Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

320 தமிழர்கள் படுகொலை: நினைவுநாள் அனுஷ்டிப்பு

Featured Replies

கடந்த 10.11.1986 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலை என்ற தமிழ்க் கிராமத்தில் இலங்கை இராணுவத்தின் வாகனம் ஒன்றுக்குக் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தமிழர்களை இலங்கை இராணுவமும், சிங்களக் காடையர்களும் ஈவு இரக்கமின்றி கொன்றழித்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்ட 320 தமிழர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின்போது நடந்த இக்கொடுமையைப் புரிந்த சிங்கள இராணுவத்துக்கோ, காடையர்களுக்கோ எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதைத் தொடர்ந்துவந்த இலங்கை சுதந்திரக் கட்சியும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த மாதம் மட்டக்களப்பில் தனது சாட்சியங்களைப் பதிவுசெய்த நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூட இச்சம்பவம் குறித்து முறையிடப்பட்டும் அதை அவர்கள் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்.

மேற்படி படுகொலை நடந்தபோது, ஏராளமான இளைஞர்களை இராணுவம் அவர்களது பெற்றோர்களுக்கு முன்னாலேயே இழுத்துச் சென்றது. அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது இன்றுவரை தெரியாத நிலைதான். ஏராளமான இளம்பெண்களை சிங்கள இராணுவமும், காடையர்களும் சேர்ந்து கற்பழித்தனர். இவை ஒன்றுக்கும் எதிராக எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புல்லுமலையில் 1990 ஆம் ஆண்டில் மீண்டும் இராணுவ அட்டகாசம் தொடங்கியபோது அங்கிருந்த தமிழர்கள் இடம்பெயர்ந்து தமது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது இலங்கை பிரதி அமைச்சராக உள்ள கருணா அப்பகுதிக்கு விஜயங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இம்மக்கள் மீள்குடியேறுவதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் அவர் செய்வதாக இல்லை.

படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலிகள்....

  • கருத்துக்கள உறவுகள்

animated_candle.gif

கண்ணீர் அஞ்சலிகள்

இனப்படுகொலையால் கொல்லப்பட்ட மக்கள் மக்களுக்கு அஞ்சலிகள்!

தமிழர்கள் தம்மை தாமே ஆளும் நிலை வந்தாலொழிய இப்படியான நிகழ்வுகளை எதிர்காலத்திலும் தடுக்க யாராலும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையால் கொல்லப்பட்ட மக்கள் மக்களுக்கு அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கம்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.