Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழில் தேசிய கீதம் பாட தடை இல்லை! அரசு அறிவிப்பு

Featured Replies

தமிழில் தேசிய கீதம் இசைக்கின்றமைக்கு தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவே இல்லை அரசு இன்று அறிவித்து உள்ளது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார, பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த ஆகியோர் இதனை அறிவித்து உள்ளார்கள்.

இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று இவர்கள் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழில் தேசிய கீதத்துக்கு தடை விதிக்கின்றமை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டதா? என்று தமிழ்.சி.என்.என் அமைச்சர் வாசுதேவவிடம் வினவியது.

மேலதிகமாக எதுவும் சொல்ல முடியாது என்றார் இவர். இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைக்காமல் தடுக்கப்பட்டு இருக்கின்றனர் என்று மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வீ. ஆனந்தசங்கரி.

பொது வைபவம் ஒன்றில் தமிழில் தேசிய கீதம் பாட தயார் நிலையில் வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட பாடசாலை ஒன்றை சேர்ந்த மாணவர்களை இராணுவ அதிகாரி ஒருவரால் சில மாதங்களுக்கு முன் பாட விடாமல் தடுத்து விட்டார் என்று சங்கரி நினைவு கூர்ந்தார்.

கிளிநொச்சி தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் ஒன்று-இந்நிலையில் இங்கு சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக இராணுவம் உள்ளது- இந்நடை முறை அங்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார் இவர்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் நமோ நமோ தாயே என்று தமிழில் தேசிய கீதம் இருந்து வருகின்றது. 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசமைப்பில் சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தாலும் கூட நடைமுறையில் தமிழிலும் இசைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்ப் பாடசாலைகளில் கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகள் எவையும் இல்லாமல் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்கிறார் அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்.

ஆர் பிறேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றுக்கு வருகை தந்திருந்தார் என்றும் அவ்வைபவத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது என்றும் இவர் தெரிவித்தார்.

tamilcnn.

சிங்களத்துக்கு சில நாட்களுக்குள்ளேயே இதுவும் இன்னொரு அடிதான்!!! ... தமிழில் பாட தடையென செய்திகள் வந்ததும் கொழும்பு நாளிதல்களிலேயே!! ... அதனை அடுத்த் சர்வதேச செய்தி நிறுவனங்கள்/பத்திரிகைகள் குக்கியத்துவப்படுத்தி ... மீண்டும், தமிழர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள் ... என செய்திகளை வெளியிட்டன!!! .. பல தரப்புகளில் இருந்து கிளம்பிய எதிர்ப்புகளை சமாளிக்கவே, அப்படி ஒன்றும் நிகழவில்லை என தற்போது கூறுகிறது!!!

ஆனால் தமிழர் தாயகமெங்குமில் ... இனி சிங்களத்தில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை பாட வேண்டியது ... இனி எழுதாத சட்டம்!!!

மீண்டும் ... மீண்டும் ... சிங்களம், எமக்கு தெளிவாக கூறுகிறது, நாங்கள் யாரென்று!! ... உணரத்தான் பின் நிற்கிறோம்!!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78909

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக இவ்விடையத்தையிட்டு தமிழர்கள் சிலரும் மற்றும் சந்தர்ப்பவாத ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகள் உட்பட்ப ஏனைய தமிழ் அரசியற் கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் தலையிலை அடித்து மணல் புழுதியில பிரண்டு சன்னதம் கொள்ளுகினம். தாராளமாக சிங்களத்திலை மட்டும் அனைவரும் பாடட்டும் பிரச்சனையில்லை. சிறீலங்கா என்பது இலங்கைத் தீவினில் உள்ள இன்னமொரு நாடாகிய தமிழ்ஈழத்தினது அயல்நாடு அந்த நாட்டுக்குச் சொந்தமான தேசியகீதம் அந்நாட்டு மக்களது சொந்த மொழியில இயற்றப்பட்டு காலாகாலமாக அதைக் கௌரவப் படுத்தியும் வந்துள்ளார்கள் இருக்கட்டுமே, தமிழீழதேசம் தற்போது ஆக்கிரமிப்பாளர்களாகிய சிறீலங்கா தேசத்தால் இற்றைக்கு அரைநூற்றாண்டு காலமாக அடிமைப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த காலங்களில் எப்போதும் தமிழ்பிரதேசங்களில் நாம் அந்நாட்டின் தேசியகீதத்தைப் பாடியதோ அன்றேல் மரியாதைசெய்ததோ கிடையாது. தற்போதுமட்டுமென்ன அதைப்பற்றி நாம் அக்கறைப்படுவது. சிங்களத்திலேயே இருந்துவிட்டுப்போகட்டும் அப்படியிருந்தால்தான் நாம் மனப்பாடம் செய்யாது வெறுப்படினேயே எமது சுதந்திரத்தை அடையும் காலம்வரை முணுமுணுக்கலாம்.

எழுஞாயிறு ...

... தமிழ்நெற் இச்செய்திக்கு கொடுதத முக்கியத்துவம் தெரியுமோ???... இல்லை தமிழ்நெற்றும் சந்தர்ப்பவாததனமாக பிரசுரித்ததாக சொல்லப் போகிறீரோ???

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33210

... 60 வருசமாக அழிக்கிறான் ... அப்ப நாம் ஏன் இன்னும் ஊர்வலம், போராட்டம் என புலமெங்கும் நிற்கிறம்???? .... அழிப்பது உலகத்திற்கு தெரியாதா??? .... ஐ.நாவிற்கு மனு ... ஏன்?... ஐ.நாவிற்கு தெரியாதோ??? ...................

... எமக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் அரசியலாக்குவோம்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் தேசிய கீதம் இசைக்கின்றமைக்கு தடை விதிக்கும் தீர்மானம் எதுவும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவே இல்லை அரசு இன்று அறிவித்து உள்ளது.

தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயகார, பெற்றோலிய துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த ஆகியோர் இதனை அறிவித்து உள்ளார்கள்.

இது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று இவர்கள் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழில் தேசிய கீதத்துக்கு தடை விதிக்கின்றமை தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டதா? என்று தமிழ்.சி.என்.என் அமைச்சர் வாசுதேவவிடம் வினவியது.

மேலதிகமாக எதுவும் சொல்ல முடியாது என்றார் இவர். இதே நேரம் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைக்காமல் தடுக்கப்பட்டு இருக்கின்றனர் என்று மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வீ. ஆனந்தசங்கரி.

பொது வைபவம் ஒன்றில் தமிழில் தேசிய கீதம் பாட தயார் நிலையில் வந்திருந்த கிளிநொச்சி மாவட்ட பாடசாலை ஒன்றை சேர்ந்த மாணவர்களை இராணுவ அதிகாரி ஒருவரால் சில மாதங்களுக்கு முன் பாட விடாமல் தடுத்து விட்டார் என்று சங்கரி நினைவு கூர்ந்தார்.

கிளிநொச்சி தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் ஒன்று-இந்நிலையில் இங்கு சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று விடாப்பிடியாக இராணுவம் உள்ளது- இந்நடை முறை அங்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்று தெரிவித்தார் இவர்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் நமோ நமோ தாயே என்று தமிழில் தேசிய கீதம் இருந்து வருகின்றது. 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசமைப்பில் சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்தாலும் கூட நடைமுறையில் தமிழிலும் இசைக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்ப் பாடசாலைகளில் கடந்த காலங்களில் அரசியல் தலையீடுகள் எவையும் இல்லாமல் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வந்திருக்கின்றது என்கிறார் அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன்.

ஆர் பிறேமதாஸ ஜனாதிபதியாக இருந்தபோது பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றுக்கு வருகை தந்திருந்தார் என்றும் அவ்வைபவத்தில் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டது என்றும் இவர் தெரிவித்தார்.

tamilcnn.

ஐசே ஆனந்தசங்கரி!

கிளிநொச்சியைலை மாமரம் நட்டு.... அதுமரமாய் வளந்து....அதிலை பூப்பூத்து...பிஞ்சுபுடிச்சு....காயாகி கனியாகி அதின்ரை கொட்டையை சூப்புறத்துதானே உம்மடை இலட்சியம்.

முதல்லை வந்தவேலையை பாரும்.

போகப்போக கூத்து இன்னும் இருக்கு......அப்ப ஆரை நினைப்பாயெண்டு எனக்குத்தெரியும் :)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அரசியலாக்குவம் எண்டுட்டு கண்ட தேவையில்லாததையெல்லாம் தலையில் தூக்கிக் கொண்டாடமுடியாது. சிறீலங்காவினது தேசியகீதம் என்னைப்பொறுத்தவரையில் பிறிதொரு தேசத்தினது தேசியகீதம் அது சிங்களத்தில் இருந்தாலென்ன வேறு ஏதாவது மொழியில் இருந்தாலென்ன. அப்படியிருப்பதே நலம் அப்போதூன் நாம் அன்னியர் ஆக்கிரமிப்புக்குள் இருக்கின்றோம் எனும் உணர்வுவரும். விடுதலைநோக்கிய வேட்கைவரும். சிங்களம,; சிங்களத்தில் மட்டும்தான் தேசியகீதம் பாடல்வேண்டும் என்று கூறுவதைச் செய்தியாகப்போடுங்கள், இல்லை தமிழிலும் வேண்டுமென அடம்பிடிக்காதீர்கள் ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய்க்கிழமை, 14, டிசம்பர் 2010 (8:55 IST)

தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்யவில்லை:

இலங்கை அரசு விளக்கம்

இலங்கையில், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து, அதிபர் ராஜபக்சே தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது பற்றிய உத்தரவு எல்லா துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் நேற்று முன்தினம் தகவல் வெளியானது.

இதற்கு தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடந்து வரும் மறு சீரமைப்பு பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் தலைவர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக இலங்கை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை விவகார மந்திரி ஜான் சேனவிரத்னே விளக்கம் ஒன்றை அளித்து உள்ளார்.

இலங்கையில் சிங்களம் மற்றும் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு வருவதில் மாற்றம் செய்வது குறித்து மந்திரிசபை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட உரிமையை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறி உள்ளார்.

nakkheeran

தமிழில் தேசிய கீதம் பாடம் தடை ஏதுமில்லை-இலங்கை அரசு பல்டி!

http://thatstamil.oneindia.in/news/2010/12/14/no-ban-national-anthem-tamil.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.