Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அல்லலுறும் போராளிகள், பொதுமக்களின் புனர்வாழ்வே முக்கிய தேவை – நேர்டோ

Featured Replies

தலைவனின் சொல்லுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களின் வழித் தோன்றல்களான போராளிகள் இன்று திக்குச்திசை தெரியாமல் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்தப் போராட்டத்தைத் தாங்கிப்பிடித்த மக்கள் வாழ்வதற்கு வழிதெரியாமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அடிப்பைட வாழ்விற்கான தேவைகளை நிறைவேற்றுவதே எமது தற்போதைய தலையாய கடமை என்றும், இவர்கள் புலம்பெயர்ந்த உறவுகளை தங்கள் வாழ்வின் விடிவெள்ளிகளாக நினைத்துக் காத்திருக்கும் இவ்வேளையில், நாம் இவர்களது அன்றாட வாழ்விற்குத் திரும்ப உதவி செய்யாவிட்டால் நாம் தமிழராய் பிறந்ததில் பலனேயில்லையென நேற்று நடைபெற்ற நேர்டோக் கனடாக் கிளையின் அங்குரார்பனக் கூட்டத்தில் திரு. இன்பம் பேரின்பநாயகம் குறிப்பிட்டார்.

கனடாவிலுள்ள தமிழுணர்வாளர்கள் சுமார் 20 பேர் கூடி ஆரம்பிக்கப்பட்ட நேர்டோக் கனடாக் கிளையின் கூட்டத்தில் மேலும் அவர் பேசுகையில், 30 ஆண்டு காலம் நாங்கள் எதற்காக உழைத்தோமோ அதன் எச்ச உழைப்பு அந்த மக்கள் நிர்கதியாகாமல் மீண்டும் தங்களது வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உதவுவதேயாகும். இதனை நாங்கள் செய்யத் தவறுவோமாயின் இறைவன் எம்மை மன்னிக்க மாட்டான் எனவும் தெரிவித்தார்.

எந்தவித அரசியல் அபிலாசைகளையும் தற்போதைக்கு முன்னிறுத்தாமல் தற்போது முகாம்களிலும், வெளியிலும் வாடிக் கொண்டிருக்கும் போராளிகள் அவர்களது குடும்பங்கள் மற்றும் பொதுமக்களிற்கு எம்மால் இயன்றதைச் செய்வதே இந்த அமைப்பின் குறிக்கோள் எனத் தெரிவிக்கப்பட்டதோடு, இலங்கையின் யதார்த்த நிலையை உணராமல் அல்லது எமது ஆயுதப் போராட்டம் முழுமையாக தோற்கடிப்பட்டதை மறைத்து மக்களை மாயை நிலையில் வைத்திருப்பதானாது ஒரு ஆபத்தான நிலைக்கே ஒட்டுமொத்த தமிழினத்தையும் இட்டுச் செல்லுமெனத் தெரிவிக்கப்பட்டதோடு, அவ்வாறான உண்மையற்ற நிலையை ஏற்படுத்தி மக்களை மயக்க நிலையில் வைத்திருப்பது கொண்ட இலட்சியத்திற்காக தங்களை ஆகுதியாக்கிய போராளிகள், பொதுமக்களை அவமதிக்கும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகளாக நில ஆளுமையோடு விளங்கிய காலத்தில் கூட தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கை வங்கிகளில் கணக்கு வைத்து இலங்கை அரசில் பதிவு செய்தே இயங்கியது என்பது சுட்டிக்காட்டப்பட்டதோடு, எனவே தற்போது தமிழர் சக்தி அங்கு இல்லாத சூழலில் இலங்கை அரசின் அனுசரணையின்றிச் செயற்படுவது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என விளக்கப்பட்டது.

எனவே புலம்பெயர்ந்த தமிழுறவுகளின் உதவிக்காக ஏங்கிக் காத்திருக்கும் சிறையிலுள்ள மறறும் விடுதலை செய்யப்பட்ட போராளிகள், பொதுமக்களிற்கு தொழில்தொடங்குவதற்கு ஏதுவான பயிற்சிநெறிகளை வழங்குதல், கல்வி கற்கைக்கான உதவிகளை வழங்குதல், தொழில் உபகரணங்களை வழங்குதல், தாய் தந்தையற்ற பிள்ளைகளைப் பராமரித்தல் போன்றனவே இந்த அமைப்பின் தற்போதைய திட்டம் எனவும், இலங்கை அரசில் பதிவு செய்யப்பட்டுள்ள (பதிவுப் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளது) வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வு, புனரமைப்புக் கழகம் என அழைக்கப்படும் நேர்டோவின் கிளைகள் இதர நாடுகளிலும் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்பட்டு அந்த நாடுகளிலுள்ள தமிழுறவுகளின் உதவிகள் எமது மக்களிற்காகப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சிறைகளில் வாடும் போராளிகளின் மற்றும் பொதுமக்களின் தேவைகளிற்காக கனடிய தமிழ் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலமாக எமது மக்களின் வாழ்வாதரத்திற்குத் தேவையான நடவடிக்கை விரைந்து கவனிப்பதென்றும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நோர்டோவின் கனடாக் கிளையின் செயற்திட்டங்களைக் கவனிக்கவென திரு. இன்பம் பேரின்பநாயகம், திரு. ரெஜி சபாரத்தினம், திரு. சிறீரஞ்சன் கந்தையா, திரு. சாள்ஸ் தேவசகாயம், திரு. சக்தி சிவா, திரு. இராஜரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் இணைப்பாளராக விரைவில் தெரிவு செய்யப்படுவார்.

ஆம் இந்த செய்தி ஏற்கனேவே இணைக்கப்பட்டது. அலசப்பட்டது.

அல்லலுறும் போராளிகள், பொதுமக்களின் புனர்வாழ்வே முக்கிய தேவை – நேர்டோ கனடாக் கிளை 16.09.2010

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75480

  • தொடங்கியவர்

மன்னிக்கவும் கவனிக்கவில்லை நிருவாகம் இதனை கவனிக்கும் என நினைக்கிறேன் நேர்டோவுடன் இணைந்திருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமங்களா

கனகாலத்துக்கு பின்....

வாழ்த்துக்கள் தங்களது முயற்சிகளுக்கு...

ஒரு போராளிக்கோ ஒரு பொதுமகனுக்கோ தங்கள் உதவிகள் சென்றாலும் அதுவே இன்று தேவை.

தொடரட்டும் தங்கள் பணி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.