Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும்

Featured Replies

ஐ.நா. மன்ற பாதுகாப்புக் கவுன்சி்ல் சீரமைக்கப்படும்போது, அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.

தனது மூன்று நாள் இந்தியப் பயணத்தின் நிறைவாக, இந்திய நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். மிகச்சில உலகத் தலைவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் அந்தக் கெளரவத்தை, மன்மோகன் சிங் அரசு ஒபாமாவுக்கு வழங்கியுள்ளது.

ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள நாடுகளில், சீனா தவிர்த்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா இதுவரை தயக்கம் காட்டி வந்தது. ஒபாமா தனது பயணத்தின்போது, இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிடுவார் என்று இந்திய ஆட்சியாளர்களிடம் பெரும் எதிர்ப்பு இருந்தது.

இந் நிலையில், தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஒபாமா.

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா எதனையும் திணிக்காது

இதேவேளை காஷ்மீர் பிரச்சினையில் எந்தத் தீ்ர்வையும் திணிக்க அமெரி்க்கா விரும்பவில்லை என்றும், அதே நேரத்தில், இரு நாடுகளும் விரும்பினால் பதற்றத்தைக் குறைப்பதற்கான எந்தவித பங்களிப்பையும் ஆற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், பயங்கரவாதம் கலந்த அழுத்தத்தை பாகிஸ்தான் நிறுத்தினால், அந்த நாட்டுடன் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களும் திங்கட்கிழமை டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்கள்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ஜனாதிபதி பராக் ஒபாமா, திங்கட்கிழமை காலை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அதன்பிறகு, இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் உறவு

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இணைந்து செயல்படுவது குறித்து ஒபாமா குறிப்பிடும்போது, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் எதுவும் கிடைக்காமல் உறுதி செய்ய இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை தாங்கள் ஒப்புக்கொண்டிருப்பாகத் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான கேள்விக்கு ஒபாமா பதிலளிக்கும்போது, காஷ்மீர் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினை என்றும், பதற்றத்தைத் தணிப்பதில் பாகிஸ்தான் – இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பங்கு உள்ளதாகவும் கூறினார்.

அதுபற்றி, பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவிக்கும்போது, கே வார்த்தை அதாவது, காஷ்மீர் உள்பட எந்தப் பிரச்சினை குறித்தும் பாகிஸ்தானுடன் பேசத் தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் பயங்கரவாதம் தீவிரமாக இருக்கும் அதே நேரத்தில் பேச்சுவார்த்தையையும் நடத்த முடியாது என்று உறுதிபடக் கூறினார்.

``பயங்கரவாதம் கலந்த அழுத்தத்தை பாகிஸ்தான் நிறுத்தினால், அந்த நாட்டுடன், அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஆக்கப்பூர்வமாகப் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம்,’’ என்றார் மன்மோகன் சிங்.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதக் குழுக்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படுவதாகவும், அதற்கு பாகிஸ்தான் அரசு அமைப்புக்கள் மறைமுக ஆதரவு கொடுத்து வருவதாகவும் இந்தியா தொடர்ந்து புகார் கூறி வருகிறது. இதுதொடர்பாக ஒபாமாவிடமும் இந்தியா சுட்டிக்காட்டியதாகத் தெரிகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள், இருதரப்புக்கும் பலனளிக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் பணிகளைக் களவாடுவது இந்தியாவின் வேலையல்ல என்று பதிலளித்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/11/101108_obamamanmeet.shtml

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படாமல் போன அமெரிக்காவுக்கு உதென்ன தேவையில்லாத வேலை? :D சீனாவுக்கு எதிரா கொம்பு சீவுறன் எண்டு கடைசியில் இந்தியனிட்ட மாட்டப் போகினம்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்

இந்த இந்தியா அவா சரிவருவதற்கு இன்னும் குறைந்தது 15 -20 வருடங்கள் ஆகுமென ஆய்வாளர்கள் கருதுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அது வரைக்கும் இந்தியா உடையாமல் ( சீனா / பாகிஸ்தான் பிரிக்க்கக்கூடாது) இருக்க வேண்டும் ! :D

ஒரு நாட்டை மட்டும் சேர்க்க முடியாது மொத்த எண்ணிக்கை ஒற்றை இலக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். மேலும், ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகியனவும் இந்த மரியாதைக்குரிய கழகத்தில் அங்கத்தவராக விரும்பும் நாடுகள்.

Edited by akootha

  • தொடங்கியவர்

ஒபாமா இப்படி பேசுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த தகவலை வெளியிட ரகசியம் காத்தார் என அமெரிக்க பத்திரிகைகள் நேற்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒபாமாவின் இந்திய பயணத்தை பற்றி, குறிப்பாக, ஒபாமா, பார்லிமென்டில் பேசியதைத் தான் பரபரப்பாக வெளியிட்டுள்ளன.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுடன், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தும் முயற்சியாக, ஒபாமாவின் பயணம் அமைந்திருந்தது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம் பெறுவதற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிவிப்பை வெளியிடுவதில் கடைசி வரை மவுனமாக இருந்துவிட்டு, திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன என்று பத்திரிகைகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பொருளாதார வளர்ச்சியில், சீனா இப்போது உலகின் முன்னணி இடத்திற்கு வந்து கொண்டு இருக்கிறது. அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்க சீனா முயற்சிப்பாத குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், சீனாவுக்கு இணையாக பொருளாதாரத்தில் வளர்ந்துவரும் சக ஆசிய நாடான இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதன் மூலம், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை என்ற ரீதியில், ஒபாமாவின் பேச்சை முடிச்சுபோட்டு அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க பத்திரிகைகளில் இடம் பெற்றிருந்த செய்திகளில் சாராம்சம் இது தான்:

வாஷிங்டன் போஸ்ட்: அதிபர் ஒபாமா, இந்திய பார்லிமென்டில் உரையாற்றும் வரை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கான இடம் பற்றி வாய் திறக்காமல் இருந்தார். பார்லிமென்டில் பேசும் போது, திடீரென தனது நிலையை தெரிவித்தது ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது.

தி நியூயார்க் டைம்ஸ்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அதிபர் ஒபாமா ஆதரவாக பேசியது, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையே.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=123176

  • தொடங்கியவர்

இந்தியாவில் ஒபாமா மேற்கொண்ட 3 நாள் பயணத்தில் அமெரிக்காவிற்கு கிடைத்ததென்ன

1. இந்திய விமானப் படைக்கு நீண்ட தூரம் டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைக் கொண்டு செல்லக் கூடிய அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான சி-17 விமானங்கள் 10ஐ வாங்குவதென்ற 4.1 பில்லியன் ஒப்பந்தம். இதன் மூலம் அமெரிக்காவில் 22,000 பேருக்கு வேலை கிடைக்கும். மேலும் 6 பிறகு வாங்குவோம் என்று இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி கூறியுள்ளார்.

2. போயிங் நிறுவனத்தின் பயணிகள் போக்குவரத்து விமானமான பி 737-800 வகை விமானங்கள் 30ஐ வாங்க இந்திய தனியார் விமான .நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் ஒப்பந்தம்.

3. அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்திடமிருந்து நமது நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் இலகு ரக விமானத்திற்கு 107 எஃப்-414 இயந்திரங்கள் வாங்க ஒப்பந்தம். மதிப்பு 1 பில்லியன் டாலர்.

4. ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ள அனல் மின் நிலையங்களுக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து 6 எரிவாயு டர்பைன்கள் வாங்க ஒப்பந்தம். இதுமட்டுமின்றி, 5 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அமெரிக்காவின் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற ரிலையன்ஸ் ஒப்பந்தம்.

5. இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் வெஸ்டிங் ஹெவுஸ், ஜெனரல் எலக்டிரிக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து அணு உலைகளைப் பெற ‘தடையாகவுள்ள’ அணு விபத்து இழப்பீடு சட்டத்திலுள்ள விதிமுறைகளை முறைபடுத்த ஒப்புதல்.

இதுமட்டுமின்றி, அமெரிக்க நிறுவனங்கள் எதிர்பார்த்த மேலும் பல சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அதனை அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பி.ஜே. கிராவ்லி வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெளிவாகவே விளக்கியுள்ளார்.

“அதிபர் ஒபாமாவின் 3 நாள் இந்தியப் பயணம் அமெரிக்கா எதிர்பார்த்த அனைத்தையும் சாதித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒபாமா மேற்கொண்ட 3 நாள் பயணத்தில் இந்தியா பெற்றதென்ன?

இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து தனியார் பங்கேற்புடன் 10 பில்லியன் டாலர் தொகையுடன் உருவாக்க ஒப்புக்கொண்டுள்ள உள்கட்டமைப்பு நிதித் தொகுப்பு (Infrastructure Debt Fund), இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய ‘நீடித்த பசுமைப் புரட்சி’ (இது நமது விவசாயத்தை எந்த அளவிற்கு நோகடிக்கப் போகிறது என்பது போகப் போகத் தெரியும்), டெல்லியில் நோய் கண்டுபிடிப்பு மையம், எரிசக்தி (அணு சக்தி என்று புரிந்துகொள்க) ஒத்துழைப்பு ஆகியன.

இந்தியப் பயணத்தில் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்களால் அமெரிக்காவில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்று வந்துள்ளேன் என்று அமெரிக்கா திரும்பியதும் கூறப்போகிறேன் என்று ஒபாமா பேசியுள்ளார்.

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1011/09/1101109065_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்துக்கான அமெரிக்க ஆதரவு வேண்டியே இந்தியா இவ்வளவு ஒருதலைப்பட்சமான வியாபார ஒப்பந்தங்களுக்கு இணங்கியுள்ளது என நினைக்கிறேன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அயல்நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா குரல்கொடுக்க வேண்டும் - ஒபாமா

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32963

மியான்மரைக் குறித்தே இவ்வாறு பேசியுள்ளார். சிங்களத்தைக் குறித்தல்ல. இருந்தாலும் சீனாவின் நண்பனான பர்மாவுக்கு எதிராக பகிரங்கமாக இந்தியாவை கொம்பு சீவுவதன்மூலம் இந்திய-சீன பகையைவளர்க்க முயல்கிறார்கள்போல் திரிகிறது. பாதுகாப்பு கவுன்சிலுக்கான ஆதரவுகூட நிபந்தையுடன்கூடியதாகவே அமையவிருக்கிறது. அதாவது இந்தியா ஜனநாயகத்துக்கு எதிரான போக்குகளை பகிரங்கமாக எதிர்க்கும் பட்சத்திலேயே அமெரிக்க ஆதரவு சாத்தியம் எனக் கூறியிருக்கிறார். :rolleyes:

ஆயிரக்கணக்கில் எம்மூரில் மக்கள் கொல்லப்பட்டது இவர் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் மியான்மர் மட்டும் கண்ணைக் குத்துது..! இந்த ஜனநாயகம் என்கிற பெயரை வைத்துக்கொண்டு என்னமா வித்தை காண்பிக்கிறார்கள்..! :)

தமிழினப் படுகொலையாளர்களான இந்திய அரச பயங்கரவாதிகள் பாதுகாப்புச் சபையில் இடம் பிடிப்பது உலக அமைதிக்கு குந்தகமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படாமல் போன அமெரிக்காவுக்கு உதென்ன தேவையில்லாத வேலை? :D சீனாவுக்கு எதிரா கொம்பு சீவுறன் எண்டு கடைசியில் இந்தியனிட்ட மாட்டப் போகினம்..! :lol:

இந்தியனா...... மண்ணாங் கட்டி. எல்லாம் இத்தாலிக்காரி செய்யுற வேலை.

.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.