Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிறிஸ்துவர்கள் யாரும் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது. பிஷப்புகள் கருத்துக்கு முதல்வர் அதிர்ச்சி.

Featured Replies

சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்துவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு காய் நகர்த்தி வருகின்றன. கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்து பாதிரியார்கள் மூலம் பேச்சுவார்த்தைகளும் நடத்தி வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், அண்மையில் கூடிய பிஷப்புகள் கவுன்சிலில் கிறிஸ்துவர்கள் யாரும் ஆளுங்கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று பிஷப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் உளவுத்துறை மூலமாக முதல்வருக்குத் தெரியவர, அதிர்ந்து போனாராம்.

கடந்த நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை சென்னை சாந்தோமிலுள்ள ஆர்ச் பிஷப் அலுவலகத்தில் பிஷப் கவுன்சில் கூட்டம் கூடியது. தமிழகத்திலுள்ள அனைத்து மறை மாவட்டங்களிலிருந்தும் பிஷப்புகள் இதில் கலந்து கொண்டனர். பிஷப் கவுன்சிலின் தலைவர் பிஷப் சின்னப்பா தலைமையில் இந்தக் கூட்டம் நடந்தது. சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் வின்சென்ட் சின்னதுரை உட்பட பல்வேறு பிஷப்புகளும் ஆஜராகியிருந்தனர்.

ஆரம்பத்தில் அமைதியாக நடந்த விவாதங்கள் கொஞ்ச நேரத்தில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன. ‘‘தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து நம் கோரிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. எனவே, இந்த முறையும் நமது சபை மக்களிடம் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று செய்தி அனுப்பிவிட வேண்டும்’’ என்று பலர் கோபமாகப் பேசியுள்ளனர்.

பெரும்பாலான பிஷப்புகளின் கருத்து இதுவாக இருக்க, கவுன்சிலின் தலைவர் சமாதானம் செய்ய முயற்சித்தும் யாரும் கேட்கத் தயாராக இல்லை. மூன்று நாட்கள் நடந்த இந்த விவாதத்தில் கடைசியாக, ‘‘நமது கோரிக்கைகளை நிறைவேற்ற இன்னும் சில தினங்கள் அவகாசம் தரலாம். இப்போது நடந்து கொண்டிருக்கும் கடைசி சட்டமன்றத் தொடரிலும் கிறிஸ்துவர்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படாவிட்டால் நாம் தி.மு.க.விற்கு எதிர்ப்பு நிலை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று பேசி முடிவெடுத்துள்ளனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பிஷப் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அ.தி.மு.க. ஆட்சியில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்காகவே, அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கக் கூடாது என்று கடந்த தேர்தலில் முடிவெடுத்தோம். ஆனால், கிறிஸ்துவர்களின் ஆதரவாளர் என்பதைப் போல் பேசிவரும் முதல்வரோ எங்களை கொஞ்சமும் மதிப்பதில்லை. எங்கள் கோரிக்கைகளைக் கண்டு கொள்வதேயில்லை.

தலித் கிறிஸ்துவர்களையும், வன்னிய கிறிஸ்துவர்களையும் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் சேர்க்க வேண்டும் என்பது எங்களின் நீண்டநாள் கோரிக்கை. அதாவது, மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்காமல் ஜாதியின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

ஈழத்தமிழர் பிரச்னை, எங்களின் கோரிக்கை போன்ற மக்கள் பிரச்னைக்கு பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார் முதல்வர். ஆனால் கூட்டணி, அமைச்சரவையில் பங்கு போன்றவற்றுக்கு டெல்லிக்கு நேரிலும் சென்று பேசுகிறார். எங்கள் பிரச்னையை டெல்லியில் அவர் ஒருமுறை அழுத்தமாகப் பேசினாலே போதும். மத்திய அரசு அதைப் பரிசீலித்து நிறைவேற்றும்.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தலித் கிறிஸ்துவர்கள், பாதிரியார்கள், பிஷப்புகள் என சுமார் ஐயாயிரம் பேர் கடந்த ஆண்டு கன்னியாகுமரியிலிருந்து பாதயாத்திரையாக வந்து முதல்வரைச் சந்திக்கச் சென்றோம். எங்களைப் பார்க்க மறுத்த முதல்வர், எங்கள் கோரிக்கை மனுவை ஒரு சாதாரண அதிகாரியிடம் கொடுத்து விட்டுப் போகச் சொன்னார்.

எங்களை சந்திக்கக்கூட விரும்பாத முதல்வர் எங்களின் வாக்குகளை மட்டும் விரும்புகிறார். தமிழகத்தில் சுமார் 80 லட்சம் கிறிஸ்துவர்கள் உள்ளனர். அவர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என இந்த பிஷப் கவுன்சிலில் பேசி முடிவெடுத்து எல்லா சர்ச்சுகளுக்கும் சர்க்குலர் அனுப்புவோம்.

தொண்ணூறு சதவிகித கிறிஸ்துவர்கள் எங்கள் பிஷப் கவுன்சிலின் முடிவுக்குக் கட்டுப்படுவார்கள். அதிலும் கிராமப்புறங்களில் உள்ள கிறிஸ்துவர்கள் இந்த உத்தரவை மிகவும் மதித்துச் செயல்படுபவர்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில், ‘அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று நாங்கள் அறிவித்தோம். எனவே, பெரும்பாலான கிறிஸ்துவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் தேர்தலில் வெற்றியை நிர்ணயிப்பதே கிறிஸ்துவர்களின் வாக்குகள்தான்.

91-க்குப் பிறகு தொடங்கப்பட்ட அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு ஆசிரியர் பணிகளுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் விஷயம் என்பதால், அரசு இந்த விஷயங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார் அந்த பிஷப்.

இதுகுறித்து பிஷப் கவுன்சில் தலைவர் சின்னப்பாவின் கருத்தறிய அவரை பலமுறை தொடர்பு கொண்டும், அவரிடமிருந்து நமக்கு பதில் கிடைக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு ‘தங்கத்தாரகை’ விருது வழங்கிய பிஷப் பிரகாஷிடம் இதுகுறித்துக் கேட்டோம்.

‘‘தி.மு.க.வும் சரி, அ.தி.மு.க.வும் சரி கிறிஸ்துவர்களை தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக தலித் கிறிஸ்துவர்களுக்கான சட்டபூர்வமான உரிமைகள்கூட இங்கே மறுக்கப்படுகின்றன. தமிழகத்தில் எந்தக் கட்சி ஆண்டாலும் அது மத்திய அரசிடம் வலியுறுத்தி தலித் கிறிஸ்துவர்களுக்காக சலுகைகளைப் பெற்றுத்தர முடியும். ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் தலித் கிறிஸ்துவர்களை கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை’’ என்றார் அவர்.

இந்தப் பிரச்னை குறித்து, முதல்வர் கருணாநிதியை அழைத்து கிறிஸ்துமஸ் விழா நடத்தியவரும், நல்லெண்ண இயக்கத்தின் தலைவருமான இனிகோ இருதயராஜிடம் கேட்டோம்.

‘‘தி.மு.க. அரசு கிறிஸ்துவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. கிறிஸ்துவர்களின் கல்லறைக்காக நாங்கள் இடம் கேட்டதும், கிழக்குக் கடற்கரைச் சாலையில் நான்கு ஏக்கர் இடத்தை அரசு ஒதுக்கியுள்ளது. தலித் கிறிஸ்துவர்களுக்கான கோரிக்கை குறித்து முதல்வர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆசிரியர் பணி நியமன விஷயத்திலும் தமிழக அரசு சிறுபான்மையினர் நலன் கருதி எங்களுக்குச் சாதகமான அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறோம். மதமாற்றத் தடைச் சட்டத்தை மறந்து விட்டு கிறிஸ்துவர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்’’ என்றார் அவர்.

எப்படியோ கிறிஸ்துவர்களின் வாக்குகளைப் பெறும் ரேஸில் ஜெயிக்கப்போவது யார் என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

thanks to kumudam reporter.

கிறிஸ்துவர்களுடன் தமிழகத் தலைவர்கள் இருக்கும் புகைப்படங்கள் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=24258

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான கிறிஸ்தவர்கள் ஜேசுவிற்கு மட்டுமே வாக்கு அழிக்கவேண்டும்.

பெருவாரி பணத்தை வாரியிறைத்து திராவிடத்தை மறைமுகமாக ஆதரித்து இந்துக்களை இழிவுபடுத்திய பிசப்புக்களின் துரோகத்தனம். பச்சோந்திகளை நம்புபவர்கள் கதை இப்படித்தான் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.