Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது நடிகைக்கு எதிரானது அல்ல ,அசின் விஷயத்தில் ஈழ மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அசின் Asinநடித்த காவலன் படத்தை புறக்கணிக்கும்படி அதில் கேட்டுக் கொண்டிருப்பதால் உலகம் முழுக்க இப்படம் குறித்த சலசலப்பு எழுந்துள்ளது. இது விஜய் நடித்த படம் என்பதையும் தாண்டி அசின் முன்னிலைப்படுத்தப்படுவதால் எழுந்துள்ள இந்த வினைக்கு எதிர் வினை என்பது ரிலீஸ் நேரத்தில் தெரியும். இப்போதைக்கு அந்த அறிக்கை அப்படியே உங்கள் பார்வைக்கு-

அன்பார்ந்த உலகத் தமிழ் மக்களேஞ்

வெகு விரைவில் வெளிவர இருக்கும் விஜய் அசின் நடித்த காவலன் படத்தை உலகமெங்கும் புறக்கணிக்குமாறு உரிமையோடு வேண்டும் அதே நேரம் அதற்கான வலுவான காரணங்களையும் முன்வைக்க விரும்புகின்றோம்.

முதலில் படப்பிடிப்புக்கு மட்டுமே இலங்கை சென்றேன் என்றார் அசின் பின்பு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவே சென்றேன் என பல்டியடித்தார். எல்லாவற்றையும் விட கொடுமையான விடயம் எதுவெனில் ஒருவருக்கு கண் சிகிச்சை முடிந்த பின் நீங்கள் முதலில் யாரை பார்க்க விரும்புகின்றீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் அசினை மட்டுமே பார்க்க விரும்புகின்றேன் என அவர் கூறியதாக அசின் பேட்டிகளில் கூறினார்.

இதில் இருந்து சிங்களம் செய்ய நினைக்கும் பரப்புரை என்னவென்று உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும்.

ஆம் தமிழினத்தை அனைத்து விதமான போதைக்குள்ளும் வைத்திருக்க விரும்பும் சிங்களம் தன் முதற் பார்வையே நடிகைமேல்தான் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு தமிழர்கள் சினிமா பைத்தியங்கள் எனவும் அதை விடுதலைப்புலிகள் தடுத்ததாகவும் பிரச்சாரங்கள் செய்கின்றார்கள்.

இது ஒரு நடிகைக்கு எதிரான பிரச்சாரம் அல்ல பேரினவதாத்தின் தந்திரத்திற்கு எதிரான பிரச்சாரம்.

சற்று யோசித்துப் பாருங்கள் பல பல கோடிகள் திட்டங்களோடும் உதவிகளோடும் சென்ற இந்திய குழுவோடு கூட ஜ திருமாவளவன்இ கனிமொழிஇ பாலு போன்றோர் சென்ற போது ஸ ஜனாதிபதியோ அல்லது பிரதமரே ஏன் முதலமைச்சர்கூட அவர்களோடு செல்லவில்லை.

ஆனால் இந்திய அளவில் கூட புகழ் பெறாத ஒரு நடிகையோடு அவர் சென்ற இடம் முளுவதும் அந்த நாட்டின் முதற் பெண் அதாவது ஜனாதிபதியின் மனைவி உடன் சென்று வந்த்தன் மர்மம் என்ன?.

அசினோடு சென்ற சல்மான் கானுக்கோ அல்லது உண்மையில் உதவிகள் செய்த விவேக் ஓபராய்க்கோ கூட இந்த கவுரவங்கள் வழங்கப்படவில்லை.

அதோடு அசினால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் என கூறப்படுவோர்க்கு 10க்கும் மேற்பட்டவர்களுக்கு முளுமையாக கண் பார்வை பறிக்கப்பட்டுள்ளது சிகிச்சை எனும் பெயரால். சிறு வலி என்றாலும் கால்களை அகற்றியும் கைகளை அகற்றியும் தமிழர்களை முடவர்களாக்கியுள்ளது சிங்கள அரசு.

இவைகள் அனைத்தும் சிங்கள அரசால் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கையே தவிர வேறில்லை. அதற்கு துணைபோகும் அனைவரையும் புறக்கணிப்போம்.

இப்பட புறக்கணிப்பு ஒரு பாடமாக அனைவருக்கும் அமைய வேண்டும். ஏற்கனவே பல கடிதங்ளை தமிழ் நாட்டின் பல திரைப்பட சங்கங்களுக்கு அனுப்பியிருந்தோம் அசின் மன்னிப்பு கோருவார் என அவர்களால் சொல்லப்பட்டாலும் இதுவரை அப்படி எதுவும் நிகழவில்லை மாறாக மேலும் திமிராகவே காணப்பட்டார் அசின் உதவி செய்யவே சென்றேன் என்றவர் இயக்குனர் படப்பிடிப்பு இலங்கையில் வைத்த்தற்கு நான் மன்னிப்பு கோர மாட்டேன் என்றார்.

படப்பிடிப்புக்கு செல்பவர்களுக்கு ஜனாதிபதியின் மனைவியே உதவி செய்வரா? ஆச்சரியமான நாடுதான் இலங்கை. இலங்கை அரசின் ஊதுகுழல்கள் அனைவரையும் துடைத்தெரிவோம்.

- தமிழ் சினிமா

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கந்தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தடியில் உயிரோடு அகப்பட்டிருக்கும் சுரங்கத்தொளிலாலர்களை அந்தரிக்கும் உலகம் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்ட 50000 மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

இதே மனித கொலையாளிகளுடன் உலகம் உறவாடுகிற கேவலமான நிலையினை என்ன சொல்வது

இதில நம்வர்கள் போக்கு மிகவும் அருவருக்கத்தக்கது பத்திரிகையளர்களை போட்டு தள்ளும் நாட்டில் அவசரமான சர்வதேச எழுத்தாளர் மாநாடு? சரி எழுத்தாளர் வேறு பத்திரிகையாளர் வேறு என்ற விவாதம் சரி, எழுத்தாளர்களின் திடீர் பிரச்சனை என்ன பேனா மை முடிச்சிட்டுதா?

தமிழர்கள் என்று பாராதீர்கள் மனிதர்கள் என்று பாருங்கள் கூர்ப்பின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் மிருகங்களுடன் மனிதர்களை இணக்கமாக வாழ சொல்லும் பிற்போக்குவதிகளை பாருங்கள் அப்படி அந்த மக்கள் seytha thavru என்ன koodaathai kaliththuviddu nallathai சேர்த்து கொண்டதா?

முதலில் புறக்கணிக்க பட வேண்டியவர்கள் உங்களுக்குள்ளேயே இருந்து உங்களை அளிக்கும் குருவிச்சைகளை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.