Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் பேசி பேசி மற்றவர்களை தீக்குளிக்க வைக்கிறீர்கள்? சீமான், நெடுமாறன் மீது ஈ.வி.கே.எஸ். தாக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பேசி பேசி மற்றவர்களை தீக்குளிக்க வைக்கிறீர்கள்? சீமான், நெடுமாறன் மீது ஈ.வி.கே.எஸ். தாக்கு!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து தோழமைக் கட்சிகளுடன் பேச அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து அறிவித்துள்ளார். இந்த குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் பெயர் இடம் பெறவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வியாழன் அன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர் ஒருவர் மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயச்சி செய்தபோது, அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து சமாதானப்படுத்தினர்.

அப்போது சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், தேழாமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் என்னை சேர்க்கவில்லை என்பதால் வருத்தமில்லை. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு அனைத்து விஷயங்களும் தெரியும். சட்டமன்ற உறுப்பினர் யசோதாவும் கட்சிக்காக பாடுபட்டவர். யசோதா எனக்கு ஆதரவு தருபவர் அல்ல. என்னை எத்தனையோ கூட்டங்களில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமைச்சராக இருக்கும்போது சிங்கமாக இருந்தார். இப்போது அசிங்கமாக இருக்கிறார் என்று சட்டமன்ற உறுப்பினர் யசோதா விமர்சித்துள்ளார். இருப்பினும் அவர்களையும் இந்தக் குழுவில் சேர்க்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.

ஐவர் குழுவில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்பட அனைவரும் பிரபலமானவர்கள்தான். அவர்கள் ஐவர் குழுவில் இடம் பெற்றிருந்தது சந்தோஷம்தான். ஆனால் தமிழகத்தில் எந்த தொகுதியில் காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ளது. எந்த தொகுதியை பெறலாம் என்பதை தெரிந்தவர்களும் இடம்பெற வேண்டும். குலாம் நபி ஆசாத்திடம் நான் பேசும்பபோது, தொகுதி பங்கீட்டுக்கான குழு பற்றி முடிவு செய்யவில்லை என்றார். ஆனால் ஐவர் குழு அறிவித்தவுடன் என்னிடம் பேசிய அவர், உங்கள் பெயர் இடம் பெறவில்லை. இது மேலிட உத்தரவு என்கிறார்.

சோனியா காந்தி போன் செய்யும்போது தங்கபாலு பேசுவதே கிடையாது. தங்கபாலு போன்ற ஜந்து கட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கேடு. சத்தியமூர்த்தி பவனில் இதுவரை இரவு நேரங்களில்தான் கூட்டம் சேர்ந்ததை பார்த்திருக்கிறார்கள். ஏன் என்றால் சத்தியமூர்த்தி பவனில் இரவு நேரங்களில் தங்கபாலு பூஜை போடுகிறார். ஆனால் இன்றுதான் பகலில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது. இதைப்பார்த்தால் நான் கட்சியில் இருந்து வெளியேறிவிடுவேனோ என்று பயந்து விடுவார்கள்.

திமுகவில் தொகுதி பங்கீட்டுக் குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் அனைவரும் ஜாம்பாவான்கள். திறமைசாலிகள். அமைச்சர் துரைமுருகனுக்கு தமிழகத்தில் எத்தனை ஆறுகள், குளங்கள், குட்டைகள் இருக்கின்றன என்பதெல்லாம் தெரியும். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் மனநிலை என்பது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும். திமுக குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு சமமாக காங்கிரஸ் குழுவில் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.

உண்ணாவிரதத்தின்போது இங்கே நமது தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முற்பட்டார். ஏன் தீக்குளிக்க வேண்டும். பிரச்சனை வந்தால் எதிர்த்து போராட வேண்டும். தீக்குளிப்பது கோழைத்தனம். முத்துக்குமார் தீக்குளித்து தியாகம் செய்தார் என்று சீமான், நெடுமாறன் போன்றவர்கள் பேசுகிறார்கள். ஏன் இப்படி பேசி பேசி மற்றவர்களை தீக்குளிக்க வைக்கிறீர்கள். அதை நீங்கள் செய்ய வேண்டியதுதானே. ஏன் செய்யவில்லை. அதை சீமானும், நெடுமாறனும் செய்தால் தமிழ்நாடு நன்றாக இருக்கும்.

இங்கே கூடியிருக்கும் தொண்டர்கள் அனைவரும் எனக்காக அமைதியாக கலைந்து செல்ல வேண்டும். எந்த அசம்பாவிதத்திலும் ஈடுபடக்கூடாது. அனைவரும் தங்கள் உடைகளை உதறிவிட்டு போக வேண்டும். ஏனென்றால் சத்தியமூர்த்தி பவனில் இருந்து மண்ணைக்கூட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அவரது ஆதரவாளர்களும் எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று சொல்வார்கள் அதற்கானத்தான் என்றார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=48352

துநீசியாவிலும் தீக்குளித்தான் ஒருவன். என்ன நடந்தது? அந்த நாட்டின் அதிபர் பதிவியில் இருந்து இறக்கப்பட்டார். அது எகிப்துக்கும் பரவி அதன் அதிபர் இன்று பதவி இறங்கினாலும் இறங்குவார்.

இன்று காங்கிரசும் ஈ.வி.கே.எஸ், அவர்களும் முடிந்தால் சீமானையும் நெடுமாறன் அய்யாவையும் எப்படியாவது அரசியலில் இருந்து அகற்றி விட துடிப்பது நியாயம் தான். இப்படியானவர்களும் இல்லாவிட்டால் காங்கிரஸ் - திமுக கூட்டணியினர் தமிழகத்தையும் பின்னர் தமிழீழ தமிழர்களையும் முழுமையாக அடிமைகளாக்கி விடலாம்.

முத்துக்குமார் உட்பட தீக்குளித்த அனைத்து தமிழர்களையும் ஏளனம் செய்யதும் இவர்களை தேர்தலில் தமிழர்கள் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானில், நெடுமாறனின் பேச்சைக் கேட்டுச் செயற்படும் அளவுக்காக இந்த முட்டாளின் தொண்டர்கள் இருக்கின்றார்கள் என்பது அத் தொண்டர்களின் நம்பகத்தன்மையை அசிங்கப்படுத்துகின்ற செயல்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.