Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த 2-20 வருடத்தில் ...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில விடயங்கள் மனத்தில் தோன்றுகிறது..அதை பகிர்ந்து கொள்வேம் என்று நினைக்கிறேன்..

சில விடயங்கள் பலரின்/ சிலரின் கவனத்தை இப்போது ஈர்க்கிறது.. ஒன்று அங்கு தாயகத்தில் நடக்கும் வன்முறை/ சிங்கள ஆக்கிரமிப்பு, மற்றது அங்குள்ளவர்களுக்கு இங்குள்ளவர்கள் செய்யும் உதவிகள்..மற்றது சர்வதேச ரீதியில் செய்யவிருக்கும்/ செய்யும் போர் குற்றம் போன்ற பணிகள் ...

பலவற்றிக்கு ஒரு வரி பதில் இல்லை..ஆனால் என்னவென்று பதில் சொல்லுவது என்றும் தெரிவதில்லை..ஒருமுறை நான் திண்ணையில் கதைக்கும் போதும் சொன்னேன், யாரும் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை..

எல்லாவற்றையும் எழுத முடியாது..ஆனால் மனதில்பட்டது... எங்கள் போராட்டம்/ தற்போதைய பயணப்பாதை 2 வழிகளில் பிரதானமாக செல்லவேண்டியுள்ளது..ஒன்று அங்குள்ள புனர்வாழ்வு -அதை யார் செய்வது என்பது பெரிய விடயம், மற்றது நீண்டகால தீர்வு...ஒன்றிற்காக ஒன்று காத்திருக்க தேவையில்லை..ஆனால் நடைமுறையில் இணைந்து செல்வதில் பல தடைகளை கொண்டுள்ளது..அடிப்படையில் ஒன்ருக்கொரு எதிரானது..பலவழிகளில்..ஆனால் அதை எப்படி கொண்டு செல்கிறோம் என்பதில்தான் எங்களது அடுத்த 10 / 20 ஆண்டுகள் தங்கியுள்ளது...

முன்பொருமுறை ஒரு நண்பர் சொல்லியது போல்/ கேட்டது போல் எது நடுநிலை என்று கேட்டமுடியாது ..எனது பார்வையில் எல்லோரும் எதிரி எல்லோரும் நண்பர் என்கிறது போல்தான் எமது பயணம். நலிந்த இனம் என்று வளையவும் வேண்டும், இணைந்து மிடுக்காகவும் வேண்டும்..

உதாரனதிர்ற்கு, நாடுகடந்த அரசு ?இந்தியாவுடன் நட்பாக இருக்க வேண்டும் என்றால், அப்படி ஒன்றை காட்டியே புலிகளை இன்னும் 2 தடை செய்யும் இந்தியா..அந்த நா கடந்த அ ..இந்தியாவுடன் இணைந்து செய்யரபடும்/ செயல்படுவாதாக மற்றவர்கள் ...

இங்கே எழுதும் சில கருத்துக்கள் ?யதார்த்தம் அற்றிருப்பினும் யாதர்த்தமானவையே..அதை இன்னார் சொல்லுவதாலோ அவர் அவரின் அரசியல் நிலைப்பாடுகுக்காயோ பிழை என்று சொல்லமுடியாது..

எங்கே முடிப்பது என்று தெரியவில்லை ...

கூடுதலானவர்களை இணைக்க கூடிய ஒரு பொறிமுறையை தாயகத்திலும், புலத்திலும் ஓரளவுக்கு தன்னும் இணைந்து செய்யற்படகூடியவாறு -செயற்பட்டால் ஏதும் நன்மை வரலாம்..

நாளை நேரம் இருந்தால் தொடருவேன் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை எழுத உடனடியாக எழுந்த காரணம், இலங்கையில் நடக்கும் விசாரணைகளில் பலரும் சொல்லும் கருத்துக்கள். அது தனியே மக்களின், தனித்தனி மனிதர்களின் அவலநிலைய சொல்லவில்லை..இறுதி கட்டங்களில் நடந்த- சொல்ல விரும்பாத செய்திகளையும் சொல்லுகிறது. அந்த விசாரணைக்குழு பலன் தருமா இல்லையா என்பது - யாருக்கும் தெரியாது..எடுத்த எடுப்பில் ஒன்றும் நடவாது என்றோ அல்லது எல்லாம் நடக்கும் ஒன்றோ சொல்லி யாரையும் திருப்பதிப்படுத்த (எனக்கு) தேவையில்லை..

இன்றைய BBC ஐ பார்த்தால் தயா மாஸ்டர் சொன்ன கருத்து வந்திருக்கிறது..இங்கே அவருக்கு பட்டமளிப்பு எல்லாம் கொடுத்தாயிற்று. எங்களுக்கும் அரசியல் எதிர்பார்ப்புகள்/ அனுமானங்கள் என்பதர்ருக்கும் இடையிலான தூரம் மிக அதிகம். முதல் பந்தியில் சொன்னது போல், எல்லோரும் பகைவர் எல்லோரும் நண்பர் என்பதுவே எங்கள் வாழ்க்கை கோலமாக வேண்டும். அது எப்படி என்பதுதான் புரியாத புதிர்.

புனர்வாழ்வும், அரசியல் தீர்வும் ஒன்றுக்கொண்டு நடைமுறையில் எதிரானவை என்று குறிப்டதர்ற்கு காரணம், சிலகாலத்திர்ற்கும் முன்பு யாழில் நேசக்கரம் சாந்தியால் இணைத்த இணைப்பும் அதற்ற்குரிய பதில்களும் விவாதங்களும். நான் அதில் பதில் போட விரும்பியும் அதில் போடவில்லை..பலரும் கருதியிருந்தார்கள் தேவையில்லாமல் அது நீண்டு/ பிழையான வகையில் செல்லுவதாக. அதில் உள்ள செய்தியில் ஒரு கருத்து - நான் விளன்கிக்கொண்டவகையில் ..அங்குள்ள மக்களுக்கு உதவ இங்குள்ள நிறுவனங்கள்/ அரசியல் ரீதியாக முன்னெடுப்புக்களை செய்யும் நிறுவனங்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை..

இரண்டு பக்கம் உள்ளது..அந்த பதிலிலேயே சொல்லப்படிருந்தது..அங்குள்ள தேவை இப்ப 2 கடகமும் 10 கோழிக் குஞ்சும் அல்ல..மாறாக நிரந்தர தீர்வு...மற்றைய பதில் நிரந்த தீர்வு வரும் போது அங்கு யாரும் இருக்கமாட்டார்கள்- அல்லது அது போன்ற கருத்து..

என்னை பொறுத்தவரையில்..வேறும் பலரும் ஏற்ர்ருக்கொள்ளக்கூடும்..இரண்டுமே யதார்த்தமானவை..ஒன்றோடு ஒன்று இணைந்தது..இங்கே இன்னுமொன்று இணைத்திருந்தார்கள் KP செய்யும் வேலைபற்றி..(அவர் செய்வது சரி, பிழை , சிங்கள அரசின் கைதி என்பவற்றுக்கு மேலால்...

நேசக்கரமோ , அல்லது அது போன்றா ஏதாவது ஒரு நிறுவனமோ பெரிய அளவில் உதவிகள் செய்ய வெளிக்கிடும் போது அதை கூடுதலாக கட்டுப்படுத்தும் உரிமையை இலங்கை அரசாங்கம் வைத்திருக்கும்..அதன் மூலம் தான் அடையவேண்டிய அனுகூலங்களை அது அடைந்தே தீரும்.... உதாரணத்துக்கு இப்போது KP சொல்லும் இனி ஆயுதப்போராட்டம்/ தனிநாடு சாத்தியபடாது என்ற கருத்துக்கள்.

மறுதலைக்கு, இங்குள்ள அமைப்புக்கள் உதவி செய்ய வெளிகிட்டாலும் இதே நிலைதான், உதரனத்திற்க்கு நா க அ, போராளிகளை விடுவிக்கிறோம், மக்களுக்கு உதவுகிறோம் என்றால், அரசுடன் சேர்ந்தே செய்யப்படவேண்டும்..அப்போது என்னவென்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்று பெயர் வைப்பது அல்லது செயற்படுவது..

அண்மையில் நடந்த உதாரணம், வைகோவின் (?நெடுமாறனின்) "புலிக்கு எக்காலமும் அழிவில்லை, ஆனால் தடையை நீங்குங்கள்" ..எங்களது வாதங்களில் உள்ள அடிப்படை பலவீனம் இதுதான்.. புலி அழிந்து போனது/ போயிற்று என்றால் அந்த தடை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? எங்களுக்கே தெரியும், நாங்கள் தடை நீக்கினால் மீள சேருவோம் என்று( அதனால் இந்தியாவிற்கு என்ன தீமை/ நன்மை என்று நான் ஏதும் சொல்லவில்லை) ஆனால் தெரிந்து கொண்டே விடயங்களை செய்து போட்டு மற்றவர்களை குற்றம் சாட்டுவது....

பிறகு வருகிறேன் ...

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நடந்த உதாரணம், வைகோவின் (?நெடுமாறனின்) "புலிக்கு எக்காலமும் அழிவில்லை, ஆனால் தடையை நீங்குங்கள்" ..எங்களது வாதங்களில் உள்ள அடிப்படை பலவீனம் இதுதான்.. புலி அழிந்து போனது/ போயிற்று என்றால் அந்த தடை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? எங்களுக்கே தெரியும், நாங்கள் தடை நீக்கினால் மீள சேருவோம் என்று( அதனால் இந்தியாவிற்கு என்ன தீமை/ நன்மை என்று நான் ஏதும் சொல்லவில்லை) ஆனால் தெரிந்து கொண்டே விடயங்களை செய்து போட்டு மற்றவர்களை குற்றம் சாட்டுவது....

பிறகு வருகிறேன் ...

முதலில் அழிந்த இயக்கம் என்பதை நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றோமா..?

நாம் ஏற்காத ஒன்றை

ஆசியாவின் வல்லரசை ஏற்கும் படி சொல்வது பொருத்தமா....?

நல்லதொரு தொடக்கம் தொடருங்கள்

மாற்றுக்கருத்து என்று ஒன்று உண்டென்றால்

அது இதனூடாக வரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.