Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி செய்திகள்

Featured Replies

ஜேர்மனியில் வசித்த 35 தமிழ்க்குடும்பங்களுக்கும் மறக்கமுடியாத நாள்

நீதிமன்றத்தின் முன் அனுமதியைப் பெற்று ஜேர்மனியில் 24.08.2005 அதாவது நேற்று அதிகாலை காவல்த்துறையினரும் வெளிநாட்டவர் பணிமனைகளும் கூட்டாக பாரிய அதிரடி நாடு கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். முன்னிரவு சரியாக 2.30 மணிக்கு ஒரே நேரத்தில் காவல்த்துறையினரும் வெளிநாட்டவர் பணிமனையினரும் அனைத்து நாடு கடத்தவிருக்கும் 35 தமிழர்களின் வீடுகளுக்குள்ளும் கதவுகளை கோடரிகளால் கொத்தியும், கதவுப்பூட்டுக்களை உடைத்தும் உள் நுளைந்தனர். அவர்களில் சிலர் பொருட்களை பொதிசெய்யும் பெட்டிகளுடன் காணப்பட்டனர் அவர்கள் அலுமாரிகளில் கிடந்த உடுப்புகளை பொதிசெய்தனர். சிலர் புதிய கதவுகளை வீடுகளுக்குள் கொண்டுவந்தனர் ( உடைத்த கதவுக்குப் பதிலாக பூட்ட) இன்னும் சிலர் அனைவருக்கும் கைவிலங்கிட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேரடியாக Duesseldorf விமான நிலையம் கொண்டுசெல்லப்பட்டு காலை 8 மணியளவில் இலங்கைக்கு விஷேட விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டனர். இந்த நடவடிகையில் இருந்து Essen நகரத்தில் வசித்த எனது உறவினன் ஒருவர் மட்டுமே தப்பியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. பாரிய திட்டமிடலுடன் நடத்தப்பட்ட இந்த நாடுகடத்தும் நடவடிக்கையானது அதிகாலையில் நடைபெற்று அத்தோடு விமானம் காலை 8 மணியளவில் வானில் பயணிக்கத்தொடங்கியது. காரணம் மாலையிலோ அல்லது இரவிலோ விமானம் புறப்பட்டால் அதற்குள் சட்டத்தரணிகளின் உதவியை நாடி சிலர் தப்பித்துவிடுவார்கள் எனும் காரணத்தால் சட்டத்தரணிகளின் அலுவலகங்கள், நீதிமன்றங்கள் திறப்பதற்கு முன்னரே விமானம் வானில் கிளம்பியது.

  • Replies 172
  • Views 24.8k
  • Created
  • Last Reply

நிலையை பார்த்தால் மோசமாகத் தெரிகிறது.

இப்படியான நிலைக்கு ஏதாவது விமோசனமுண்டா?

எவ்வளவு காலமாக இவர்கள் ஜேர்மனியில் வாழ்ந்தார்கள்?

ஏனைய தமிழர் நிலை என்ன ஊமை?

இவர்களில் Essen நகரில் இருந்து அனுப்பபட்டவர்களில் ஒரு குடும்பத்தை எமக்கு தெரியும் அவர்களில் கணவன் சுமார் 11 வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு வந்துள்ளார். அவருடைய அரசியல் தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருடைய மனைவியும் 11 வயசு மகனும் இந்த வருடமே ஜேர்மனிக்கு வந்தனர்.இவர்களுடைய அரசியல் தஞ்ச விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. பின்னர் இவர்கள் தங்களுக்கு உடல்நலக்கோளாறு என சட்டத்தரணியின் உதவியுடன் வழக்கொன்றை ஜேர்மன் அரசுக்கு எதிராக ஏற்படுத்தியிருந்தனர். அதாவது 24.08.2005 அன்று அவர்களுக்கு வைத்திய சோதனைக்கான நாளும் குறிக்கப்பட்ட நிலையில் அன்று அதிகாலை இவர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டனர். இப்பொழுது ஏனயவர்கள் அதாவது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பீதியுடனேயே காணப்படுகின்றனர். இந்த நிலையை இங்கு இருக்கும் தமிழ் அமைப்புக்கள் நிச்சயமாக இதை கண்டித்து ஜேர்மன் உள்நாட்டு அமைச்சுக்கு எதிராக ஒரு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இங்கு இப்போது வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டிருப்பவர்க

முந்தி அனுப்பபோறான்கள் என்று துடிச்ச கனபோ் குடி யும் குடித்தனமா நஸனலிற்றியுமே செட்டிலாய் போட்டினம்.. மற்ற சனங்களைப்பற்றி அக்கறையில்லாமல் இருக்கினம். ஒருக்கா பேச்சு்கு சொல்லிப்பாருங்கோ நஸனிலிற்றி்காரற்ரை பாஸ்போர்ட்டையும் பறிச்சுப்போட்டு ஏத்தப்போறங்களென்று...அப்ப தான் சுடு தண்ணி குடிச்ச நாய் மாதிரி திரிவினை..

சின்னக்குட்டி உணர்ச்சிவசப்படாதேங்கோ.. உணர்ச்சிவசப்படுறதால இருப்பதையும் இல்லாமல் செய்யுற வழிவகைகள்தான் அதிகரிக்கும். :lol:

உண்மை தான் மகன்..நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைச்சு..

முந்தி அனுப்பபோறாங்கள் என்று துடிச்ச கனபேர் குடியும் குடித்தனமா நஸனலிற்றியுடன் செட்டிலாய் போட்டினம்.. மற்ற சனங்களைப்பற்றி அக்கறையில்லாமல் இருக்கினம். ஒருக்கா பேச்சுக்கு சொல்லிப்பாருங்கோ நஸனிலிற்றிக்காரற்ரை பாஸ்போர்ட்டையும் பறிச்சுப்போட்டு ஏத்தப்போறங்களென்று...அப்ப தான் சுடு தண்ணி குடிச்ச நாய் மாதிரி திரிவினை..

நீங்கள் கூறுவது சரி தான் சின்னக்குட்டி நாங்கள் இப்படி இங்கு நிறைய தமிழரை பார்த்து இருக்கிறோம். அதவது அவர்கள் நாங்கள் இலங்கையர் அல்ல, நாங்கள் ஜேர்மன்காரர் (Wir sind keine Srilankaner, sondern deutscher) என்று சொல்கிறார்கள். எல்லாம் காலம் செய்த கோலம் தான். அவர்களை மாதிரியானவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா?????

யேர்மனியிலிருந்து 50 இலங்கையர் திருப்பி அனுப்பப்பட்டனர்!

யேர்மனியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் 50 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த நாட்டின் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

யேர்மனியிலிருந்து விசேட விமானம் மூலம் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை இக்குழுவினர் வந்தடைந்ததாக விமான நிலைய பாதுகாப்புப்பிரிவினர் தெரிவித்தனர்.

நாடு திரும்பிய 50 பேரில் யுவதிகளும் குழந்தைகளும் இருந்தனர். இவர்கள் நாடு திரும்பியதும் விமான நிலைய குற்றத் தடுப்பு திணைக்கள அதிகாரிகள் அவர்களை அழைத்துச் சென்று விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பதிவுசெய்த பின்னர் விடுவித்துள்ளனர்.

இலங்கை திரும்பியவர்களுடன் யேர்மன் காவல்துறை அதிகாரிகள் 50 பேரும் வைத்தியர்கள் சிலரும் வந்திருந்ததாக விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் கூறினர்.

புதினம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு வாரமும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பிராங்போர்ட் விமானநிலயத்தினூடாக விடுமுறைக்கு சென்று வருகிறார்கள் இப்படி நடக்கும் பொழுது அவர்கள் திருப்பியனுப்புவதை எப்படி தடுக்கமுடியும் நாங்கள் இங்கு வந்தது அகதியாகவே ஆனால் அகதிஅந்தஸ்து கிடைத்தவுடன் நாங்கள் செய்வது என்ன? 10 வருடங்களாக வேலைசெய்யவில்லை ஆனால் வருடம் வருடம் விடுமுறைக்காக தாயகம் சென்று வருகிறார்கள்? இதனால் நாங்களே எமது சமூகத்துக்கு துரோகம் செய்துள்ளோம்? இன்று ஜேர்மனி நாளை ஐரோப்பியநாடுகள் முழுவதும் இந்த நிலைமைதான.; காலம் கடந்துவிட்டது?

ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.

அப்படி செய்தார்களா :shock: :?

இந்த தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்...அதற்கான மூல ஆதாரத்தை இணைக்க முடியுமானால்....ஆங்கிலம் அல்லது மொழி பெயர்ப்புடன் இருந்தால் உதவியாயிருக்கும்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே கூறியது உண்மையானால் இப்படி எமது தமிழ் மக்களுக்கும் நடக்கலாம் தானே? ஆனால் அரசியல் அந்தஸ்து கோரி ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தின்படி வதிவிடஉரிமை பெற்றவர்களுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படாது என்று நினைக்கின்றேன் ஆனாலும் தற்போது ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வேலையில்லாப்பிரச்சனை பயங்கரவாதசம்பவங்களினால் எதுவும் நடக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருப்பியனுப்பும் பொழுது தற்போது மனிதாபத்தை பாhப்;பதில்லை

பல வருடங்களுக்கு முன் நெதர்லாந்தில் திருப்பியனுப்பகைதுசெய்யப்ப

ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.

எத்தியோப்பிய மக்களைத்தான் இப்படி அனுப்பியதாக கேள்விப்பட்டு இருக்கிறேன்

மன்னிக்கவேண்டும் நான் பிலிப்பைன்ஸ். அங்கு போர் முடிவுக்கு வந்த பின் அந்த நாட்டு அரசின் விஷேட வேண்டுகோளுக்கிணங்க இவர்கள் சுயவிருப்போடும் / பலவந்தமாகவும் ஒரு இரவில் நாடுகடத்தப்பட்டார்கள். :P :P :P

வியட்நாமியர்களை gUest அகதிகள் என்ற ஸ்கீமின் கீழ் மேற்கத்தைய நாட்டவர்களால் வரவேற்கப்பட்டவர்களென்று நினைக்கிறன் அவர்கள் ஜெனிவா சட்டத்தில் அடங்கவில்லையோ என்னவோ அதன் காரணத்தினால் அவர்களை இலகுவாக திருப்பி அனுப்ப கூடியாயிருந்தோ என்னவோ....

விருந்தினராக புலம் பெயர்ந்திருந்தால் எப்படி அவர்களை தேசிய இனமாக்குவது??

ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.

இது தமிழர்களுக்கு பொருந்தாது என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டபடி வியட்னாமியர்கள் வேறுவழிகளில் வந்தமையால் குடியுரிமை(?) பறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டிருக்கலாம். இது குறித்த மேலதிக செய்திகளை தந்தால் படித்து அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும்

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் இந்தியாவின் பழைய வம்சவாளி என கேள்விப்பட்டிருக்கின்றேன். அது உண்மையா?

ஜேர்மனியின் வரலாறுகளை சற்று திரும்பி பாருங்கள். இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன் டொச் தேசிய இனமாக்கப்பட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியட்நாம் நாட்டவர்களை அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய இனமாக்கப்பட்ட சட்டமூலத்தினை மீளப்பெற்றுக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜேர்மன் கடவுச்சீட்டு அடையாள அட்டை என்பவற்றையும் மீளப்பெற்று Duldung எனும் நாடுகடத்தும் 1 நாள் வதிவிட அனுமதி வழங்கி சில கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அவர்களை பலவந்தமாக அவர்களின் தாய் நாட்டிற்கு நாடு கடத்தியதை ஒருகணம் உங்கள் மனதில் வையுங்கள்.

கவனிக்கவும் சிறப்புச்சட்டம் -கிட்டத்தட்ட இதே போன்றதே மலையகத் தமிழர்களிற்கும் நடந்தது.

தமிழர்கள் குடியுரிமை பெற்றது சாதாரண குடியுரிமைச் சட்டத்தின் முலமாகும்.

ஆனால் அதனையும் தேவையேற்படின் மீளப் பெறலாம் :idea:

ஜெர்மனியில் செப்டம்பர் 18 நடக்கப்போகும் தேர்தலில், எந்தக் கட்சி, ஈழத்தமிழர் வாக்களித்தால் ஈழத்தமிழர் போரட்டத்துக்கும், இங்கே இருக்கும் நிரந்திர வதிவிடஉரிமை அற்ற ஈழத்தமிழர்பாலும் பரிவுடன் நடந்து கொள்ளும். ஆய்வாளர்கள்,மாணவர்கள்,கட்சிக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த சட்டமாகவிருந்தாலும் அவர்களள் தங்கள்நாட்டு மக்களின் நன்மைக்காக சகலகட்சிகளும் ஒன்றாக இணைந்து சட்டத்தை மாற்றுவார்கள் ஆனால் நாங்கள் அப்படி இணைவோமா?

எந்த சட்டமாகவிருந்தாலும் அவர்கள் தங்கள் நாட்டு மக்களின் நன்மைக்காக சகல கட்சிகளும் ஒன்றாக இணைந்து சட்டத்தை மாற்றுவார்கள்

நீங்கள் சொல்வது மிகச் சரி கணேஸ். ஏனெனில் எந்த கட்சியானாலும் அவர்கள் முதலில் முன் வைப்பது வேலை இல்லா திண்டாட்டத்தை நாம் முடிவுக்கு கொண்டுவருவோம். அடுத்தது வெளிநாட்டவர்களை வெளியேற்றுவோம் எற உறுதிமொழிகளையே தேர்தல் வாக்குறுதிகளில் முன் வைப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. யார் வந்தாலும் அது ஜேர்மன்காரர்களுக்கு நன்மையே தவிர அந்த கட்சியால் வெளிநாட்டவருக்கு நன்மை பயக்கப்போவதில்லை. :P :P யார் வந்தாலும் வெளிநாட்டவர் வெளியேறுங்கள் :P :P (Auslaender Raus) :):lol::lol: என்ற சொல்லையே மறைமுகமாக சொல்லாமல் சொல்வார்கள்.

இந்த தகவலை எங்கிருந்து பெற்றீர்கள்...அதற்கான மூல ஆதாரத்தை இணைக்க முடியுமானால்....ஆங்கிலம் அல்லது மொழி பெயர்ப்புடன் இருந்தால் உதவியாயிருக்கும்

இதனை நான் எங்கும் படிக்கவில்லை. எனக்கு எனது அயலில் வசிக்கும் ஜேர்மன் முதியவர்கள் சொன்னார்கள். இவர்களில் ஒருவர் இப்போது இறந்துவிட்டார். அவர் ஹிட்லரின் காலத்திலே நடந்த கொடுமைகள் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். இந்த வியட்நாமியர் அமெரிக்க-வியட்நாமிய போரின் போது ஜேர்மனியில் சட்டவிரோதமாக உள்நுளைந்து பின் அரசியல் தஞ்சம் கோரியவர்களாம். இவர்களுக்கு உடனே அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு எல்லையற்ற வதிவிட அனுமதியும் வழங்கப்பட்டு 5 வருடங்களின் பின் தேசவழமைச் சட்டத்துக்கு அமைய அவர்களுக்கு டொச் தேசிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டதாம். பின் வியட்நாமிய அரசின் விஷேட அழைப்பின் பேரில் இவர்களின் பிரஜாவுரிமை மீளப்பெறப்பட்டு சுயவிருப்பிலும்/ பலாத்காரமாகவும் நாடுகடத்தப்பட்டனராம். ஆனால் ஜேர்மன் பிரஜைகளை விவாகம் செய்தவர்கள் மாத்திரம் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டனராம். :):lol: தமிழீழம் கிடைச்சு எல்லோரும் நாட்டுக்கு வாங்கோ போர் முடிந்துவிட்டது என இயக்கம் அறிவித்தால் நாங்கள் எல்லாம் மூட்டை முடிச்சை கட்டவேண்டியது தான் :P :P :P

தமிழீழம் கிடைத்தால் தமிழீழத்தில் வாழகசக்குமா? அதற்காகத்தானே இவ்வளவு பாடுபடுகிறோம், எத்தனை உயிர்கள், எவ்வளவு வேதனைகள்,எவ்வளவு சொத்தளிப்பு,எத்தனை போராளிகளின் உயிர் அர்பணிப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.