Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்நாட்டின் இராணுவ, அரச அதிகாரிகள் வெளிநாட்டவரால் விசாரிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்: ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்நாட்டின் இராணுவ, அரச அதிகாரிகள் வெளிநாட்டவரால் விசாரிக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்: ஜனாதிபதி _

வீரகேசரி நாளேடு 3/12/2011 9:22:39 AM Share

எமது நாட்டின் இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் வெளிநாட்டவரினால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினாலேயே இடம்பெற வேண்டும்.

அத்துடன் நாட்டையும் அதன் இறைமையையும் பாதுகாப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன்.

அதனை காட்டிக் கொடுப்பதற்கு நான் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

நாட்டு மக்களுடனான ஜனாதிபதியின் நேரடி சந்திப்பு நிகழ்வு நேற்றிரவு இடம்பெற்றது. இதன்போது வவுனியா, பசறை, யாப்பஹூவ, கட்டான, உடநுவர, பொலன்னறுவை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த பொது மக்கள் செய்மதி தொழிநுட்ப வசதியினூடாக ஜனாதிபதியிடம் நேரடியாக தமது பிரச்சினைகளை தெரிவித்து கேள்விகளையும் எழுப்பினர்.

அவர் இதற்கான பதில்களை அளித்தார். இதன்போது கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். _

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மக்களுக்கு மஹிந்த காலக்கெடு அறிவிப்பு!

Posted by admin On March 12th, 2011 at 2:06 pm

நாட்டுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசாரம் மேற்கொள்ளும் சதிகாரர்களுக்கு எதிர்வரும் 17ம் திகதி நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பேசுவதற்கு எதுவுமில்லாமல் மனித உரிமை பற்றி பேசும் இவர்கள், அமெரிக்க நீதிமன்றத்தில் எனக்கெதிராக வழக்குத் தொடரவும் 30 மில்லியன் அமெரிக்கன் டொலர்களை நட்டஈடாகக் கோரவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நாட்டு மக்கள் மீது எமக்கு நம்பிக்கையுண்டு. அனைத்திலும் வெற்றிபெறுவோம். அந்த வெற்றியை எமது எதிர்கால பரம்பரைக்குக் கையளிப்போம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் மாவட்டத் தேர்தல் மாநாடு நேற்று முன்தினம் பண்டாரவளை நகர மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இலங்கையில் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளது எனவும் மனித உரிமை மீறல்கள் கருத்துச் சுதந்திரமின்மை இங்கு நிலவுவதாகவும் குற்றம் சாட்டி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி வெளிநாடுகளில் பிரசாரம் செய்வதையே வேலையாகக்கொண்டுள்ளது. அவர்கள் கிராமங்கள் அபிவிருத்தியடைவதை விரும்பாதவர்கள் வெளிநாடுகளில் இருந்தே சகலதும் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென விரும்புபவர்கள்.

நாட்டு மக்கள் கடந்த தேர்தல்களிலும் எம்மை அமோக வெற்றிபெறச் செய்தனர். இம்முறையும் எமது வெற்றி உறுதியாகிவிட்டது. அதனைப் பொறுக்க முடியாதவர்களே பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை தேர்தல் அரசாங்கத்தை அமைக்கவோ அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ நடத்தப்படும் தேர்தலல்ல. இது கிராமங்களை முன்னேற்றுவதற்காக கிராமங்களுக்காக வேலை செய்யும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல். ஊவா மாகாணத்தைப் பொறுத்தவரை பல பாராளுமன்ற, மாகாண அமைச்சர்கள் உள்ளனர். இந்தப் பிரதேசங்களில் முழுமையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ள மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்க வேண்டியது அவசியம்.

நாம் 30 வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை அபிவிருத்தியில் கட்டியெழுப்ப சகல நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளோம்.

மேல் மாகாணத்திற்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை கிராமங்களுக்கும் முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதற்கு சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியம். கடந்த 2005 ஜனாதிபதித் தேர்தலின் போது அரிசி ஒரு கிலோ நூற்று இருபது ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது போதியளவு அரிசி எமக்கு உள்ளது.

அரசாங்கம் விவசாயிகளுக்காக பாரிய சலுகைகளை வழங்கி வருகிறது. யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பணம் எங்கே எனக் கேட்பவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. நாம் கடந்த ஆட்சியாளர்களைப் போன்று வெளிநாட்டு உற்பத்திகளில் நம்பிக்கை வைக்கவில்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

saritham

சிங்கள தலைவர்களுக்கையும் மக்களுக்கையும் இருக்கும் இந்த ஒற்றுமை தமிழர்களுக்கை இருந்து இருந்தால் தமிழருக்கு இந்த நிலை வர வாய்ப்பே இல்லை....!

சிங்கள தலைவர்களுக்கையும் மக்களுக்கையும் இருக்கும் இந்த ஒற்றுமை தமிழர்களுக்கை இருந்து இருந்தால் தமிழருக்கு இந்த நிலை வர வாய்ப்பே இல்லை....!

சிங்களவன் அப்படிச் சொல்கிறான், ஆனால் நாங்கள் காட்டிக் கொடுக்க கியூவில நிக்கிறம்

சிங்களவன் அப்படிச் சொல்கிறான், ஆனால் நாங்கள் காட்டிக் கொடுக்க கியூவில நிக்கிறம்

பிரபாகரன் மட்டும் தான் பிரச்சினையான ஆள்.... அவரை அழிச்சால் போதும் தமிழருக்கு நன்மையே செய்யாமல் தங்கட நோக்கத்தை நிறைவேற்றலாம் எண்டு சர்வதேசத்துக்கும் சிங்களத்துக்கும் செய்திகளை வேறை குடுத்தனாங்கள்.... !

பச்சோந்திகளுக்கு சர்வதேசம் எதையும் குடுக்க தேவை இல்லை தானே... ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.