Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசு தீங்கேதும் செய்யவில்லை என்றால் சரணடைந்த எம் பிள்ளைகள் எங்கே?

Featured Replies

ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010

யுத்தம் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் அரச படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு தாங்கள் எதுவும் செய்யவில்லையென அரசும் படையினரும் கூறுவது உண்மையென்றால் அவர்களிடம் சரணடைந்த எமது பிள்ளைகள் எங்கே? அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அரசு உடனடியாகக் கூறவேண்டும். இதற்குரிய பதிலை நல்லிணக்க ஆணைக்குழு பெற்றுத் தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை பிற்பகல் வடமராட்சி நெல்லியடி முருகன் கோவிலில் சாட்சியங்களைப் பதிவு செய்த போது அங்கு சாட்சியமளித்த காணாமல் போயுள்ள கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனொருவரின் தந்தை இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

தென்மராட்சி பளையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தவராசா என்பவர் தனது மனைவியுடன் வந்து இங்கு சாட்சியமளிக்கையில் எனது மகன் கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வடக்கில் கடும் மோதல் வெடித்தபோது பளையில் வீட்டில் தங்கியிருந்த மகன் மோதலுக்கிடையில் சிக்குண்டு அதன் பின் காணாமல் போனார். பின்னர் அவரை எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வன்னியிலிருந்து மக்கள் வெளியேறிக் கொண்டிருந்த போது அவரும் அந்த மக்களுடன் வெளியேறியதாகவும் 20 ஆம் திகதி ஓமந்தையில் இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்ததையும் பலர் கண்டு எமக்குத் தெரிவித்தனர். இதனையடுத்து அன்று முதல் நாம் அவரை சகல இடங்களிலும் தேடி வருகின்றோம்.

வவுனியாவில் படை முகாம்கள், அகதி முகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் தேடியதுடன் இது குறித்து அரச அதிகாரிகள், படை அதிகாரிகளிடமெல்லாம் விசாரித்தும் அவர் பற்றி எதுவித தகவலும் கிடைக்கவில்லையெனத் தெரிவித்தார்.

இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் சில்வா, உங்களது மகன் புலிகள் அமைப்பில் இருந்தாரா எனக் கேட்டார். இல்லையெனப் பதிலளித்த அவரது தந்தை தொடர்ந்து கூறுகையில் எங்கும் தேடியும் அவரைக் காணாததால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் சென்று இது பற்றிக் கூறி அவரை எப்படியாவது கண்டுபிடித்துத் தருமாறு கோரினோம்.

சரணடைந்த போராளிகள், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம்கள் குறித்து தங்களிடம் பதியப்பட்டுள்ளதாகவும் எனினும் தங்களிடம் பதிவு செய்யப்படாது பல முகாம்கள் இருப்பதாகவும் ஐ.சி.ஆர்.சி.யினர் எங்களிடம் தெரிவித்தனர்.

சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசோ படையினரோ எதுவும் தீங்கிழைக்கவில்லையென்றால் அவ்வாறானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அரசு கட்டாயம் கூற வேண்டும். இதற்கு ஆணைக்குழுவும் தங்களுக்கு உதவ வேண்டுமெனக் கேட்டார். இதற்குப் பதிலளித்த ஆணைக்குழுத் தலைவர் புனர்வாழ்வு முகாம்கள், தடுப்பு முகாம்கள் மற்றும் நலன்புரி நிலையங்கள் குறித்து ஆராய எமது ஆணைக்குழுவில் ஒரு பிரிவு உள்ளது. அந்தப் பிரிவு பதியப்பட்ட முகாம்கள், பதியப்படாத முகாம்கள் குறித்து ஆராய்ந்து விரைவில் இது குறித்து பதிலொன்றையும் பெற்றுத் தரமுயலுமென்றார்.

இங்கு சாட்சியளித்த முல்லைத்தீவைச் சேர்ந்தவரும் தற்போது பருத்தித்துறையில் தங்கியிருப்பவருமான இளந்தாயான ரஞ்சிதன் ரஞ்சினி என்பவர் அழுதவாறு கூறுகையில் 2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி நானும் எனது கணவனும் இரு சிறு பிள்ளைகளும் எனது சகோதரி, அவரது கணவன் மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுடன் முள்ளிவாய்க்காலூடாக வந்து கொண்டிருந்த போது கடும் ஷெல் தாக்குதலால் எனது கணவனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. அது போல் எனது சகோதரியும் அவரது கணவனும் படுகாயமடைந்தனர். மிக மோசமாகத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்ததாலும் எனது கணவனைத் தூக்கி வர முடியாததாலும் நான் எனது இரு பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வந்து விட்டேன்.

இதேநேரம் எனது சகோதரியும் அவரது கணவனும் படுகாயமடைந்து அவ்விடத்தில் வீழ்ந்ததை கண்டேன். அவ்வேளையில் அவர்களது மூன்று பிள்ளைகளும் அவ்விடத்திலிருந்து பிரிந்து சென்று விட்டனர். பின்னர் அந்த மூவரையும் முகாமிலிருந்து கண்டு பிடித்து தற்போது என்னுடன் தங்கவைத்துள்ளேன். அதேநேரம் எனது கணவன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதை கண்ட பலர் அது பற்றி எனக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் இன்று வரை அவரையும் எனது சகோதரி மற்றும் அவரது கணவரையும் காணவில்லை. அவர்களை எப்படியாவது கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

My link

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.