Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை கடற்படையினரே மீனவர்களை கைதுசெய்தனர்

Featured Replies

பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் - இலங்கை கடற்படையினரே மீனவர்களை கைதுசெய்தனர் - இந்திய ஊடகங்கள் தகவல்

தமிழக மீனவர்கள் 112 பேரையும் அவர்களின் 18 இழு வைப் படகுகளையும் இலங்கைக் கடற்படையினரே கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் 112பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், இச் சம்பவத்தை இந்தியப் பிரதமர் வன்மையா கக் கண்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன. டில்லியிலுள்ள பிரத மர் மன்மோகன் சிங்கின் வாசஸ்தலத் தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப் பொன்றிலேயே பிரதமர் மன்மோகன் சிங் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 112 பேரையும் அவர்களின் 18 இழுவைப் படகுக ளையும் வடமராட்சி கடற்தொழிலா ளர்கள் மடக்கிப் பிடித்து பருத்தித்துறைக்குக் கொண்டுவந்ததாக இங்கு செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இலங்கைக் கடற்படையினரே தமிழக மீனவர்களைக் கைதுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட விவ காரம் இந்திய மத்திய அரசை ஆத் திரமடையச் செய்துள்ளதாகவும், இச் சம்பவம் இலங்கை - இந்திய உறவைப் பாதிக்கும் என்றும் இந்திய இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=16295

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் இரட்டைவேடம் போடுவதாக குற்றச்சாட்டு

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் இரட்டைவேடம் போடுவதாக தமிழத் தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டினார்.

மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து இந்திய அரசுக்கு வழங்கிய உறுதிமொழிகளை காப்பாற்றுவதுபோல செயற்பட்டுக் கொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள சில மீனவர்களை தூண்டிவிட்டு அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாக கூறிய செல்வம் அடைக்கலநாதன் தமிழக மீனவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென நம்பிக்கை வெளியிட்டார்.

இது தொடர்பாக எமது செய்தியாளரிடம் இன்று காலை கருத்து வெளியிட்ட செல்வம் அடைக்கலநாதன் - பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணுமாறு மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனரட்ணவிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களில், யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண மீனவர்கள், 138 தமிழக மீனவர்களைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்கள். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அவர்கள், எதிர்வரும் 28 ஆந் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6526

கடும் தொனியில் பிரதமர் கருத்து; பிணையில் விடுவிக்க ஏற்பாடு; இலங்கை பதில்

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=7693:-2000-&catid=34:hotn-news&Itemid=99

Edited by akootha

இந்த, சுற்றிவளைப்பு கைது சிங்கள அரச பயங்கரவாதிகளின், இந்திய ரோ பயங்கரவாதிகளின் எடுபிடி டக்லஸ் கும்பலினால், சிங்கள கடற்படையின் உதவியுடன் செய்யப்பட்டது என்பது - வடமராட்சி நண்பர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கும்பலுடன் வட இந்தியர் போன்ற தோற்றமுடைய சிலரும் இருந்துள்ளனர்.

வடமராட்சி மீனவ சங்கத் தலைவர் சிங்கள கடற்படையின் கட்டளைக்கு அமைய, வேறு வழியின்றி செயற்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.