Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவை முற்றாக புறம்தள்ள சிறீலங்கா திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mar 4, 2011 / பகுதி: செய்தி /

இந்தியாவை முற்றாக புறம்தள்ள சிறீலங்கா திட்டம்!

சம்பூர் பிரதேசத்தில் இந்திய நிறுவனத்தினால் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்குவதை சிறீலங்கா அரசு தாமதப்படுத்தி வருவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரவித்துள்ளார். சம்பூர் நிலக்கரி அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான ஆவணங்கள், அது குறித்த உத்தேச மின்வலு, எரிசக்தி தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கை சிறீலங்கா ஜனாதிபதியின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் நிலக்கரி அனல் மின் உற்பத்திக்கான மூலப்பொருளின் விலை அதிகரித்து வருவது குறித்த அறிக்கையையும், நிலக்கரி அனல் மின் உற்பத்தியினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த அறிக்கைகளையும், அமைச்சர் சம்பிக்க ரணவக்க மகிந்தாவிடம் சமர்ப்பித்ததை அடுத்து, குறித்த அனல் மின் உற்பத்தி நிலைத் திட்டம் குறித்த தீர்மானம் எடுப்பது காலம் தாழ்த்தப்படுவதாகக் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இயற்கை திரவ வாயு மூலம் சம்பூரில் மின் உற்பத்தியை மேற்கொள்ள இந்திய அரசு இணங்குமானால் அதுகுறித்து ஆராய்வதற்கு மகிந்தா தயாராக இருப்பதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் அதிகாரிகளின் கையொப்பமில்லை, ஆவணங்களை காணவில்லை என்ற காரணங்களை கூறி இந்தியாவின் திட்டத்தை இழுத்தடிப்பு செய்துவந்த சிறீலங்கா அரசு தற்போது புதிய காரணங்களை தெரிவித்து வருகின்றனது. திருமலை பகுதியில் இந்தியா உள்நுளைவதை சீனா விரும்பவில்லை என்பதே இந்த பின்னடிப்புக்கான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம், போரில் தந்திரமாக இந்தியாவை பயன்படுத்திக்கொண்ட சிறீலங்கா அரசு, தற்போது இந்தியாவை முற்றாக ஓரம்கட்ட முற்பட்டுவருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், தமிழக மக்களுக்கும், ஈழத்தமிழ் மக்களுக்கும் குறிப்பாக வடபகுதி தமிழ் மக்களுக்கும் இடையில் பகையை ஏற்படுத்த சிறீலங்கா அரசு முயன்று வருவதாற்கான காரணங்களும் அதுவே என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டம். சரியான படிப்பினை கிந்தியனுக்கு.. மகிந்தா மாத்தையோ அப்பிடிப் போடுங்கோ! ஆனா சூடு சுரணை கெட்ட கிந்தியாவுக்கு என்னத்தைச் செய்தும் திருந்தாது...

"இந்தியாவை முற்றாக புறம்தள்ள சிறீலங்கா திட்டம்!"

எந்த செய்தியையும் போன்று இந்த செய்தியையும் கொஞ்சம் அவதானமாக பார்க்கவேண்டும்.

அனல்மின் தொழில்சாலைக்கு அனுமதி அளிக்கவில்லை, அதற்காக நாம் அவசரப்பட்டு முழு இந்தியாவிற்கும் சிங்களம் எதிர்ப்பு காட்டுகின்றது என எண்ணிவிட முடியாது.

இன்று இந்தியாவின் ஒரு வைத்தியசாலை நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்துள்ளது.

Fortis acquires 28.6% in Lanka Hospitals for Rs 162 crore

http://www.business-standard.com/india/news/fortis-acquires-286-in-lanka-hospitals-for-rs-162-crore/427373/

மேலும், இந்த தகவலின் படி இந்தியாவே சிங்களத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் சம்பந்தமான சர்வதேச வழக்குகளுக்கு தடையாக உள்ளது.

UN BAN’S CHALLENGE- DELHI ‘S CONSPIRACY TO KILL OFF SRI LANKA WAR CRIMES INITIATIVES

http://www.groundreport.com/Business/UN-BAN-S-CHALLENGE-DELHI-S-CONSPIRACY-TO-KILL-OFF-_1/2935623

1992 முதல் இந்திய பயங்கரவாதிகள் சிங்கள அரசின் பின்னால் சொறி நாய்களாக அலைந்து கொண்டுள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.