Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன

* Sunday, December 5, 2010, 7:43

கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

பின்வரும் இராணுவ அதிகாரிகள் சரணடைந்தவர்கள் மீதான படுகொலையை மேற்கொண்டவர்களாவார்கள்.

59 ஆவது படையணியுடன் இணைந்து இயங்கிய சிறப்பு படை றெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரி கேணல் அதுலா கொடிபிலி, 1 ஆவது சிறப்புப்படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ரணசிங்கா, 2 ஆவது சிறப்பு படை பற்றலியன் கட்டளை அதிகாரி மேஜர் விபுலதிலக இகலகே.

சிறப்பு படையின் கொல்ஃப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகரா, றோமியோ கொம்பனியை சேர்ந்த கப்டன் கவின்டா அபயசேகர, எக்கோ கொம்பனியை சேர்ந்த மேஜர் கோசலா விஜகோன், டெல்ரா கொம்பனியை சேர்ந்த கப்டன் லசந்தா ரட்னசேகரா.

மேற்கூறப்பட்டவற்றில் கோல்ஃப் மற்றும் றோமியோ கொம்பனிகள் 1 ஆவது சிறப்பு படை பற்றலியனின் கீழ் செயற்பட்டிருந்தன. எக்கோ மற்றும் டெல்ரா கொம்பனிகள் 2 ஆவது சிறப்பு படை பற்றலியனை சேர்ந்தவை.

டிவிசன் (படையணி) தர அதிகாரிகள்:

மேஜர் ஜெனரல் பிரசன்னா டீ சில்வா -55 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி

மேஜர் ஜெனரல் சிவேந்திர சில்வா -58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி

மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா-53 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி

கேணல் ரவிப்பிரியா -எட்டாவது நடவடிக்கை படையணியின் கட்டளை அதிகாரி

மேஜர் ஜெனரல் சாகி கலகே – 59 ஆவது படையணி கட்டளை அதிகாரி.

மேஜர் ஜெனரல் சந்திரசிறீ – முன்னாள் யாழ் மாவட்ட கட்டளை அதிகாரி – பெருமளவான தமிழ் மக்களை கடத்தி படுகொலை செய்ததில் பங்கு உண்டு.

அரச தரப்பில போரியல் குற்ற்களை மேற்கொண்டவர்கள்:

அரச தலைவர் மகிந்த ராஜபக்சா

அரச தலைவர் செயலாளர் லலித் வீரதுங்கா

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சா

சிறப்பு ஆலோசகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சா

வெளிவிவகார செயலாளர் பாலித கோகன்னா

tamilthani.com

சகல குடியியல் உரிமைகளும், சொத்துக்களும் பறிக்கப்பட்டு, கடூழிய ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

57 வது படைப்பிரிவின் தளபதியாக இருந்த ஜெகத் டயசின் பெயர் ஏன் விடுபட்டு இருக்கிறது.... ???

எங்க 'பொன்ஸ்ஸின்' பெயரை காண இல்லை?? ஏன் அவர் சேருமதி இல்லையோ? அல்லது போர் குற்றம் புரிய இல்லையோ???

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஹெகலிய றம்புக்வெல இல்லையா? அவர் தான் வாய்கூசாமல் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுபவர். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

எங்க 'பொன்ஸ்ஸின்' பெயரை காண இல்லை?? ஏன் அவர் சேருமதி இல்லையோ? அல்லது போர் குற்றம் புரிய இல்லையோ???

அவர்ட வாழ்க்கை சிறைச்சாலையோட முடிய போக்குது அது தான் அவர்ட பெயர் இதிலை இல்லை :D:D

அவர மிகிந்தா போட்டு தள்ள ,பிறக்கு சிங்கள மக்கள் மகிந்தாவை வெறுக்க அப்படியே அவைக்குள்ள அவை சண்டை பிடிக்க , நாங்கள் இங்காலா எங்கட காரியத்தை பார்த்து கொன்டு போய்க்கிட்டெ இருக்கனும் :D:D

ஒரு கல்லில இரண்டு மாங்காய் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.