Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு? - பல தெரிவுகள் செய்யலாம்.

எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு? - பல தெரிவுகள் செய்யலாம். 69 members have voted

  1. 1. எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு?

    • நாடு கடந்த தமிழீழ அரசின் ஜனநாயக அணி (TGTE Democrat)
    • உலகத்தமிழர் பேரவை (GTF)
    • நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE )
    • மக்களவை
    • கே பி யின் அமைப்பு
    • தமிழர் கூட்டமைப்பு (TNA)
    • EPDP
    • கருணாவின் மக்கள் விடுதலை புலிகள்
    • பிள்ளையானின் மக்கள் விடுதலை புலிகள்
    • பரந்தன் ராஜனின் ENDLF
    • PLOTE
    • நெடியவன் சேரமானின் அமைப்பு
    • இவை எதற்கும் நான் ஆதரவில்லை
    • நான் ஆதரிக்கும் அமைப்பு இங்கே இல்லை
    • தமிழீழ விடுதலைப்புலிகள்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு சேவை செய்ய விரும்பினும் அவர்களை செய்ய விடாது அவர்களுக்கு பணம் ஒதுக்காது ஓரவஞ்சகம் காட்டுவது மகிந்த அரசு.இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது மக்களின் வெறுப்பை உருவாக்குவது தான் அரசினதும் அரசுக்கு துதி பாடும் டக்ளசினதும் திட்டமிட்ட செயற்பாடு.

ஒரு ஆசிரியர் நியமனம் எனில் மக்கள் கூட்டமைப்பினரிடம் போக மாட்டார்கள்.டக்ளசிடம் போக வைக்கப்படுகிறார்கள்.ஏனெனில் டக்ளஸ் செய்ததாக காட்டுவதே அரசின் நோக்கம்.அதனால் அவருக்கு அடுத்த முறை அந்த மக்களை வாக்களிக்க வைக்கும் தந்திரம்.

முன்பு புலிகளுக்கு உதவியோரை தனது படை பலத்தால் அழிப்பதில் டக்கிளஸ் மிகத்தீவிரமாக ஈடுபடுகிறார்.ஒரு சிறிய தீவில் மண்ணை அள்ளினால் என்ன நடக்கும் என தெரிந்தும் மண்ணை தான் எண்ணிவாறு மக்களின் எதிர்ப்பையும் ஆயுத பலத்தால் அடக்கி அவற்றை விற்று மக்களின் உணர்வில் மண் அள்ளிப்போடுபவர்.

போராளிகளை விடுவிக்க பணத்தை சுளையாக கறந்து விட்டு தான் விடுவித்துள்ளார்.எந்த ஏழை போராளியையும் இவர் விடுவிக்கவில்லை.

ஒரு வீட்டில் நாலு மிதிவண்டி இருந்தால் போதும் இவரின் கூலிகளும்,இராணுவமும் அவ்விடத்துக்கு விரைந்து துவம்சம் செய்து விடுவார்கள்.இவர்களின் மோட்டார் சைக்கிள் படை யாழ்ப்பாணத்தில் மிக மிக பிரபல்யமானது.தெரு அகலத்துக்கு வருவார்கள்.இவர்களுக்கு முன்னால் யார் போனாலும் அல்லது எது (குறுக்காக) போனாலும் அதோ கதி தான்.எத்தனை வயோதிபர்கள் இவர்க்ளால் உதை வாங்கி வேலியோரமாக விழுந்துள்ளார்கள்.இன்னும் எழுதலாம்.இவரை பற்றி பலருக்கு தெரியுமாதலால் அதிகம் எழுதவில்லை.

  • Replies 54
  • Views 4.4k
  • Created
  • Last Reply

பத்துப்பேருக்கு கெடுதல் செய்து மூன்று பேருக்கு நல்லது செய்கின்றார் என்பது உண்மைக்குப் புறம்பான வாதம். புலிச்சார்புத் தேசீயவாதம் இருந்த காலத்தில் டக்ளஸ் போன்றவர்கள் துரோகியாக வரையறுக்கப்பட்டதன் தொடர்ச்சியான வசனங்கள். தமிழ்மக்களுக்கான அதிகளவு அபிவிருத்தித் திட்டங்களை செய்பவரும் செய்யக் கூடிய நிலையில் இருப்பவரும் டக்ளஸ் மட்டுமே என்பதே உண்மை.

இவைகளும் இவற்றில் இருந்து இனி உருவாகப்போகும் என்னும் பல அமைப்புகளும் ஒரு சிந்தனை முறையின் கீழ் உருவாகி கிழைவிடுபவைகள். மக்களை அவலத்துக்கு உள்ளாக்கியது. மக்கள் பணத்தை சுருட்டியது. துரோகம். பிரதேசவாதம். மத ரீதியாக தமிழர்களை சிதைத்தது என்னும் எதுவாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் இவைகளே 90 வீதத்துக்கும் மேல் பங்குவகிக்ன்றது.

டக்ளஸ் அணி இதிலிருந்து மாறுபட்டது. தற்போதைய நிலவரத்தில் தாயக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அணியாக வளர்ந்து வருகின்றது. தினமும் எதோ ஒர மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திகள் இந்த அணியால் முன்னெடுக்கப்படுகின்றது. கைதான மக்களின் விடுதலையில் இந்த அணியின் பங்கு கணிசமானளவேனும் இருக்கின்றது. வெற்றுவேட்டுத் தேசியம் பேசி அடயாளம் தேடிக்கொண்டிருப்பதைவிட தமிழர்களின் இருப்பை தக்கவைப்பதன் அவசியம் குறித்த முக்கிய விடயத்தை கருத்தில் கொண்டு இந்த அணியின் செயற்பாடு வரவேற்கத்தக்கதாக உள்ளது.

சர்வதேச அழுத்தங்கள், சுமூக நிலையைத் தோற்றுவித்தல், பிரிவினை வாதத்தை இல்லாமற் செய்தல் போன்றவற்றிற்க்கா சிங்களவன் ஒரு சில நல்ல வேலைகளையும் தாயக மக்களுக்குச் செய்து கொடுக்கின்றான்.

நாங்கள் பிச்சை போடுவதில்லையா ? அது போல.

இந்தப் பிச்சையில் ஒரு பகுதியை டக்கிளசின் கையால் கொடுக்கிறான்.

அதைப் பார்ப்பவர், கொடுப்பவர் டக்கிளசே என்றால் அது, பார்த்துச் சொல்பவரின் தவறு.

சிங்களவன் டக்கிளசினூடாக கொடுப்பதற்குக் காரணம், தாயக மக்கள் இன்னொரு தமிழ் அமைப்பைச் சென்றடைவதைத் தடுப்பதற்காக;

தங்கள் காலைப் பிடித்து ஒட்டுண்ணியாக இருக்கும் டக்கிளசை, தமிழ் மக்கள் மேலாகப் பார்த்தால்.. அந்தச் சங்கிலியின் படி தமிழ் மக்களும் தங்களின் காலைப் பிடித்து ஒட்டுண்ணியாக்கி வைத்திருப்பதே நோக்கம்.

சிங்கள இனவாதக் கொள்கையை விஸ்தரிப்பதற்க்கும், வளர்ப்பதற்குமுதவு ஒரு கருவிதான் டக்கிளஸ்.

இன்னொரு தமிழ் அமைப்பு இடையில் புகுந்தால்.. இந்த நோக்கம் நிறைவேறாது.

சிங்களவன் செவிகள் கேட்க விரும்பும் இனிமையான பதிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

TGTE இற்கு மட்டுமே என் வாக்கு. புலிகளை இங்கு இணைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த கணிப்பு உண்மையில் TGTE இற்கா அல்லது அதைக் குழப்ப நிற்பவர்களுக்கா மக்கள் ஆதரவு கொடுக்கின்றார்கள் என்பதை ஒரு சிறிய sample மூலம் காட்டுவதாகவே நான் நினைக்கின்றேன்.

அந்த எண்ணத்தில் தான் Jude இதனை இணைத்திருப்பார் என்றும் நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது தான் கருத்துக்கணிப்பின் முக்கிய நோக்கமான இருந்தது.

அர்ஜுன் புலிகளை ஏன் இணைக்கவில்லை என்று கேட்டதே இதைக் குழப்பத்தான்.

நாங்கள் தலையில் ஒரு தொப்பி போட்டுக் கொள்வது நல்லது. இல்லையென்றால் எல்லாரும் எம்முடைய தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

அர்ஜுன் சொன்னதற்கு ஆதரவு பலரிடம் இருந்து வந்ததால் விடுதலைப்புலிகளை இணைக்க வேண்டிய நிலை உருவானது.

இந்தக் கருத்துக் கணிப்பு என்னைப் பொறுத்தளவில் செல்லுபடியாகாது.

எந்த அமைப்பையும் ஆரம்பத்திலிருந்தே இணைத்திருக்க வேண்டும் ஜூட் அண்ணா.

இடையில் இணைத்து நம் மாவீரர்களுக்கு அவமரியாதை செய்யக்கூடாது

கருத்துக்கணிப்பை மீழ் பதிவு செய்வதே நல்லது.

வாத்தியார்

*********

ஆரம்பத்திலே இணைக்கப்பட்ட அமைப்புகளுக்கு வாக்களிப்பதுடன் நின்றிருந்தால் இந்த கருத்து வேறுபாடுகள் வந்திருக்காது என்பது உண்மை. ஆனால் இங்கு வாக்களிப்பவர்கள் மீள வாக்களிக்க முடிவதாலும், அங்கத்தவர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளதனாலும், புதிதாக இணைக்கப்பட்ட அமைப்புக்கு எல்லோரும் மீள வாக்களிக்க விரும்பினால் வாக்களிக்க முடிகிறது. ஆகவே புதிதாக இணைக்கப்பட்ட அமைப்புடன் இந்த கருத்துக்கணிப்பு செல்லுபடியாகிறது.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை வாக்களிப்பில் இணைப்பதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் அவர்கள் பற்றிய ஆதரவை சரியாக பிரதிபலிக்குமா? என்ற கேள்வியின் காரணமாகவும் அவர்களின் பெயர் முதலில் இணைக்கப்படவில்லை. ஆனால் பலரும் தாம் ஆதரவு அளிக்கும் அமைப்பு இங்கு இல்லை என்ற இணைப்புக்கு வாக்களித்தன் மூலமும் விடுதலைப்புலிகளின் அமைப்பு இணைக்கப்படவில்லை என்று குறைப்பட்டதன் மூலமும் அவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்று காட்டியிருந்தார்கள். அவர்களுக்கு இப்போது தமது ஆதரவை தெரிவிக்க சந்தர்ப்பம் இருக்கிறது.

முடங்கியுள்ள விடுதலைப்புலிகளிலும் பார்க்க, இன்று செயற்படும் அமைப்புகளையே அங்கத்தவர்கள் கூடுதலாக ஆதரிக்கிறார்கள் என்பதையே வாக்குப்பதிவுகள் காட்டுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பினர் கூட, தாம் முடங்கியுள்ள நிலையில், செயற்படும் அமைப்புகளுக்கே மக்கள் தமது ஆதரவை கூடுதலாக காட்ட வேண்டும் என்றே விரும்புவார்கள் என்பது எனது கருத்து.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

------

ஆரம்பத்திலே இணைக்கப்பட்ட அமைப்புகளுக்கு வாக்களிப்பதுடன் நின்றிருந்தால் இந்த கருத்து வேறுபாடுகள் வந்திருக்காது என்பது உண்மை. ஆனால் இங்கு வாக்களிப்பவர்கள் மீள வாக்களிக்க முடிவதாலும், அங்கத்தவர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை உள்ளதனாலும், புதிதாக இணைக்கப்பட்ட அமைப்புக்கு எல்லோரும் மீள வாக்களிக்க விரும்பினால் வாக்களிக்க முடிகிறது. ஆகவே புதிதாக இணைக்கப்பட்ட அமைப்புடன் இந்த கருத்துக்கணிப்பு செல்லுபடியாகிறது.

------

ஜூட், நீங்கள் சொல்வது போல், பலர் முதலில் வாக்களித்தவர்கள் மீள வாக்களிக்கக் கூடிய வசதி இருந்தாலும்.....

எத்தனை பேர் மீண்டும் இந்த வாக்குச்சாவடிப் பக்கம் வந்து வாக்களிப்பார்கள் என்பது சந்தேகமே.

நீங்கள் இறுதியாக விடுதலைப் புலிகளை வாக்காளர் பட்டியலில், இணைத்ததனால் அவர்களுக்கு வாக்கு குறைவாகவே காணப்படுகின்றது.

இதனால்..... தேர்தல் ஆணையாளரும், தேர்தல் கண்காணிப்புக் குழுவினரும் இந்த தேர்தலை செல்லுபடியற்றதாக அறிவித்து..... மறு தேர்தல் நடத்த உத்தரவிடவேண்டும்.

மறு தேர்தல் நடத்தும் போது..... தந்தை செல்வா, அமரர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகியோரால் ஆரம்பித்தில், ஆரம்பிக்கப் பட்டு இப்போது ஆனந்தசங்கரி தலைமையில், விடுதலைக்காகாக போராடிக் கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

..

யாழ் களம் நல்ல பொழுது போக்கு (மசாலா )தளமாக உருவாகி வருவதனையிட்டு பெருமை அடைகின்றேன். :rolleyes:

எனக்கும் பெருமையாகத்தான் இருக்கின்றது.

என்னுடைய வாக்கு கருணாநிதிக்குத்தான். அவர்தான் தமிழர்களின் தலைவர் (என்று சொல்லப்படுபவர்)

பத்துப்பேர் அழிஞ்சு மூண்டுபேர் வாழோணும்.

நல்லகொள்கை.

அப்ப???????????????

மூண்டு பேர் அழிஞ்சு பத்துப்பேர் வாழோணும்.

எண்டு சொல்லுற ஆக்களை என்னசெய்யலாம்??

நானும் கேட்க நினைத்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.