Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கூட்டமைப்பு எம்.பி யோகேஸ்வரனுக்கு ஒரு சபாஷ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கூட்டமைப்பு எம்.பி யோகேஸ்வரனுக்கு ஒரு சபாஷ்!

வெள்ளி, 25 பெப்ரவரி 2011 20:31

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மன் ஆலயங்களில் நேர்த்திக் கடன்களின் பொருட்டு மக்களால் வழங்கப்பட்ட நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான சேலைகளை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பியுமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இவர் இவ்வாலயங்களின் தர்ம கர்த்தாக்களுக்கு இக்கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளார்.

இவர் இக்கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பவை வருமாறு:-

"இந்து சமயம் சனாதன தர்மம். எனவே இந்து ஆலயங்களின் நிதிகள், சொத்துக் கள் ஆகியவற்றை பொதுமக்கள் பாதிக்கப்படும்போது அம்மக்களின் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தல் மிகவும் அவசியமானது ஆகும்.

எனவே சகல இந்து ஆலயங்களும் சமூக சேவைகளில் இறங்க வேண்டும். ஆலய நிதியில் குறைந்தது ஐந்து வீதமாவது சமூகசேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

உங்கள் கிராமங்களில் அம்மன் ஆலய சேலைகளை வறிய மக்களுக்கு வழங்க முடியாவிடில் வேறு கிராமங்களில் மிகவும் வறிய நிலையில் அனர்த்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்து அம்மன் ஆலயங்களில் நேர்த்திக்காக வரும் ஆடுகள் கோழிகள், மாடுகள் போன்றவை ஏலத்தில் விடப்பட்டு நிதி சேகரிக்கப்படுகின்றது. ஆனால் சேலைகள் மக்கள் பாவனைக்கு வழங்கப்படாது பெட்டகங்களில் பூட்டி வைக்கப்படுகின்றன.

கறையானால் அரிக்கப்படுகின்றமையும் உண்டு.. பாதிக்கப்படும் மக்களுக்கு இச்சேலைகளை வழங்க முடியாவிடில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையிடம் அவற்றைக் கையளிக்க வேண்டும்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களை சமூக சேவைகளிலும் ஈடுபடுத்துகின்றமையே எமது நடவடிக்கை.

இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள இந்து ஆலயங்களில் இருந்து அனர்த்தப் பாதிப்புகளுக்கான உதவிகள் கிடைக்கும்போது எமது மாவட்டத்தில் உள்ள நிதி வளம் கூடிய இந்து ஆலயங்கள் ஏன் உதவ முடியாது? ஆலய தர்ம கர்த்தாக்களின் கடமைகள் ஆலயங்களை புனரமைக்கின்றமையும், பூசைகளை ஒழுங்கமைக்கின்றமையும் மாத்திரம் அல்லவே.

ஆலயங்கள் மூலம் சமூகத்துக்கு சேவை வழங்குகின்றமையும் இன்றியமையாதது. பிரித்தானியாவின் லண்டன் சைவத் திருகோயில் ஒன்றியம் எமது ஆலயங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

லண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயம், லண்டன் சிவன் ஆலயம், லண்டன் கணபதி ஆலயம், லண்டன் உயர் வாசல் குன்று முருகன் ஆலயம், லண்டன் நாகபூசணி அம்மன் ஆலயம், லண்டன் கற்பக விநாயகர் ஆலயம், லண்டன் சிவயோகம் முத்துமாரியம்மன் ஆலயம், சுவிற்சலாந்து நவசக்தி விநாயகர் ஆலயம், கனடா ஐயப்பன் ஆலயம் போன்றவை எமது இலங்கைத் திருநாட்டில் அனர்த்தத்தால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு பெரிதும் உதவி புரிந்து வருகின்றன.

அத்துடன் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்களை செயற்படுத்துகின்றன. சிறுவர் பராமரிப்பகம், முதியோர் பராமரிப்பகம் உட்பட்ட பல சேவை நிலையங்களை நடத்துகின்றன.

சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. கல்வி சார் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆலயங்களைப் போலவே எமது நாட்டின் இந்து ஆலயங்களும் சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்."

நன்றி - தமிழ் CNN

இவரின் வேண்டுகோள் வெற்றியளிக்க வேண்டும்.

உலகத்தில் (தாயகம் + புலம்பெயர் தேசம்) உள்ள ஈழத்தமிழர்களின் ஆலயங்கள் இதில் பாதியை செய்தாலே எமது மக்களின் வறுமையும், பிணியும் அகன்றுவிடும். நல்ல ஒரு வாழ்வுக்கு வழிசமைத்துவிடும்.

கோயில்களுக்கான சேவையே அதுதானே. சொல்லித் தெரிய வைக்கவேண்டியுள்ளது தர்மகர்த்தாக்களுக்கு.

இக்காலத்துக்கு அவசியமானதை யோகேஸ்வரன் கூறியுள்ளார்.

காசு சேர்ப்பதில் மட்டும் குறியாக இருக்கும் கோயில் தர்மகர்த்தக்களின் களிமண் மூளைக்கு இவை விளங்குமோ தெரியவில்லை.

விளங்காவிட்டால் சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் விளங்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.