Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியும் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியும்! (வீடியோ இணைப்பு)

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வாவுக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கருத்துமோதல் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வ்றாமிங்கம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில், சிறப்பு அதிதியாக கலந்த கொண்ட சவேந்திரா சில்வா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

வன்னிப் போரின் போது இடம்பெற்ற போர்குற்றங்கள், மனிதப் படுகொலைகள் குறித்து, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை மேஜர் ஜெனரல் சுமத்திக் கொண்டிருந்த வேளை, அரங்குக்குள் நுழைந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் உட்பட நான்கு தமிழர்கள் அங்கு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

பின்னர் கேள்வி நேரத்தின் போது, வன்னிப் போரின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டமை, இசைப்பிரியாவின் படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்பாக, சவேந்திர சில்வா மீது சுபா சுந்தரலிங்கம் அவர்கள் நேரடியாக குற்றம் சுமத்தினார்.

இதேவேளை, படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில், சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் சுபா சுந்தரலிங்கம் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியில் வெளியாகிய போர்குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்ற போர்குற்ற குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு விடயங்களை தனது கருத்துக்களின் ஆதாரங்களாக சுபா சுந்தரலிங்கம் முன்வைத்தார்.

இதேவளை அரங்கிற்கு வெளியிலும் தமிழர்கள் ஒன்றுகூடி தங்களுடை எதிர்பையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

வெள்ளநிவாரண நிதிக்காக, பௌத்த பிக்கு ஒருவரினால் இந்த மண்டபம் எடுக்கப்பட்டு, அரசியல் நோக்கங்களுக்கான பாவிக்கப்பட்டமை குறித்து தேவாலய நிர்வாகம் கடும் விசனம் அடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.

சுபா சுந்தரலிங்கத்து ஒரு வேண்டுகோள்:

முதலில் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

... தயவு செய்து இதில் உள்ள உங்களின், தமிழ் மொழியிலுள்ள விளக்கங்களை ஆங்கிலத்தில் , இன்னொரு இணைப்பாக வெளியிடுங்கள்!! ... கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழர்களுக்குள்ளேயே நாம் செய்த அரசியல் போதும்!!! இதனை வெளியுலகிற்கு கொண்டு செல்ல வேண்டும்!!!

... இனியும் பதிவுகளையும், சங்கதிகளையும், ... நம்பி அறிக்கை வெளியிடுவதுகளையும், பேட்டி அழிப்பதையுமோ அல்லது புலத்தில் ஓர் மூலையில் உள்ள பார்க்குகளில் பொங்கு தமிழை நடாத்தி தமிழிலேயே வெட்டி வீழ்த்துவதையும் ... நிறுத்த வேண்டும்! (.. பதிவு, சங்கதி போடாது என்பதற்கு அப்பால்!!!)

  • தொடங்கியவர்

இதில் அனவரும் ஒருமித்த கருத்தையே வெளிபடுத்தியிருக்கிற போதும்,கதிரைக்காக அடிபட்டவர்கள் இன்னும் சதி வேலைகளை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இப்போ எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டிய விடயம் கதிரயில் உட்கார்ந்தால் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இன்று இந்த பெண்மணி எவ்வளவு துணிச்சலாக மற்றும் மூன்று ஆண்கள் சகிதம் இந்த காரியத்தை சாதித்துள்ளார்.பின்னால் என்ன நடக்கும் என்று ஒரு கணம் சிந்தித்தால் நிலை மாறிக்கூடியிருக்கலாம். இப்படி துணிச்சலாக அதிரடியாக செயற்படுபவர்கள் தான் நாடுகடந்த அரசும் அதன் உறுப்பினர்களும் ஆகவே எமது நோக்கம் பொது நோக்கமே தான் இதில் மாற்று கருத்து இல்லை.ஆகவே புலம் பெயர் தமிழர்களே! புரிந்தும் புரியாமல் இருப்பதை விட புரிந்ததை கொண்டு செயல்படுவோம்.

இனத்தை காட்டிகொடுப்பதும்}ஒன்று

தாயை கூட்டிகொடுப்பதும்}தான்(சிறுத்தை)

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் வன்னித் தளபதி மீது சொற்கணைத் தாக்குதல்!

முன்னாள் வன்னித் தளபதி மீது சொற்கணைத் தாக்குதல்! (காணொளி, பட இணைப்பு)

செவ்வாய், 01 பெப்ரவரி 2011 01:11 .ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வாவுக்கும் - நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கத்துக்கும் இடையில்

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் வ்றாமிங்கம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற கருத்து மோதல் மிகவும் சுவாரஷியமாக உள்ளது.

வன்னிப் போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள்,மனிதப் படுகொலைகள் ஆகியன குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்களை மேஜர் ஜெனரல் சுமத்திக் கொண்டிருந்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி சுபா சுந்தரலிங்கம் உட்பட நான்கு தமிழர்கள் அந்நேரம் அரங்குக்குள் பிரவேசித்து கண்டனப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

மேஜர் ஜெனரலின் உரை நிறைவு பெற்றது. பார்வையாளர்கள் கேள்வி கேட்கின்றமைக்கும், கருத்துக்களைக் கூறுகின்றமைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சுபா சுந்தரலிங்கம் வன்னிப் போரின் போது வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக் கொல்லப்பட்டமை, இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டமை ஆகியவற்றுக்கு சுவேந்திர சில்வாவே நேரடிப் பொறுப்பு என்று குற்றம் சுமத்தினார்.

படைத் தரப்பால் மேற்கொள்ளப்பட்டவை என்று கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சியில் வெளியாகிய போர்க் குற்ற ஆதாரங்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்ற போர்க் குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு விடயங்களை ஆதாரங்களாக சுபா சுந்தரலிங்கம் முன்வைத்தார்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17770:2011-01-31-19-54-15&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

Edited by nunavilan

இணைப்புக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.