Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர்களைப் பாடிய வாய்களால் டக்ளஸைப் புகழ்ந்து பாடிய சாந்தன், சுகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"சாவரும் போதிலும் தணல்இடை வேகினும் சந்ததி தூங்காது"

என்று நாம் ஆயிரக்கணக்கில் அணிதிரண்டு சென்று கார்திகை மதத்தில் சாந்தானோடு கூடி பாடியதை நம்பிதானே............... எத்தனையோ கரும்புலிகள் சிரித்த முகத்துடனேயே கையசைத்து போனார்கள். நாம் யாரும் சென்று தடுக்கவில்லையே? இன்று அதே சாவு வாழந்து முடிந்த எமது வீட்டுகதவை தட்டும்போது எப்படி சந்தார்ப்பவாதம் சரியெனபடுது?

ஆக விலைகளற்ற விடுதலை என்றால் எனக்கும் வேண்டும்............ அப்படி எதாவது விலைகள் இருந்தாலும் வேறுயாராவது பொறுக்க வேண்டும்? இதுதான் நியாயம் என்று நானும் எழுதலாம் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் சில விடைகளற்ற வினாக்கள் தடுக்கின்றன.

சாந்தன் அவர்கள் டக்ளசை பாடிவிட்டார் என்பதை மட்டும் மையமாக வைத்து இதை நான் எழுதவில்லை...............

இனி ஈழத்தில் வாழும் தமிழருடைய நிலை என்ன? ஈழதமிழர்களாகிய எங்களுடைய அடையாளம் என்ன? என்ற கேள்விகளின் ஊடாகவே இதை எழுதுகிறேன். ஏனெனில் இன்று ஒரு சாந்தன் நாளை எத்தனையோ சந்தன்கள்.............. ஆக ஒரு இனமே சந்தர்பபவாத இனமாக அழிவது என்றால்? ஏன் இத்தனை விலைகளை கொடுத்தோம்? எத்தனை உன்னதமான உயிர்களை கொடுத்தோம்?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடைதேடியே இதை எழுதுகிறேன். அந்தவிடைகளை யாரும் எழுதாத வரையில் நெடுக்காலபோவானின் கருத்து தவறானது என்று என்னால் நிற்சயமாக எழுதமுடியாது. அதேபோல நெடுக்காலபோவானை எதிர்த்து எழுதுபவர்களையும் மக்கள் நலன்விரும்பிகள் என்றும் என்னால் எழுதமுடியாது. துயர்வரும் வேளைகளிலும் இலட்சியத்தோடு நடப்பவனே மக்களின் நலன்விரும்பி என்றே நான் கருதுகிறேன்.

ஐயா

தங்களது இந்த நிலையே எனக்கும் இருந்தது. நெடுக்குடன் நான் முரண்படவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டோம் என்று என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. அதேநேரம் அவர்கள் இப்பொழுதும் இதை இதை செய்யவேண்டும் என்று சொல்லும் நிலைமை அங்கில்லை. குனிந்து தவண்டு தப்பி அவர்கள் வெளிவரட்டும். நான் நினைக்கின்றேன் இதே நிலைதான் கருத்துத்தான் சாந்தனுக்கும் இருக்கும் என்று.

  • Replies 53
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அன்று விடுதலை புலிகள் என்ற நம்பிக்கை நட்ச்சத்திரம் இருந்தது அவர்களால் முடியும் என்ற நம்பிக்கை எங்களை குருடாக்கி போட்டுதோ தெரியவில்லை......ஆனால் இன்று எந்த நம்பிக்கை நட்சத்திரமும் இல்லை என்பது கண்கூடு....அடிமையாக இருந்து தப்பி வாழவேண்டியுள்ளது.

தேசிய இன முரண்பாடு தான் இலங்கையின் பிரதான முரண்பாடு என்பதையும், தேசிய இனனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கான தேவை 80 களை விடவும் இன்று அதிகமாகக் காணப்படுகிறது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உறுதியான அரசியல் வழிமுறைகளற்ற, சோரம் போகும் அரசியல் வாதிகளைக் கொண்ட, இந்திய இலங்கை அரச ஆதரவிற்காக ஏங்கும், உள்முர்ண்பாடுகளோடு ஒட்டுப் போடப்பட்டிருக்கும் கட்சி என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமிருக்க முடியாது.

இவ்வாறான சிக்கல்கள் எல்லாம் வன்முறைகள், மிரட்டல்களுக்கு மத்தியில் வாக்களிக்கச் சென்ற மக்களுக்குத் தெரியாத இரகசியங்களல்ல. இவை அனைத்துக்கும் மத்தியில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான குறைந்தபட்சச் சுலோகங்களை முன்வைத்தவர்கள் என்ற ஒரே அடிப்படை தான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இச் சுலோகங்கள் கூட வாக்கு வேட்டைக்காக தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டவை என்பது கூட மக்களுக்குத் தெரிந்திருந்தும் மாற்று வழிகளின்றி வழங்கப்பட்ட ஆதரவு தான் இது.

டக்ளஸ் தேவானந்தாவின் அரச பணபலம், அபிவிருத்தி அரசியல், கருணாவின் அமைச்சர் பதவி, கருணா-பிள்ளையானின் பிரதேசவாதம், இவை அனைத்தையும் கடந்து ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் போர்க் குரல் மறுபடி ஒலித்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆக, தமது நலன்கள் மீது பற்றும் அக்கறையும் கொண்டவர்களாக் வெளிப்படுத்த முயலும் ஒவ்வொருவருக்கும் தமது பிரதான தேவை இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டமே என மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தேசிய இன முரண்பாடு தான்

Edited by putthan

ஈராக் மீது அமெரிக்கா படையெடுப்பை தொடங்கும் போது (சரி பிழை வேறு) சதாமின் மக்கள் படையில் இருந்தவர்கள் சொன்னார்கள் இந்த பாலைவனங்கள் தான் அமெரிக்கர்களின் சமாதி.சதாமும் தனது கோட்டையில் நின்று துவக்கால் ஆகாயத்தை நோக்கி வெடிவைத்து வீரம் காட்டினார்.ஆனால் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு தெரியும் என்ன நடக்கப்போகின்றதென்று.அதே தான் நடந்தது.அதே மக்கள் படை அமெரிக்க ஆமியிடம் சரணடைந்து புஷ்சிற்கு நன்றி தெரிவித்தது.

கருப்புலிகள் கைஅசைத்து போனது வெற்றி பெறுவோம் என நம்பி,அதே கரும்புலிகள் இன்று முகாம்களில் அடைபட்டு எதிர்காலத்தை பற்றிய கேள்விக்குறியுடன் நிற்கின்றார்கள்.நீங்கள் அவர்கள் மனோகரா வீர வசனம் பேச வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்.

இன்று தமிழனின் இந்த இழிவு நிலைக்கும் சாந்தன் போன்றவர்களின் நிலைக்கும் யார் காரணம் என முடிந்தால் சிந்தித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

* சிந்தித்து பார்க்கும் போது பலர் இருந்தாலும் குலத்தை கெடுக்க வந்த கோடரிக் காம்புகள் ( வேறு யார் மகிந்தவுடன் ஓட்டி நின்று தன் இனத்தையே காட்டிக்கொடுத்த ஒட்டுக்குழுக்கள்) தான் கண் முன்னே நிற்கிறார்கள். இவர்கள் தமிழ் மக்களால் என்றென்றும் மன்னிக்கப்படமாட்டார்கள்.

* புலிகள் தலைமை தாங்கி போராடும் போது பெரும்பாலான தமிழ் மக்கள் சுயநலம் மிகுந்தவர்களாக போராட்டத்தில் இருந்து தப்பி ஓடினார்கள். போதாதற்கு புலிகளாலும் தமக்கு பிரச்சனை என வெளிநாடுகளில் புலிகளை காட்டிக்கொடுத்து தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

* இந்தியா அயல்நாடாக இருந்த போதும் தமிழருக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என எள்ளளவும் நினைக்கவில்லை. மாறாக தமிழர்களை கூறு போட்டு அவர்களை மோதவிட்டு கூத்துப்பார்த்தது மட்டுமில்லாமல் இறுதி யுத்தத்தில் நச்சு வாயுவை போராளிகள் மீது அடிக்கும் அளவுக்கு கோழைகளாகவும் இருந்தார்கள்.

* மேற்கு நாடுகள் ஏற்கனவே தமிழர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டார்கள்.தமது பயங்கரவாதத்தை மறைக்க இன்னுமொருவரை பயங்கரவாதியாக்க வேண்டும்.அதற்கு புலிகள் போன்றோர் அவர்களுக்கு வாய்த்தது ஒன்றும் வியப்பில்லை.மேலும் தனி இயக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக வருவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை.இது உலகுக்கு ஒரு உதாரணமாக விளங்கி விடுவார்கள் என்று நினைத்து இருக்கலாம்.வான் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டதை இந்தியா தொடக்கம் மேற்கு நாடுகள் வரை ஜீரணிக்க முடியவில்லை என்பது கண்கூடு.

*அத்தோடு புலிகள் தமிழ் மக்களின் பணம் மற்றும் அவர்களின் முதலீடுகளில் இருந்து தன்னிச்சையாக யாரிலும் தங்கி இருக்காமல் இயங்கியவர்கள்.மேற்கு நாடுகள் யாரெனினும் தமக்கு கிழ் இருக்க வேண்டும் அல்லது தமது சொல்லை கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள்.பேச்சுவார்த்தையில் கூட இவர்களின் அழுத்தம் எவ்வளவு இருந்தது என தமிழ் மக்கள் அறிவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.