Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்Posted on ஜனவரி 19, 2011

பிரஞ்சு மொழியிலிருந்து ஊடறுவுக்காக தேனுகா

நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள்.ஏழு நிமிடத்திற்கு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள் கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது

25 நவம்பர் பெண்கள் மீதான வன்செயல்களை எதிர்க்கும் சர்வதேச தினம் கொண்டப்பட்டது. அதனால் பிரான்சில் உள்ள சில அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு கணக்கெடுப்பை செய்திருந்தன. அக்கணக்கெடுப்பின் போது தெரிய வந்த சில தகவல்கள்.பிரான்சில் நாளொன்றுக்கு குறைந்தது 200 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் தினமும் 200 பெண்கள் தினமும் பல பெண்கள் யாரோ ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் பெரும்பாலும் யார் தம்மை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குகிறார்கள் எனத் தெரிந்திருந்தும் சட்டத்தின் முன் முறைப்பாடு செய்வதற்கு, பாதிக்கப்பட்டவர்கள் எனும் குற்ற உணர்வு காரணமாக இன்னமும் தயங்குகிறார்கள் என பெண்கள் சார்பாகவும் பெண்களின் மீது வன்முறையை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக போராடும் பாதுகாப்பு சங்கத்தின் CFCV தலைவியும் மருத்துவருமான Emmanuelle Piet கூறுகிறார். நடைபெறும் பாலியல் வல்லுறவுகளில் நாலில் மூன்று தெரிந்த ஒருவராலேயே இழைக்கப்படுகிறது என்பது தான் கொடுமையானது. அவ்வன்முறையை செய்பவன் தகப்பனாகவோ,மாற்றாந்தகப்பனாகவோ மாமனாகவோ, ஆசிரியனாகவோ,மருத்துவனாகவோ, முதலாளியாகவோ, வேலைகொடுப்பனாகவோ இருக்கிறான் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

நாகரிகத்திற்கு பெயர் போன இந்த நாட்டில் வருடமொன்றில் 75,000தொடக்கம் 90,000 பெண்கள் இவ்வன்கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆண்களால் ஆளாக்கப்படுகிறார்கள். ஏழு நிமிடத்திற்கு ஒரு ஓரு பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறாள். கடந்த 2005 – 2006 காலப்பகுதியில் 18 – 60 வயதுடைய 130, 000 பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என OND எனும் இன்னொரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்படும் பத்துப் பெண்களில் ஒருவரே முறைப்பாடு செய்கிறார். ஆயினும் குற்றவாளிகள் ஒரு வீதம் அல்லது 2 வீதமே தண்டனை பெறுகிறார்கள் எனவும் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள். கடந்த 2009 இல் 160 பெண்கள் கணவன்மார்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் எனவும் ஆயிரக்கணக்கான பெண்கள் அடி, உதை ,சித்திரவதை என கணவர்களால் அனுபவிக்கிறார்கள் எனவும் பெண்கள் பாதுகாப்புச் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வன்முறைக்கு உள்ளாகின்றவர்கள் தாமாக முன் வந்தால் தாம் சட்ட நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அவ் பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு அமைப்பு (Viols Femmes Informations)

தொலைபேசி எண்: 0 800 05 95 95 (அழைப்பு இலவசம்)

நன்றி : ஊடறு

எங்கள் முதல்வரின் ஆட்சி பரவாயில்லை போலுள்ளது, காரணம் அங்கு காவல்துறை அவ்வளவு பலமானது :D

இந்தியாவில் பெண்களுக்கு மிகப் பாதுகாப்பான நகரம் சென்னை

இந்தியாவின் பெரு நகரங்களில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக உணரும் நகரமாக சென்னை விளங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் தேசிய குற்றவியல் ஆவணப் பணியகத்தின் (என்.சி.ஆர்.பி.) 2009 ஆம் ஆண்டு புள்ளி விபரங்களின்படி பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் இடம்பெற்ற 35 நகரங்களின் பட்டியலில் சென்னை 34 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் ஏனைய பெரு நகரங்களான டெல்லி, ஐதராபாத், அஹ்மதாபாத், பெங்களுர், மும்பை ஆகியன பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் இடம்பெற்ற பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன. 35 ஆவது கடைசி - இடத்தில் ஜார்கன்ட் மாநிலத்தின் தான்பாத் நகரம் உள்ளது.

பாலியல் வல்லுறவுகள், ஈவ்டீஸிங், தொந்தரவுகள், கடத்தல், சீதனக்கொடுமை, கணவர், மற்றும் உறவினர்களின் கொடூரங்கள் ஆகியவை தொடர்பாக உள்ளுர் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும் என்.சி.ஆர்.பியின் அறிக்கை குறித்து பலர் மாறுபாடான அபிப்பிராயங்களைத் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் குற்றச்செயல் குறித்து பெண்கள் புகாரிட மறுப்பதால்தான் குற்றச்செயல் குறைந்த நகரமாக பட்டியலிடப்படுவதற்கு காரணம் என அஹ்மதாபாத், சென்னை, பெங்களுர் ஆகிய நரங்களில் வசித்த கணினி மென்பொருள்துறை ஊழியர் ஆர்.பிரீத்தி தெரிவித்துள்ளார்.

ஈவ்டீஸிங், வீட்டு வன்முறைகள் என்பன இங்கு புகரிடப்படாமல் விடப்படுகின்றன. பாலியல் துஷ்பிரயோகங்கள், தொந்தரவுகள் குறித்து புகாரிடுவதற்கு பெண்கள் வெட்கப்படுகின்றனர். இது தமது நடத்தைக்கு ஒரு கறையாக அமைந்துவிடும் என அவர்கள் கருதுகின்றனர். டில்லி, மும்பை, பெங்களுர் போன்றவை இவ்விடயத்தில் அதிக முன்னேற்றகரமானவை என அவர் கூறியுள்ளார்.

அதேவேளை சென்னையில் இரவு 10 மணிக்கும் பெண்கள் தனியாக வெளியில் செல்லும்போது பாதுகாப்பாக உணர்வதாகவும் டெல்லி போன்ற நகரங்களில் இது ஆபத்தானது எனவும் எம்.மேகா எனும் மாணவி தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஊடகவியலாளரான டி.வினயா கருத்துத் தெரிவிக்கையில், சென்னை பாதுகாப்பான நகரம் என்ற போதிலும் இரவு நேரங்களில் வெளியிலிருக்கும் பெண்கள் தொடர்பான பொலிஸாரினதும் சமூகத்தினதும் நடத்தை விரோதமானதாக உள்ளது எனக் கூறியுள்ளார். மும்பை பொலிஸார் சினேகபூர்வமானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/15602-2011-01-27-17-59-42.html

பிரான்சில் உள்ளவர்கள் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என எழுதுவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.