அந்தப் பகுதியில் குடியேற்றுவதற்கு இரகசியத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது. இந்தத் தகவல்களையடுத்தே அப்பகுதியிலிருந்த தமிழர்கள் தமது காணிகளில் சென்று மீளக்குடியேறுவதற்கு முயன்றுள்ளார்கள். ஆனால் இதனைத் தடுத்த இராணுவத்தினர் அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடுவையும் விதித்திருந்தனர். அதனையும் மீறி தமிழர்கள் அப்பகுதியில் குடியேறியுள்ளர்.

கண்ணிவெடிகள் அகற்றப்படாமையால்தான் அவர்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்படவில்லை என இராணுவத் தரப்பு நியாயம் கூறினாலும், மக்கள் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இராணுவம் மேற்கொண்ட முனைப்பு அந்த மக்கள் மீதான அக்கறையுடன்தான் இராணுவம் அதனைச் செய்ததா என்ற கேள்வியை எழுப்புவதாகவே அமைந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தெரிவிக்கும் தகவல்களின்படி சிங்கள மக்கள் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்னதாகவே அவர்களுக்குத் தேவையான சில வசதிகள் யாழ். ரயில் நிலையப்பகுதியில் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கழிவறைகள் அமைத்தல் மற்றும் நீர் வசதிகள் போன்றன செய்யப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் பார்க்கும் போது இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என்பது புலனாகின்றது.

இந்த நாடகத்தின் இரண்டாவது கட்டத்தில் மேலும் 500 குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் வந்து குடியேறுவதற்குத் தயாராக அநுராதபுரம் மற்றும் மிகிந்தலைப் பகுதியில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதலாவதாக வந்துள்ள குழுவினருக்கு காணிகள் வழங்கப்படும் கட்டத்தில் இரண்டாவது குழுவும் யாழ்ப்பாணம் வந்திறங்கும் என எதிர்பார்க்கலாம்.

அரசாங்கத்தின் திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான நிலம் இப்போது தேவையாக உள்ளது. அதற்காகத்தான் சிங்களத் தரப்பு இப்போது காத்துக்கொண்டிருக்கின்றது. பொருத்தமான நிலம் கிடைக்கவில்லை எனில் வசந்தபுரம் போன்ற பகுதிகள்தான் ஆபத்தை எதிர்நோக்கும்.

அரசாங்கம், ஜாதிக ஹெல உறுமய மற்றும் இராணுவம் ஆகிய மூன்று தரப்பினரும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயற்படுவதால் தமிழர் தரப்பு இதனை எதிர்கொளவதற்கு கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே தெரிகின்றது.

ஒன்றுமட்டும் நிச்சயம் - யாழ் வந்துள்ள சிங்களவர்கள் இனிமேல் திரும்பிப்போகப்போவதில்லை.

http://www.pooraayam.com/news-analysis/1303-2010-10-31-12-25-24

பூராயத்துக்காக

யாழ். நகரிலிருந்து அபிமாறன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.