Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நவீன உலகிற்கு ஒரு மீட்பர் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவீன உலகிற்கு ஒரு மீட்பர் தேவை

மனித உயிர் மலிவானதாகவும் கிஞ்சித்தும் யோசனையின்றிச் செலவிடத்தக்கதாகவும் மாறியிருந்த படுபயங்கரமான காலகட்டத்தில் இருந்து இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவையடுத்து மீண்டு வந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மனித வாழ்வுக்கான மதிப்பும் கௌரவமும் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படக்கூடியதாக ஏனைய பிரச்சினைகள் இலங்கைச் சமுதாயத்தை படுமோசமாகப் பாதிக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி மக்களை நிலைகுலைய வைக்கிறது. வாழ்க்கைச் செலவின் தொடர்ச்சியான அதிகரிப்பின் விளைவான நெருக்கடிகளில் இருந்து மக்கள் ஓரளவுக்கேனும் விடுபடுவதற்கேதுவாக பண்டிகைக் காலத்திலேனும் அவர்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய உருப்படியான நடவடிக்கை எதையுமே எடுக்க முடியாததாக அரசாங்கம் இருக்கிறது.

"நான் வாழ்வைக் கொடுக்க வந்தேன்அதுவும் பூரணத்துவமான வாழ்வையே கொடுக்க வந்தேன்' என்று யேசு நாதர் கூறினார். அவரின் அந்த மகோன்னதமான செய்தியை நத்தார் பண்டிகைக் காலத்தில் மாத்திரம் நினைவுறுத்துவதில் அர்த்தமேதுமில்லை. மனித உயிர் பாதுகாக்கப்பட்டு, ஒவ்வொரு மட்டத்திலும் அது பேணிவளர்க்கப்பட வேண்டும். வருங்காலத்தில் பிறக்கப்போகும் உயிரும் அதன் பூரணத்துவமான வாழ்வை அனுபவிப்பதற்கான சூழ்நிலையை உறுதிப்படுத்துவது மனுக்குலத்தின் மகத்தான கடமை என்ற சிந்தனை சதா காலமும் மக்கள் மனதில் வேரூன்றியிருக்கத்தக்கதாக வாழ்வின் அர்த்தம் போதிக்கப்பட வேண்டும். சிறுமதிச் சிந்தனைகளுக்கு அப்பால் மனிதன் மேம்படவேண்டும். தனிமனித வாழ்வின் வெற்றியென்பது தனது தேவைக்கு அப்பாலும் தேடிச் செல்வத்தைச் சேர்ப்பதே என்ற வக்கிரச் சிந்தனைச் சூழலில் இருந்து மனுக்குலம் விடுபட்டால் மாத்திரமே எதிர்காலம் பிரகாசமானதாக இருக்க முடியும். இதுவே இன்று உலகின் நெருக்கடிகளுக்கும் மனித அவலங்களுக்கும் தீர்வுகளைக் காண்பதற்கு வழிகாட்டக்கூடிய சிந்தனையாகும்.

பொதுவில் இன்று மனுக்குலம் ஒரு தார்மீக வெற்றிடத்தில் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல் கொள்கைகள் உலகத்தை ஒரு கிராமமாக்கி மக்களை நெருங்கிவரச் செய்திருப்பதாக பெருமை பேசப்படுகிறது. மறுபுறத்திலே மனிதப் பண்பு விழுமியங்களுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்காத ஒரு தார்மீக வெற்றிடத்தில்தான் இன்றைய பொருளாதார அபிவிருத்தி இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதையும் மனித நடத்தைகள் பற்றிய மதிப்பீடு சந்தை வெற்றிதோல்விகளை அளவு கோலாகக் கொண்டே செய்யப்படும் விபரீத நிலை வியாபகம் பெறுகின்றது என்பதையும் நோக்குவதற்குச் சமுதாயம் தவறுகின்றது. உலகமயமாக்கல் பாரிய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்திருக்கிறது என்று ஒருபுறத்தில் கூறப்படுகின்ற அதேவேளை, அதே உலகமயமாக்கல் நாளடைவில் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப் போகின்ற பொருளாதார நெருக்கடிகளுக்குக் கட்டியம் கூறுவதாக அண்மைக்கால சர்வதேச பொருளாதார மந்தநிலை விளக்கியது என்பதையும் நாம் மனதிற்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கும் தனவந்தர்களுக்கும் இடையேயான வெளியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு போவதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

உலகம் இன்று யேசுபாலனின் பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் இதே தினத்தில் சில வருடங்களுக்கு முன்னர் உலகின் சுமார் 100 கோடி கத்தோலிக்கர்களின் நத்தார் கொண்டாட்டங்களுக்குத் தலைமை தாங்கி வத்திக்கான் சென்.பீற்றர் தேவாலயத்தில் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ற் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்ட சில விடயங்களை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்குமென்று நம்புகின்றோம்.

"எண்ணற்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காணப்பட்டிருக்கின்ற போதிலும் கூட, நவீன உலகு இன்னமும் ஒரு மீட்பரை ஒரு தார்மீக வழிகாட்டியை வேண்டிநிற்கிறது. சந்திரனையும் செவ்வாயையும் அடைந்து விட்டபிரபஞ்சத்தை வெற்றிகொள்ளத் தயாராயிருக்கிற மனித குலத்துக்கு, இயற்கையின் இரகசியங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் எல்லை கடந்த அறிவைக் கொண்ட மனித குலத்துக்கு இணையத்தள சமுத்திரத்தில் அநாயாசமாகப் பயணம் செய்கின்ற இந்த மனித குலத்துக்கு ஒரு மீட்பர் இன்னமும் தேவைப்படுகிறான்.

"தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நவீன பொருள் நுகர்வுவாதமும் பசி பட்டினியினாலும் நோயினாலும் வறுமைப் பிணியினாலும் இன,மத, குரோத உணர்வுகளினாலும் பயங்கரவாதம் மற்றும் சகல வகையான வன்முறைகளினாலும் அவலப்படுகின்ற மக்களின் இடர்பாடுகளைத் தீர்க்கத் தவறிவிட்டன. மனிதகுலம் கண்டிருக்கின்ற பல முன்னேற்றங்களுக்கு மத்தியிலும் மனிதன் எப்போதுமே ஒரேமாதிரியானவனாகவே இருந்து வந்திருக்கிறான். நன்மைக்கும் தீமைக்கும் இடையே உயிர்வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே அந்தரத்தில் தொங்குகிறது மனிதனின் விடுதலை. இந்தப் பின் நவீனத்துவ யுகத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக மனிதனுக்கு ஒரு மீட்பர் தேவைப்படுகிறார். ஏனென்றால், அவன் வாழுகின்ற சமுதாயம் முன்னரை விடவும் கூடுதலான அளவுக்கு சிக்கலானதாக மாறிவிட்டது. அவனது தார்மீக நேர்மைக்கும் கண்ணியத்துக்குமான அச்சுறுத்தல்கள் தற்போது கூடுதலான அளவுக்கு நயவஞ்சகத்தனமானவையாக மாறிவிட்டன'.

thinakkural.com

மழைக்கு முளைத்த காளான் போன்ற பல சமய தாபனங்கள், சாயி, நாராயணகுரு, சின்மயா, ராமகிருஷ்ண மிசன்கள், மதம் மாற்றும் கிறிஸ்தவ மிசன்கள், மதத்தை திணிக்கும் பௌத்த - இஸ்லாமிய அடிப்படைவாதிகள் புதிய மீட்பராக தங்களைக் காட்டிக் கொள்ள முனைகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.