Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் ஆயுதக் குழுக்கள் எவற்றிடமும் ஆயுதங்கள் இல்லை என்றால் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் படையினருக்கு எதிரானவையாகவே இருக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஆயுதக் குழுக்கள் எவற்றிடமும் ஆயுதங்கள் இல்லை என்றால் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் படையினருக்கு எதிரானவையாகவே இருக்கும் : அமைச்சர் விமல் வீரவன்ஸவின் கருத்துக்கு சரவணபவன் எம்.பி. சபையில் சாட்டை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான தாக்குதல் தொடர்பில் முறையற்ற கருத்தைத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு சபையில் வைத்தே முறையான சாட்டையடி வழங்கினார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதைப் பொலிஸ் மா அதிபர் ஆதாரத்துடன் தெரிவிக்கும் போது அமைச்சருக்கு மட்டும் அது எப்படி சோடிக்கப்பட்ட வித்தையாகத் தெரிந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

""உண்மை ஒன்றாக இருக்க அமைச்சர் விமல் வீரவன்ஸ பொறுப்பற்ற வகையில் பேசி கூட்டமைப்பினர் மீது சேறுபூச முயல்கிறார். இந்தச் சபையில் பேசுபவர்கள் தாம் எங்கு பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும். உண்மையான விடயங்களைக் கூற வேண்டும். இங்கு பேசப்படுபவை பொது மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் சென்று சேர்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான தாக்குதல் சோடிக்கப்பட்ட ஒரு புனைகதை என்றார். சிறிதரனின் வாகனத்தின் சக்கரங்களுக்கு மட்டுமே சுடப்பட்டது என்றும் அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறினார்.

இதற்கே தகுந்த ஆதாரங்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தக்க சாட்டையடி கொடுத்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி சோடிக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை என்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ஸ. வாகனத்தின் டயர் மீது மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் ஏனைய விடயங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் கூறினார்.

பொலிஸ் மா அதிபரை நேரில் சந்தித்துச் சம்பவம் பற்றி அறிவதற்கு சபாநாயகர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இருந்து சற்று முன்னரே இந்தச் சபைக்கு வந்திருந்தோம். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை பொலிஸ் மா அதிபர் அந்தச் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் அந்தப் பிரதேச சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சம்பவம் தொடர்பில் வழங்கிய அறிக்கையையும் காண்பித்தார்.

உண்மை இவ்வாறிருக்க அமைச்சர் வீரவன்ஸ பொறுப்பற்ற வகையில் பேசுகின்றார். நாட்டில் பல ஆயுதக் குழுக்கள் இருந்துள்ளன. இன்றும் பல ஆயுதக் குழுக்கள் இயங்கத்தான் செய்கின்றன. இக்குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவில்லை. இந்த விடயத்தைப் பொலிஸ் மா அதிபரிடம் நான் நேரடியாகவே கூறி இருக்கின்றேன்.

இது தொடர்பில் ஒரு விடயத்தை இந்தச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். விடுதலைப் புலிகள் இல்லை என்று பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது; அதிகாரபூர்வமாகப் படையினர் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும். அப்படி எனில் எப்படி மற்றையவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்?

வடக்கில் இன்றும் அதிகளவில் கொலைகள் மற்றும் சாவுகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் விவாதத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலை நாம் வாசிக்கின்றோம். அதனால், படையினர் தவிர்ந்த ஏனையவர்களும் ஆயுதங்களைக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவானது.

தமிழ் ஆயுதக் குழுக்கள் எவற்றிடமும் ஆயுதங்கள் இல்லை என்று நீங்கள் சொல்வீர்களாக இருந்தால், குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் படையினருக்கு எதிரானவையாகவே இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சபையில் பேசிய மற்றொரு அமைச்சரான சம்பிக்க ரணவக்க இங்கு வேறொரு கதையை அவிழ்த்து விட்டார். புலிகளின் தலைவர் பிரபாகரன் கொழும்பில் சட்டத்தரணிகள் குழு ஒன்றை வைத்திருந்தார் என்றும் தெற்கில் கொலை செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியல் அவர்கள் மூலமே தயாரிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

இது உண்மையானால் ஏன் இவ்வளவு காலமும் இது பற்றி அமைச்சர் தெரியப்படுத்தவில்லை. ஊடகங்களில் கூட அப்படியான செய்திகள் வெளியிடப்படவில்லையே?அமைச்சரால் அவர் கூறியவற்றை நிரூபிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் அவர் கூறியதில் எந்த உண்மையும் இல்லை. இந்த உயர் சபையில் எதையும் பேசி விடலாம் என்ற சிறப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தி எல்லாவற்றையும் பேசக் கூடாது.

மற்றொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். "இந்த நாட்டின் எந்த ஒரு பிரஜையும் நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் சுதந்திரமாகச் சென்று வரலாம்" என்று ஜனாதிபதி கூறிய 15ஆவது நாளில் கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீதான தாக்குதல் இடம்பெற்றது.

தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தனது அரசியல் எதிரிகளே என்று அவர் கூறி இருக்கிறார். உள்ளூராட்சி சபைத் தேர்தல்களும் நடைபெற உள்ள நிலையில் அதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதனையும் நாங்கள் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம்.

அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான ஒவ்வொரு விவாதத்தின் போதும் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காகவும் முறியடிக்கப்பட்ட பயங்கரவாதம் பற்றியுமே பேசுகிறீர்கள். எந்த ஒரு விவாதமும் புலிகளைப் பற்றிப் பேசாமல் முற்றுப் பெற்றதில்லை.

அதாவது பரவாயில்லை, புலம்பெயர் தமிழர்களின் சூழல் மற்றும் கஷ்டங்கள் பற்றி எதுவுமே தெரியாமல் அவர்களின் கௌரவத்தைப் பாதிக்கும் வகையில் அவர்களை புலி முத்திரை குத்தி விமர்சிக்கிறீர்கள்.

புலம்பெயர் தமிழர்களிடம் இருந்துதான் இந்த நாட்டுக்குப் பெருமளவு அன்னியச் செலாவணி கிடைக்கிறது என்பதை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மத்திய வங்கிக்குச் சென்று பார்த்தால் இது புரியும். எந்ததெந்த நாடுகளில் இருந்து அந்நியச் செலாவணி வருகின்றது என்பதைக் கண்டு கொள்ளலாம். அந்தப் பணம் முழுவதும் இந்த நாட்டின் அபிவிருத்திக்குத் தானே பயன்படுத்தப்படுகிறது? எனவே எதைக் கூறுவதற்கும் முன்னர் நிதானமாகவும் அவதானமாகவும் பேசுங்கள் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=1005

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.