Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாவீரர் நாளும் தமிழீழ விடுதலைப் புலிகளும்

Featured Replies

மாவீரர் நாளென்பது தமிழர்களைப் பொறுத்தவரை ஓர் எழுச்சிகரமான நாள். 1989 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் இந்நாள் ஒரு புனித நாளாகவே அனைவராலும் நினைவுகூரப்பட்டு வருகிறது.

தமிழர்களை மட்டுமன்றி உலகத்தையும் இந்நாள் எதிர்பார்ப்போடு காத்திருக்க வைத்தது. தமிழீழத் தேசியத்தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் ஆற்றும் உரையே இதற்குரிய முக்கிய காரணம். ஆண்டுக்கொருமுறை அவர் ஆற்றும் அந்த உரை மாவீரர் நாளின் மகுடமாக விளங்கியது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் தாயகத்தில் நிகழ்ந்த அனர்த்தத்தின் பின்னர் நிலைமை மாறிவிட்டது. கடந்த ஆண்டு தேசியத் தலைவரின் உரை வெளிவரவில்லை. இவ்வாண்டும் அவரின் உரை வெளிவரும் வாய்ப்பில்லை என்ற சூழலே நிலவுகிறது. கடந்த ஆண்டு மாவீரர் நாளுக்கான உரையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகமே வெளியிட்டது. வழமைபோல் புலிகளின் குரல் வானொலி வழியாக அவ்வுரை ஒலிபரப்பப்பட்டது. இவ்வாண்டும் அதுதான் நிலைமை.

இந்நிலையில்தான் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்களும் வியாக்கியானங்களும் தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதுவும் குறிப்பாக மாவீரர் நாள் அறிக்கை தொடர்பான கருத்தே சர்ச்சைக்குரிய வகையில் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இக்கருத்துத் தொடர்பான விமர்சனத்தையே இக்கட்டுரை முன்வைக்கிறது.

நடைபெறவிருக்கும் மாவீரர் நாள் நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் வெளியிடப்பட்டு ஒலிவடிவில் வழங்கப்படவிருக்கும் அறிக்கையைத் தவிர்க்கும் நோக்கத்தைக் கொண்ட கருத்துக்கள் சிலரால் முன்வைக்கப்படுகின்றன. “முந்தியெண்டால் தலைவரின்ர உரை வரும். இப்ப அது இல்லைத்தானே? இப்ப ஏன் உவை வெளியிடுற அறிக்கையை நிகழ்வில விடுவான்? நாங்கள் அதுகளை விட்டிட்டு வழமைபோல நிகழ்வைச் செய்வம்” என்கிற பாணியில் இக்கருத்துக்கள் அமைகின்றன.

இங்கே தனியே தலைவரின் அறிக்கை, இயக்க அறிக்கை என்பதற்கப்பால், எமது போராட்டத் தொடர்ச்சியைக் கவனிக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வகிபாகத்தை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக ‘மாவீரர்கள்’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படும்போது புலிகள் அமைப்பை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கூட. அவ்வமைப்பின் மூலமே அவர் போராட்டத்தை முன்னெடுத்தார். அவ்வமைப்பின் மூலமே ஈழத் தேசிய இனத்தை வழிநடத்தினார். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமையிலும் வழிகாட்டலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பே எமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது.

எனவே ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு முதன்மையானது மட்டுமன்றி அதன் இருப்பும் தொடர்ச்சியும் இன்றியமையாதது.

மேலும், மாவீரர்கள் என்பவர்கள் தனிமனிதர்களல்லர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அவர்களைப் பிரித்துப் பார்க்க முடியாது. மாவீரர்கள் எமது மக்களின் குழந்தைகள், அவர்கள் எமது மக்களுக்குச் சொந்தமானவர்கள் என்பதற்குமப்பால் அவர்கள் இயக்கத்தின் சொத்து என்பது மறுக்க முடியாத உண்மை.

மாவீரர்கள், தமது வீட்டிலிருந்தபடியே திடீரென எதையாவது தூக்கிக் கொண்டுபோய் எதிரியோடு மோதி களச்சாவடையவில்லை. அல்லது தாம் நினைத்த நினைத்தபடி போராடவில்லை. அவர்கள் முதலில் அமைப்பில் இணைந்தார்கள், பயிற்சி பெற்றார்கள், கொடுக்கப்பட்ட கடமையைச் செய்தார்கள், தலைமையின் வழிகாட்டலின்படி செயற்பட்டார்கள். விடுதலைப் பயணத்தில் தம்முயிரை ஈந்தார்கள்.

எமது போராட்டம் அமைப்பு ரீதியான போராட்டம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாடே எமது போராட்டமாக அமைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த அமைப்பிலிருந்தே மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர். (த.வி.பு. அமைப்புக்கு வெளியேயிருந்து இணைத்துக்கொள்ளப்பட்ட மாவீரர்களை நாம் புறக்கணிக்கவில்லை. அமைப்பை முக்கியத்துவப்படுத்த வேண்டிய தேவையைச் சொல்ல வரும் இக்கட்டுரையில் அச்சிறு எண்ணிக்கை தவிர்க்கப்படுகிறது)

ஆகவே ‘மாவீரர் நாள்’ எனும்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை யாரும் புறந்தள்ளிவிட முடியாது. தமிழீழத் தேசியத் தலைவரின் உரை வெளிவரமுடியாத சூழ்நிலையில் அவ்வமைப்பின் சார்பில் கட்டாயம் ஓர் அறிக்கை வெளிவந்தே ஆகவேண்டும். ஏனென்றால் இது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கை விளக்கவுரை வெளிவரும் நாள். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உரைகள்கூட அவரின் தனிப்பட்ட கருத்துக்களாக கருதப்படுவதில்லை, அவை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கை விளக்கவுரைகளே.

இந்நிலையில்தான் மாவீரர் நாளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிக்கை கட்டாயம் ஒலிக்க விடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாம் ஆணித்தரமாகச் சொல்ல வேண்டிய நிலையிலுள்ளோம். அந்த அமைப்பு தாயகத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் அதன் இருப்பைம் தொடர்ச்சியையும் பேண வேண்டிய கடமை தமிழர்கள் அனைவருக்குமுண்டு. அவ்வமைப்புக்குரிய வகிபாகத்தைப் பேணவும், மதிக்கவும் அனைவரும் முன்வர வேண்டும். புலிகள் அமைப்பைப் புறந்தள்ளி ஒரு மாவீரர் நாள் நிகழ்த்தப்பட வேண்டிய தேவையில்லை, அப்படி நடக்கவும் கூடாது. அது மாவீரர்களை அவமதிப்பதும் கூட.

இதிலே இன்னுமொரு முக்கிய விடயமுள்ளது. இவ்வாறு புலிகள் அமைப்பின் அறிக்கையைப் புறந்தள்ளி மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறுவதென்பது, அவ்வமைப்பின் தலைமைத்துவத்தை நிராகரிப்பதற்கு ஒப்பானது. புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்றோ, மக்கள் அவ்வியக்கத்தின் தலைமையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றோ உலகமும் சிறிலங்கா அரசாங்கமும் செய்து கொண்டிருக்கும் பரப்புரையை நாமே உறுதி செய்வதைப் போலாகிவிடும்.

உண்மையில் மக்கள் இயக்கத்தைப் புறந்தள்ளுவதென்பது வேறு, விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலர் புறந்தள்ளுவதென்பது வேறு. அந்த மிகச்சிலர் நிகழ்வு ஒழுங்குபடுத்தாளர்களாக இருந்துவிடும் காரணத்தாலேயே அது ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக வெளியுலகுக்குக் காட்டப்படும் அபாயத்தையே நாம் இங்குச் சுட்டுகிறோம்.

அத்தோடு இன்னொரு விடயத்தையும் இந்தக் கருத்தாளர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். மாவீரர் நாளில் பல அறிக்கைகள் வெளிவருகின்றன, எனவே இந்தக் குழப்பங்களில் தலைபோடாமல் எந்தவொரு அறிக்கையையும் ஏற்றுக்கொள்ளாமல் பேசாமலேயே இருப்பது நலம் என்பதே அது.

உண்மையில் இவ்வாறு பேசாமலிருப்பது என்பதே அந்தக் குழப்பவாதிகளை ஊக்குவிக்கும் ஒரு செயல்தான். எமது எதிரியால் திட்டமிடப்பட்டுத்தான் இப்படியான குழப்பகரமான அறிக்கைகள் பல்வேறு தரப்புக்களால் தயாரிக்கப்பட்டு வெளிவருகின்றன. எதிரியின் நோக்கமே, இப்படியான அறிக்கைகளால் உண்மையான அறிக்கையை மக்கள் புறக்கணிக்கச் செய்ய வேண்டுமென்பதே. ஆக, எதையும் கவனிக்காமல் பேசாமல் இருப்போம் என்பவர்கள் உண்மையில் எதிரியின் விருப்பத்தையே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். சரியானவர்களை உய்த்துணர்ந்து கொள்வதொன்றும் கடினமான காரியமன்று. ஆனால் ‘அறிக்கையைப் புறந்தள்ளும்’ தமது விருப்பத்தை நியாயப்படுத்த பெரும்பாலானவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு சாட்டுத்தான் இந்த ‘பல அறிக்கைகள் வெளிவரும்’ கருத்தாக இருக்கக் கூடும்.

தமது வாழ்வையே எமக்காக அர்ப்பணித்து மரணித்த அந்த மாவீரர்களை நினைவுகூரும் இந்த எழுச்சிநாளில் எமக்கிடையிலான முரண்பாடுகளையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும் ஒதுக்கி வைத்து ஓரணியில் திரண்டு நிற்போம். எந்த இலட்சியத்துக்காக இம்மாவீரர்கள் போராடினார்களோ அதே இலட்சியத்தை எமது நெஞ்சில் சுமந்து எமது தமிழீழத் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் உறுதியாக இறுதிவரை பயணிப்போம்.

http://pooraayam.com/special-articles/1569-2010-11-26-22-44-09

உங்களைப் பெற்றவர்,

உங்களின் தோழிகள்,

உறவினர் வந்துள்ளோம்! - அன்று

செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்!!!

.........

.........

வல்லமை தாரும் என்று,

உங்களின் வாசலில் வந்துமே வணங்குகிறோம்!

சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்

சந்ததி தூங்காது – எங்கள்

தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்

தாகங்கள் தீராது!!!

...................

எந்த நிலைவரும் போதிலும்

நிமிருவோம் உங்களின்,

நினைவுடன் வென்றிடுவோம்.!!!

இந்த 21ஆம் நூற்றாண்டில் தமது அடிப்படை உரிமைகளை கேட்டு ஒரு இனம் போராடுகின்றது என்றால் அந்த இனத்தை அடக்க அழிக்க எண்ணும் இனம் இன்னும் 12 வது நூற்றாண்டில் தான் வாழுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.