Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் திருமணம் நடக்கும் முறை தெரியுமா?

Featured Replies

24.12.2010 பெரியார் நினைவையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் சு.ப.வீரபாண்டியன் அவர்கள் சொன்ன விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. திருமண சடங்கின்போது ஐயர் கூறும் மந்திரத்தில்(சமஸ்கிருதம்) பெண்ணை குறித்து சொல்வது சோமனுக்கு மனைவியாய் இருந்தாய், இந்திரனுக்கு மனைவியாய் இருந்தாய், வாயுவுக்கு மனைவியாய் இருந்தாய், எனக்கும் மனைவியாய் இருந்தாய், இப்போது இவனுக்கு(மணமகனுக்கு) மனைவியாகின்றாய். இது பெண்களை இழிவு படுத்துவதாக இல்லையா?

பெரியார்தான் இதை வெளிப்படுத்தியவர், திரும்ப நினைவுபடுத்தியது சுபவீ.

24.12.2010 பெரியார் நினைவையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் சு.ப.வீரபாண்டியன் அவர்கள் சொன்ன விடயம் எனக்கு அதிர்ச்சியை தந்தது. திருமண சடங்கின்போது ஐயர் கூறும் மந்திரத்தில்(சமஸ்கிருதம்) பெண்ணை குறித்து சொல்வது சோமனுக்கு மனைவியாய் இருந்தாய், இந்திரனுக்கு மனைவியாய் இருந்தாய், வாயுவுக்கு மனைவியாய் இருந்தாய், எனக்கும் மனைவியாய் இருந்தாய், இப்போது இவனுக்கு(மணமகனுக்கு) மனைவியாகின்றாய். இது பெண்களை இழிவு படுத்துவதாக இல்லையா?

பெரியார்தான் இதை வெளிப்படுத்தியவர், திரும்ப நினைவுபடுத்தியது சுபவீ.

இந்துமத பெண்களைத் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயர் இதைச் சொல்லுறார் என்பதற்காக எதிர்ப்பது நியாயமற்றது. ஏனெனில்.. அவர் சொல்வதில் உண்மை இல்லை என்பது வெளிப்படையான உண்மை. அப்படி இருக்க அவர் பிழைப்புக்காக சொல்லும் இவற்றை ஏன் பெரிசு படுத்தி தூக்கிப் பிடிச்சிக்கிட்டு.. அதில போய் பகுத்தறிவு ஆராய்ச்சி செய்துகிட்டு.. எனக்குப் புரியல்ல.. ஒரு பொய்க்குள் பகுத்தறிவு ஆராய்ச்சி செய்வதால் கிடைக்கப் பெறும் நன்மை என்ன என்பது..??!

எல்லாம் தெரிந்து கொண்டுதான் நடக்கிறது. 1990 பிற்பகுதியிலேயே இதைப்பற்றித் தெரியவந்தது. ரொறன்ரோவில் பத்திரிகைகளில் இவற்றைப் பற்றிப் பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு சிலர் மாத்திரம் தமிழ் முறையில் கல்யாணம் செய்து கொண்டனர். நான் அறிந்தவரையில் எப்போதுமே ரொறன்ரோவில் கல்யான சீசனில் ஐயர்மாரைப் பிடிப்பது மிகவும் கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

கலியாணம் கட்டுவது ஆயுளில், ஒரு முறை தான். அந்த மந்திரமும் ஒரு மணித்தியாலத்தில் முடிந்த பின், முதலிரவு தான்.

ஆனால், இப்போ.... தமிழ்ப் பாடசாலைகளில், யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரைக்கும் உள்ள பாடசாலைகளில் தினமும் சிங்களத்தில் 20 நிமிடம் பிரித் ஓதப் போகிறார்களே...... அதற்கு நாம் என்ன செய்வது?

இந்த இணைப்பை பார்க்கவும்... http://www.yarl.com/forum3/index.php?showtopic=79875

இதுதான்... தமிழரை பிரித்து ஓதுவது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

.

கலியாணம் கட்டுவது ஆயுளில், ஒரு முறை தான். அந்த மந்திரமும் ஒரு மணித்தியாலத்தில் முடிந்த பின், முதலிரவு தான்.

ஆனால், இப்போ.... தமிழ்ப் பாடசாலைகளில், யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரைக்கும் உள்ள பாடசாலைகளில் தினமும் சிங்களத்தில் 20 நிமிடம் பிரித் ஓதப் போகிறார்களே...... அதற்கு நாம் என்ன செய்வது?

இந்த இணைப்பை பார்க்கவும்... http://www.yarl.com/forum3/index.php?showtopic=79875

இதுதான்... தமிழரை பிரித்து ஓதுவது.

நாங்கள் தமிழர்கள் புத்த மதத்தை எதிரியாக நோக்க வேண்டியதில்லை. தமிழர்களின் தொல்பியல் வரலாற்றில் சைவத்துடன் சமணம்.. புத்தம் என்று பல மதங்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் விரும்பின் பிரித் ஓதுவது தப்பன்று. அது புத்தமத அனுஸ்டானம். அது சிங்களவர்களுக்குரிய ஒன்றல்ல. பிரச்சனைக்குரிய ஒன்றல்ல. ஆனால் அதை சிங்களத்தில் திணிப்பதுதான் சட்டத்துக்கும் மனிதத்திற்கும் விரோதமானது.

சிங்களவர்கள் தமிழ் தெய்வங்களை வழிபடுவதில் இருந்து விரோதம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழை வெறுக்கிறார்கள். புத்தம் சிங்களவர்களின் தனி மதம் அல்ல. அது தெற்காசியாவில் தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு மதம். பல்மொழி பேசும் வெவ்வேறு இனக் குழும மக்களும் அதனை அனுஷ்டிக்கின்றனர்.

தமிழர்களின் எதிரி தமிழர்களின் தேசிய இன இருப்பை தேச இருப்பை நிராகரிக்கும்.. சிங்கள பெளத்த பேரினவாத தேசிய சிந்தனை கோட்பாடே அன்றி.. வேறல்ல. புத்தமதத்தை தமிழர்கள் எதிர்ப்பதில் நியாயமில்லை. அதேபோல் புத்த மதத்தை மீண்டும் தமிழர்களுக்குள் திணிப்பதும் நியாயமற்றது. ஆனால் தமிழர்கள் விரும்பின் புத்தமதக் கொள்கைகளை பின்பற்றலாம். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையில் புத்தமதம் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நயினாதீவில் வந்திறங்கியது புத்தமத தமிழர்களே அன்றி புத்தமத சிங்களவர்கள் அல்ல.

புத்தமதத்தை சிங்களவரின் மதமாக மட்டும் கொண்டு கொள்கை வகுப்பது எமது தவறாகும். இதனை தேசிய தலைவரும் சொல்லி இருக்கிறார். தேசிய தலைவர் ஒரு மாவீரர் தின உரையில் நாம் சிங்கள மக்களின் விரோதிகள் அல்ல. புத்தமத விரோதிகள் அல்ல. புத்த தர்மத்தை பேசிக் கொண்டு தமிழர்களின் தேசிய இன இருப்பை சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் சிங்கள பெளத்த பேரினவாதச் சிந்தனையையில் மகாவம்ச வெறியில் சிக்கிக் கிடக்கும் சிங்களப் பேரினவாதிகளே எதிரிகள் என்று. தேசிய தலைவரிடம் இருந்த தெளிவு தமிழ் மக்களை சரியான வடிவில் இன்னும் சென்றடையவில்லை என்று நினைக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தமிழர்கள் புத்த மதத்தை எதிரியாக நோக்க வேண்டியதில்லை. தமிழர்களின் தொல்பியல் வரலாற்றில் சைவத்துடன் சமணம்.. புத்தம் என்று பல மதங்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் விரும்பின் பிரித் ஓதுவது தப்பன்று. அது புத்தமத அனுஸ்டானம். அது சிங்களவர்களுக்குரிய ஒன்றல்ல. பிரச்சனைக்குரிய ஒன்றல்ல. ஆனால் அதை சிங்களத்தில் திணிப்பதுதான் சட்டத்துக்கும் மனிதத்திற்கும் விரோதமானது.

சிங்களவர்கள் தமிழ் தெய்வங்களை வழிபடுவதில் இருந்து விரோதம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தமிழை வெறுக்கிறார்கள். புத்தம் சிங்களவர்களின் தனி மதம் அல்ல. அது தெற்காசியாவில் தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு மதம். பல்மொழி பேசும் வெவ்வேறு இனக் குழும மக்களும் அதனை அனுஷ்டிக்கின்றனர்.

தமிழர்களின் எதிரி தமிழர்களின் தேசிய இன இருப்பை தேச இருப்பை நிராகரிக்கும்.. சிங்கள பெளத்த பேரினவாத தேசிய சிந்தனை கோட்பாடே அன்றி.. வேறல்ல. புத்தமதத்தை தமிழர்கள் எதிர்ப்பதில் நியாயமில்லை. அதேபோல் புத்த மதத்தை மீண்டும் தமிழர்களுக்குள் திணிப்பதும் நியாயமற்றது. ஆனால் தமிழர்கள் விரும்பின் புத்தமதக் கொள்கைகளை பின்பற்றலாம். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையில் புத்தமதம் பற்றி தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நயினாதீவில் வந்திறங்கியது புத்தமத தமிழர்களே அன்றி புத்தமத சிங்களவர்கள் அல்ல.

புத்தமதத்தை சிங்களவரின் மதமாக மட்டும் கொண்டு கொள்கை வகுப்பது எமது தவறாகும். இதனை தேசிய தலைவரும் சொல்லி இருக்கிறார். தேசிய தலைவர் ஒரு மாவீரர் தின உரையில் நாம் சிங்கள மக்களின் விரோதிகள் அல்ல. புத்தமத விரோதிகள் அல்ல. புத்த தர்மத்தை பேசிக் கொண்டு தமிழர்களின் தேசிய இன இருப்பை சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் சிங்கள பெளத்த பேரினவாதச் சிந்தனையையில் மகாவம்ச வெறியில் சிக்கிக் கிடக்கும் சிங்களப் பேரினவாதிகளே எதிரிகள் என்று. தேசிய தலைவரிடம் இருந்த தெளிவு தமிழ் மக்களை சரியான வடிவில் இன்னும் சென்றடையவில்லை என்று நினைக்கிறேன்.

இதை வாசிக்க .....

ஒடிப்போயிட்டு கலியாணாம் கட்டலாமா? அல்லது....

கலியாணாம் கட்டிப் போட்டு ஓடலாமா?

எண்ட மாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க .....

ஒடிப்போயிட்டு கலியாணாம் கட்டலாமா? அல்லது....

கலியாணாம் கட்டிப் போட்டு ஓடலாமா?

எண்ட மாதிரி இருக்கு.

நீங்கள் இதை எப்படி எடுத்துக் கொண்டாலும்.. இதுதான் உலகம் உணர்ந்து கொள்ளத் தக்க ஏற்றுக் கொள்ளக் கூடிய யதார்த்தமாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.