Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

“தேசியத் தலைவரின்” பெயரால் … : அஜித்

Featured Replies

மக்களின் அரசியலை முன் நிறுத்தும் அமைப்பே மக்களால் ஆதரிக்கப்படும்.புலிகளின் போராட்ட காலத்தில் மக்கள் அணிதிரண்டது புலிகளுக்காகவே, இது அந்தக் காலகட்டத்தில் அவர்களே தலமைச் சக்தியாக இருந்தார்கள் என்பதற்காக.பிடிஎவின் பலமும் அதுவாகத் தான் இருந்தது.இதை பிடிஎபுடன் எனக்கான நடைமுறை அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன்.பிடிஎவ் என்னும் அமைப்பினுள் வந்தவர்கள் எல்லோருமே, தமீழம் தனி நாடு சுயனிர்ணயம் புலிகளின் தலமைத் துவம் என்பனவற்றை அங்கீகரிதவர்களே.அவ்வாறு வந்தவர்கள் வெவ்வேறு இயக்கங்கள் அரசியல் உள்ளவர்களாக இருந்தனர்.

புலிகளின் இன்றைய உலக ஒழுங்கு என்பது தோற்கடித்ததற்கான அடிப்படைக் காரணம்,தமிழர்களின் அரசியல் அபிலாசை என்பது இந்திய அரசிற்க்கு பிரச்சினையான ஒரு வடிவமாக இருந்ததே.

வன்னியில் இருந்து திரு நாவுக்கரசு போன்றோர் இந்தியா பற்றிய தெளிவான பார்வை அற்றவர்களாகவே இருந்தனர்.இந்திய அரசு என்பது ஒரு போதுமே தமீழத்திற்க்கு ஆதரவாக இருக்கப் போவதில்லை என்பதையும், இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களை மீறி மேற்குலகம் செயற்படப் போவதில்லை என்பதையும் புலிகளோ புலிகளின் சர்வதேசப் பார்வையை நெறிப்படுதியவர்களோ அவ்வளவாக அறிந்து இருந்த தகாகத் தெரியவில்லை.ஒரு திறந்த உரையாடல் இது பற்றி நடந்து இருந்தால் இவ்வாறான பிழைகள் ஏற்பட்டிருக்கா என்பது சுடலை ஞானம்.இனி வரும் போராட்டக் காலஏ என்பது இந்தியாவை நாம் எவ்வாறு எதிர் நோக்குவது, உபகண்ட்ட அரசியலை நாங்கள் எவர் எவருடன் சேர்ந்து மாற்றலாம், தமிழ் நாட்டில் எத்தகைய போராட்டம் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்பதிலையே தங்கி இருக்கிறது.எம்மை எதிர்ப்பவர்கள் சென்னையிலும் டெல்கியிலும் இருக்க நாம் வன்னிக்குள் மட்டுமே போராடிக் கொண்டிருந்தோம். பரந்து பட்ட மக்கள் போராட்டமாக நாம் எம்மை இந்தியா எங்கனம் உள்ள மக்களுடன் இணைந்து செயற்படும் மட்டும் நாம் தொடர்ந்தும் தோல்வியையே தழுவுவோம்.புலிகளின் இராணுவ வலுமையே தமிழர்களால் பிரயோகிக்கப்பட வல்ல அதி உச்ச வல்லமை.அதனால் சாதிக்க முடியாததை நாம் சாதிக்க வேண்டும் எனில் நாம் உலக்ளாவிய ரீதியிலும் இந்திய உபகண்ட்டத்திலும் பல போராடும் சக்திகளுடன் எம்மை இணைக்க வேண்டும்.அப்படி இணைத்தால் இந்தியா எம்மோடு கோவித்துக் கொள்ளும் என்னும் பார்வையே புலிகளிடம் இருந்தது.அதுவே புலிகளிற்க்கு அழிவைத் தேடித் தந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அரசியலை முன் நிறுத்தும் அமைப்பே மக்களால் ஆதரிக்கப்படும்.புலிகளின் போராட்ட காலத்தில் மக்கள் அணிதிரண்டது புலிகளுக்காகவே, இது அந்தக் காலகட்டத்தில் அவர்களே தலமைச் சக்தியாக இருந்தார்கள் என்பதற்காக.பிடிஎவின் பலமும் அதுவாகத் தான் இருந்தது.இதை பிடிஎபுடன் எனக்கான நடைமுறை அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன்.பிடிஎவ் என்னும் அமைப்பினுள் வந்தவர்கள் எல்லோருமே, தமீழம் தனி நாடு சுயனிர்ணயம் புலிகளின் தலமைத் துவம் என்பனவற்றை அங்கீகரிதவர்களே.அவ்வாறு வந்தவர்கள் வெவ்வேறு இயக்கங்கள் அரசியல் உள்ளவர்களாக இருந்தனர்.

புலிகளின் இன்றைய உலக ஒழுங்கு என்பது தோற்கடித்ததற்கான அடிப்படைக் காரணம்,தமிழர்களின் அரசியல் அபிலாசை என்பது இந்திய அரசிற்க்கு பிரச்சினையான ஒரு வடிவமாக இருந்ததே.

இந்தக் கருத்தில் நானும் முழுமையாக உடன்படுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சாதிக்க முடியாததை நாம் சாதிக்க வேண்டும் எனில் நாம் உலக்ளாவிய ரீதியிலும் இந்திய உபகண்ட்டத்திலும் பல போராடும் சக்திகளுடன் எம்மை இணைக்க வேண்டும்.அப்படி இணைத்தால் இந்தியா எம்மோடு கோவித்துக் கொள்ளும் என்னும் பார்வையே புலிகளிடம் இருந்தது.அதுவே புலிகளிற்க்கு அழிவைத் தேடித் தந்தது.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

முதலாம் அல்லது இரண்டாம் உலகப்போர் பற்றி வேண்டுமானால் நாம் கேள்விகளை எழுப்பலாம் சந்தேகங்களை தேடலாம். ஆனால் இது எம்முன்னால் நடந்தது. அதில் அனைவரும் பங்காளிகளாக இருந்தோம் என்பதை மறந்துவிட்டு தோல்வியை காரணம் காட்டிக்கொண்டிருக்கமுடியாது. அதிலிருந்து தப்ப சரணாகதியடைவதை தவிர அனைத்தையும் நாம் செய்தோம். இது தான் உண்மை. இதுதான் வரலாறு.

சிறிலங்கா, இலங்கை, ஈழம் என்பதன் அரசியல் எப்போதுமே இந்திய உபகண்டத்தலையே தீர்மனிக்கப்பட்டது.தமிழ் நாட்டில் மாற்றம் வராமல் ஈழத்தில் மாற்றம் வராது.சென்னை இன்று ஒரு பல் தேசிய நகராக மாற்றம் பெற்றுள்ளது.உலகப் பொருளாதார அடுக்குடன் அது இணைக்கப்பட்டு வருகிறது.இங்கே நகரத்திற்க்கும், தமிழ்க் கிராமத்திற்க்கும் இடையேயான பொருளியல்,கலாச்சார முரண்பாடு என்பது எத்தகையதாக இருக்கும், திராவிட அரசியலின் எதிர்க்காலம் என்ன, கருணானிதி குடும்ப ஆட்ச்சி, திரை சார் மோகம் ஜனனாயகம் அற்ற தன்மை எனப் பல விடயங்கள் தாக்கம் செலுத்தும்.இதில் சீமானின் நாம் தமிழர் இயக்கம் எவ்வாறு அரசியல் ரீதியாகத் தம்மை நிலை நிறுத்தப் போகிரார்கள், எவ்வாறு இருக்கின்ற முரண்பாட்டை தமக்குச் சாதகமான வகையில் அரசியல் நடைமுறையாக்கப் போகிரார்கள் எவ்வாறு இந்தியா எங்கனம் இருக்கும் போராடும் சக்திகளுடன் தம்மை இணைக்கப் போகிரார்கள் என்பதில் தன்கி இருக்கிரது.இது பற்ரிய உரையாடல், பொருளாதார உதவிகள் என்பன உலகளாவிய ரீதியில் தமிழர் மத்தியில் நடாத்தப்பட வேண்டும்.உலகத் தமிழரின் போராட்டக் களம் உண்மையில் ஈழம் அல்ல தமிழ்னாடாகவே இருக்க வேண்டும்.இருந்திருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரப் புலிகள் முப்பது வருடம் போராடி, அவர்களது அத்தியாயம் முடிந்துவிட்டது. எனினும், தமிழ் மக்களின் விடுதலை இன்னமும் வெல்லப்படவில்லை. ஆகையால் எதிர்காலத்தில் புலிகளின்றிய தமிழ் மக்களின் அரசியல் போராட்ட வழிமுறைகள்தான் தேவையானது.

எது எப்படி எண்றாலும் பலமான நிலையில் தமிழர்கள் இல்லை எண்றால் சிறுபான்மையான இனமான தமிழர்களால் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது... எப்போதும் கூழைக்கும்பிடு போட்டும் அடிமை நிலைதான்...

வேண்டும் எண்டால் கிழக்கில் இருக்கும் முஸ்லீம்களை எடுத்துக்கொள்ளுங்கள் அவர்களின் அரசியல் நிலை எதுவாக இருக்கின்றது என்பதை பாருங்கள்...

ஆயுதம் என்பது ஒரு வளியே அண்றி அது மட்டும் தான் பலமாக வளி இல்லை... ஆயுதம் தமிழர்களுக்கு அவர்களின் தகுதிக்கு மிஞ்சிய பலத்தை கொடுத்தது தான் பிரச்சினையே, தவிர அந்த பலத்தை தக்க வைக்கவே போர் நடை பெற்றது...

அதேபோல இப்ப இருக்கும் எங்களை போண்ற பலவீனமான நிலைக்கு சிங்களத்தையும் கொண்டு வருவதின் மூலமே ஈட்ட முடியும்... சமரசம் மூலம் அல்ல.... !

ஆனால் தொடர்ந்து எங்களை புலிசார் அரசியல் எண்டு பலவீனப்படுத்துவதும் , அடிபடுவதும் கூட இன்னும் கேவலமான நிலைக்குதான் இட்டு செல்லும்..

Edited by தயா

தமிழர்களின் அரசியல் தான் புலிசார் அரசியல்.இங்கே புலிகள் என்னும் இயக்கத்தை உருவாக்கியவர்கள் வழி நடாத்தியவர்கள் ஆதரித்தவர்கள் எல்லோருமே நாம் தான்.புலிகளின் தோல்வி தமிழரின் தோல்வி தான்.கடந்த கால அரசியலில் இருந்து கற்ற பாடங்களுடன் தமிழரின் அரசியல் மேலும் முன்னேறும்.முன்னேற்ருவதற்கான நபர்கள்,அமைப்பு என்பன உருவாகும்.உருவாகும் அமைப்புக்களில் சரியான பாதை வகுத்தவர்கள் அதற்காக அர்ப்பனிப்புடன் செயற்படுபவர்கள் மக்களால் அங்கீகரிக்கப்படுவார்கள்.இதில் புலியைப் பேசுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.ஆனால் மாற்று என்று சொல்பவர்கள் அன்றில் இருந்து இன்று வரை இதையே தான் செய்து கொண்டு இருகிறார்கள்.இப்படிப்பட்டவர்களிடம் இருந்து அடுத்த கட்டப் போராட்டம் வெளிக்கிழம்பும் என்று நான் நம்பவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.