Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணத்தில் மோசமடையும் உணவு பாதுகாப்பு

Featured Replies

இலங்கையின் வடமாகாணத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுடைய உணவு பாதுகாப்பு பலவீனமடைந்திருப்பதாகவும் அவர்கள் தங்களது வருமானத்தின் 65 வீதத்தை உணவுக்காக செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் கூறியிருக்கின்றது.

உலக உணவு திட்டம், யுனிசெப் மற்றும் இலங்கையின் மருத்துவ ஆய்வு நிலையம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கடந்த அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடத்திய ஆய்வு ஒன்றிலேயே இந்த நிலைமை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்ந்துள்ளவர்களில் 1755 குடும்பங்களிடையே அவசர நிலைமையிலான உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலைமை தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கின்றது.

மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் உணவு நுகர்வு நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், குடும்பங்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, வாழ்வாதார நிலைமைகள் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் காணப்படாதிருப்பது, கால்நடைகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள அழிவு ஆகிய காரணங்களினால், காலப்போக்கில் இப்போதுள்ள நிலைமையில் மேலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் உலக உணவுத் திட்டம் குறிப்பிட்டிருக்கின்றது.

கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெயர்ந்திருந்த மூன்று லட்சம் வரையிலான மக்களில் 95 வீதமானவர்கள் அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. இன்னும் சமார் 20 ஆயிரம் பேரளவிலேயே மீள்குடியேற்றத்தை எதிர்பார்த்து செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் உலக உணவுத் திட்டத்தின் உதவியோடு நிவாரணமாக உணவு விநியோம் செய்து வருகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வீதிகள், கல்விக்கூடங்கள், அரச அலுவலகங்கள், போக்குவரத்து, மற்றும் வைத்திய சேவைகள் சீர் செய்யப்பட்டு வருவதாகவும் மக்களுக்கான வாழ்வாதர உதவிகள் வழங்கப்படுவதாகவும் அரசாங்கம் கூறி வருகின்றது. ஆயினும் இந்த உதவிகள் மீள்குடியேறியுள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு போதுமான அளவில் இல்லை என்றே பலரும் கூறுகின்றார்கள்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101216_foodsecurity.shtml

போர் முடிந்தும் வடபகுதியில் வாழ்வாதார நிலமைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளினொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது தெரியவந்துள்ளதாக உலக உணவுத்திட்டம் கூறியுள்ளது. இந்த மாவட்டங்களில் பெுரம்பாலானவர்கள் தமது வருமானத்தின் 65 விழுக்காட்டினை உணவிற்கு மட்டுமே இன்னமும் செலவிடுகினார்கள் எனவும் கூடவே இந்த உணவிற்கான போராட்டத்தில் போசாக்குணவு மிகவும் கீழ மட்டத்தில் உள்ளதாகவும் உலக உணவு திட்டம் கூறியுள்ளது.

மறுவளமாக இலங்கை அரசானது தமது தேசிய வருமானம் 8 விழுக்காடாக வளர்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த பொருளாதார வளர்ச்சியானது போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தென்பகுதி கிராமங்களுக்கும் சுவறவில்லை என்பதனையே எடுத்துக்காட்டுகின்றது.

http://meenakam.com/2010/12/17/16514.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.