Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசியமின்றி இரவில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவர்:மானிப்பாய் பொலீசார் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமின்றி இரவில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவர்:மானிப்பாய் பொலீசார் அறிவிப்பு

[ பிரசுரித்த திகதி : 2010-12-18 05:59:14 AM GMT ]

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மானிப்பாய் பகுதியில் அவசியமில்லாமல் இரவில் நடமாடுவோர் கைது செய்யப்படுவர் எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவித்த பொலிஸார் கொள்ளையர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, யாழ். பழம் வீதியில் கொள்ளையடிக்கச் சென்றதாகக் கூறப்படும் மூவர் அந்தக் கிராமத்தின் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

tamilulakam.com

அவசியமின்றி இரவில் நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவர்:மானிப்பாய் பொலீசார் அறிவிப்பு

அப்பத்தான் இலகுவாக கொள்ளையடிக்க முடியும்.

Edited by கிளியவன்

படையினரின் உடையில் இரவில் வந்து யாராவது கதவை தட்டினால் திறக்கவேண்டாம்: பொலிஸ் அத்தியட்சகர்

பாதுகாப்பு படையினரின் உடையில் இரவில் வந்து யாராவது வீட்டு கதவை தட்டினால் திறக்கவேண்டாம் என வவுனியா மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

யன்னல் வழியாக அவர்களிடம் அடையாள அட்டையினை காண்பிக்குமாறு கேளுங்கள் அதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.

வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது அயலவர்களை கண்காணிக்குமாறு கூறிச் செல்லுங்கள்.

எந்த சந்தர்ப்பத்திலும் வீட்டுத்திறப்பை ஒளித்துவைத்துவிட்டு செல்லவேண்டும் உங்களோடு எடுத்து செல்லுங்கள்.

பெறுமதிவாய்ந்த நகைகளை வங்கியில் பாதுகாப்பாக வையுங்கள். வெளியே செல்லும்போது கவரிங் நகைகளை அணிந்து செல்லுங்கள்.

உங்கள் வீட்டுக்கு அருகாமையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் யாராவது நடமாடினால் அது தொடர்பாக உடனடியாக பொலிஸாருக்கு அறிவியுங்கள.

உங்களின் இளம் பிள்ளைகளை தனியாக வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள.; குழுவாக செல்லுமாறு ஆலோசனை தெரிவியுங்கள்.

பகலிலும். இரவிலும் வீட்டு கதவுகளை எந்த நேரத்திலும் மூடிவையுங்கள். குறிப்பாக இரவில் படுக்கைக்கு செல்ல முன் கதவுகள் யன்னல்கள் யாவும் நன்றாக மூடப்பட்டுள்ளதா என்பதினை அவதானியுங்கள்.

வீட்டுக்கு வெளியே இரவில் ஒரு மின்குமிழை எரியவிடுங்கள். உங்களுடைய பாதுகாப்பு நிமித்தம் குறித்த ஆலோசனைகளை பின்பற்றுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுள்ளார்.

குற்றசெயல்களை கட்டுப்படுத்தி மக்களுக்கு சமாதானமான வாழ்வை ஏற்படுத்தவே பொலிஸாராகி நாம் கடுமையாக உழைக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/13268-2010-12-18-15-30-42.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.