Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு

Featured Replies

டட்லியின் தேசிய அரசில் தமிழரசுக் கட்சியும் மூன்று அமைச்சர் பதவிகளையேனும் ஏற்கும்படி வற்புறுத்தப்பட்ட போதும் கட்சியின் கொள்கைப்படி அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மாவட்ட சபைகளுக்கான ஒப்பந்தம் சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்ப்பதில் பிராந்திய சபைகளுக்கான "பண்டாசெல்வா' உடன்படிக்கையிலும் வாய்ப்பானதாகக் கருதப்பட்டது. மாவட்ட சபைகளுக்கான சட்டவலுவைத் தயாரிப்பதற்குப் பொறுப்புடையதான உள்ளூராட்சி அமைச்சர் பதவியையேனும் ஏற்கும்படி வலியுறுத்தப்பட்டபோது, தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைத் தவிர்த்து வெளியார் ஒருவரான அமரர் மு.திருச்செல்வம் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு அப்பதவியை ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. ஆயினும் பதவியை ஏற்பதற்குச் சென்ற சமயம் திருச்செல்வம் தமது மோட்டார் வண்டியில் தமிழரசுக் கட்சியின் மூவர்ணக் கொடியைப் பறக்க வைத்தே சென்றிருந்தார்.

"டட்லிசெல்வா' ஒப்பந்தப்படி தமிழ்மொழி உபயோகத்துக்கான மசோதா கடும் எதிர்ப்பின் மத்தியிலும் நிறைவேற்றப்பட்டிருந்த பொழுதிலும் கூட மாவட்ட சபைகளுக்கான மசோதாவோ கொண்டுவரப்பட்டிருக்கவில்லை. அதன் நிமித்தம் டட்லி சேனாநாயக்கா அரசுக்கு விரோதமாக நடந்து கொள்வது எதிர்ப்பாளர்களையே வலுப்படுத்தும் என்பதால் தந்தை செல்வா தேசிய அரசில் இருந்து வெளியேறாது தவிர்த்திருந்தமை புரிந்து கொள்ளக் கூடியதே.

பிரதமர் உத்தியோகபூர்வமாக திருகோணமலைக்கு வருகை தந்தபோது திருக்கோணேஸ்வரர் கோவில் சூழலைப் புனிதபூமியாகப் பிரகடனம் செய்யுமாறு கோரி ஒரு மனு பிரதமர் டட்லி சேனாநாயக்காவிடம் தரப்பட்டது. நடவடிக்கை எடுக்கும்படி அதன் மீது குறிப்பு எழுதி தம் அருகில் நின்றிருந்த அமைச்சர் திருச்செல்வத்திடம் மனுவினைக் கையளித்திருந்தார் பிரதமர்.

சம்பந்தப்பட்ட மனு மீது வெறுமனே ஓர் அறிக்கை தரும்படி அமைச்சர் திருச்செல்வம் கே.சி.நித்தியானந்தா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அறிவித்திருந்தார். திருகோணமலையிலுள்ள பௌத்த துறவி அதனைக் கடுமையாக ஆட்சேபித்த போதே, அமைச்சர் திருச்செல்வத்தைத் தானும் கலந்து கொள்ளாது அந்த கசற் அறிவித்தலை பிரதமர் சேனாநாயக்கா இரத்துச் செய்திருந்தார். கட்சியின் பணிப்பின் பேரில் அதன் நிமித்தம் அமைச்சர் திருச்செல்வம் தமது அமைச்சர் பதவியைத் துறக்க நேரிட்டது. ஆயினும் தமது பதவி துறப்பு வரையில் பிரதமரின் எழுத்துமூலமான பணிப்பின்படியே தாம் நடந்து கொண்டிருந்ததாகத் தெரிவிப்பதற்கு அமைச்சரினால் இயலவில்லை. காரணம் அச்சமயம் சம்பந்தப்பட்ட கோவை கே.நித்தியானந்தாவிடம் திருகோணமலையில் இருந்திருந்தமையால் கட்டுரையாளரிடம் மேற்படி தகவலைத் தெரிவித்திருந்தவர் கே.சி.நித்தியானந்தா அவர்கள் தாம்.

தமது பதவிக் காலம் முழுமை பெற டட்லி சேனாநாயக்கா தேர்தலை அறிவித்தார். 1970 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாராளுமன்றத் தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை பொதுவுடமைக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் தலைமையில் அமைத்திருந்த தேர்தல் கூட்டணியானது ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து சோல்பரி ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் குடியரசு அரசியலமைப்பாக மாற்றுவதற்கு வாக்காளர்களிடம் ஓர் ஆணையைக் கோரியிருந்தது. அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஓர் அம்சமாக அதனையும் உள்ளடக்குவதாக தென் இலங்கையில் அந்த முக்கூட்டு முன்னணியே பெரும்பான்மையான தொகுதிகளை வென்றிருந்தது. ஆகவே தாம் கோரிய ஆணை தரப்பட்டுவிட்டதாகவே அவை எடுத்துக் கொண்டிருந்தன.

ஆயினும் தந்தை செல்வாவோ அதனை அவ்வாறாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. காரணம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதுவும் ஓர் அம்சமாக உள்ளடக்கப்பட்டிருந்ததே தவிர ஓர் சர்வஜன வாக்கெடுப்பாக அக்கோரிக்கை மீதாக மட்டும் வாக்கெடுப்பு இடம்பெற்றிராமையால் மேலும் வடக்கிலும் கிழக்கிலும் முக்கூட்டணி எந்தவொரு தமிழ்த் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிராமையாலும், பாராளுமன்றக் கட்டிடத்தில் அக்கூட்டத்தை நடத்தினால் அது பாராளுமன்றத்தின் ஓர் கூட்டமாக இருந்துவிடும் என்பதைத் தவிர்ப்பதற்காக முக்கூட்டணியின் தலைவி ஸ்ரீமாவோ அம்மையார் பாராளுமன்றத்துக்கு வெளியே கொழும்பு றோயல் கல்லூரியின் நாடக அரங்கமான நவரங்ககல மண்டபத்தில் கூட்டப்படும் ஒரு கூட்டத்துக்கு வரும்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பியிருந்தார்.

இவ்வாறாக பாராளுமன்றத்தை அதன் பக்கவாட்டால் கடந்து சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் நவரங்ககல மண்டபத்தில் ஒன்று கூடிய அவர்களது அமர்வினையே ஒரு தேசிய நிர்ணய சபையாக அறிவித்து "பிரித்தானிய முடியுடன் சட்ட அரசியல் வரலாற்று ரீதியாக இத்தீவுக்கு இருந்து வரும் அனைத்து உறவுகளையும் கத்தரித்துக் கொள்வதாக அதனது ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை' ஏகமனதாக நிறைவேற்றியிருந்தது. சம்பந்தப்பட்ட ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை கண்டுகொள்ளாது பிரித்தானிய அரசு அசமந்தமாக இருக்க இத்தீவின் இறைமை அத்தீர்மானத்தினால் சட்ட, அரசியல், வரலாற்று ரீதியாக மீள்விக்கப்பட்டு விட்டதாக எடுத்துக் கொண்டே சம்பந்தப்பட்ட தேசிய நிர்ணய சபையானது அதனது ஏனைய கூட்டங்களைத் தொடர்ந்து பாராளுமன்றக் கட்டிடத்தில் தானே கூடி 1972 ஆம்ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை சோசலிஸ குடியரசிற்கான யாப்பின் ஒவ்வொரு உறுப்புரையையும் வரைந்து நிறைவேற்றியிருந்தது.

இதில் கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய விடயம் இறைமையானது அது எந்த மூலத்தில் இருந்து பறிக்கப்பட்டிருந்ததோ அந்த மூலத்தையே மீள்விக்கப்படும் போதும் அது வந்தடையும் என்பதே.

கோட்டை இராசதானியின் இறைமை போர்த்துக்கேய மன்னனுக்கு அந்த இராசதானியின் மன்னன் தர்மபாலவினால் தானமாகவே தரப்பட்டிருந்தது. யாழ்ப்பாண இராசதானியின் இறைமையோ போரிலே சங்கிலி மன்னன் தோற்கடிக்கப்பட்டதால் போர்த்துக்கேயரைச் சென்றடைந்தது. ஒல்லாந்தர் போர்த்துக்கேயரைத் தோற்கடிக்க மேற்படி கோட்டை, யாழ்ப்பாண இராசதானிகளது இறைமையும் ஒல்லாந்தர் வழியாக பின்னர் பிரித்தானிய முடியைச் சென்றடைந்தது.

போர்த்துக்கேய ஒல்லாந்த நாடுகளால் கைப்பற்றப்பட்டிராத கண்டி இராசதானியின் பிரதானிகள் தமது மன்னன் இரண்டாவது விக்கிரமராஜசிங்கனைக் காட்டிக் கொடுத்தபோதே கண்டி இராசதானியின் இறைமை பிரித்தானிய முடியினைச் சென்றடைந்தது. ஆகவே, வெவ்வேறு வழிகளால் இடிக்கப்பட்டிருந்த கோட்டை, கோட்டை கண்டி, யாழ்ப்பாண இராச்சியங்களது இறைமையும் சம்பந்தப்பட்ட மேற்படி ஒருதலைப்பட்சமான தீர்மானத்தின் மூலமாக தனித்தனியாக சம்பந்தப்பட்ட மூன்று இராச்சியங்களையுமே சென்றடைந்திருந்தது.

தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்திருந்த எந்தவொரு பிரேரணையும் விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படாதிருந்தமையால் தந்தை செல்வா தமது சகாக்கள் 12 பேருடனும் கூட்டாக தேசிய நிர்ணய சபையில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்தார். 1972 ஆம் வருட சோஷலிஸ யாப்பையோ அல்லது அதன் உறுப்புரைகளில் எதனையோ ஏற்றுக் கொள்ளாதவராக தந்தை செல்வா நிராகரித்திருந்தார்.

இவ்வாறாக தந்தை செல்வா தமது அரசியல் வாழ்க்கை வரலாற்றின் மூலம் ஈழத்தமிழர் இறைமையை மீள்வித்துத் தந்திருந்ததுடன் அதனைத் தக்க வைத்தும் காத்துத் தந்திருந்தார். மாகாண சபைகளை ராஜீவ்ஜயவர்த்ன ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலும் சபையில் தமிழ் பிரதிநிதிகள் வாக்களித்திருக்கவில்லை. பாராளுமன்றத்தில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தமைக்கு ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கே நன்றி. தந்தை செல்வா மீள்வித்துத் தந்த ஈழத் தமிழர் இறைமையைக் காவு கொடுக்காது தொடர்ந்தும் காப்பது தமிழர் கூட்டமைப்பின் பொறுப்பாகும்.

தமிழ்த் தலைவர்கள் நால்வருக்கு எதிராகத் தேசத் துரோகக் குற்றம் சுமத்தி யூரர்கள் இல்லாத நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் அமரர் மு.திருச்செல்வம் நிகழ்த்திய சட்டவாதத்துக்கு சோஷலிஸ குடியரசு யாப்பு தமிழர்களைக் கட்டுப்படுத்தாது என்பதற்கு சட்டமா அதிபர் உரைத்த ஒரே பதில் அரசியல் புரட்சியால் அல்லது இராணுவப் புரட்சியால் பதவிக்கு வரும் ஆட்சியால் பிரகடனம் செய்யப்படும் யாப்பு அதனை அது நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும் வரை செல்லுபடியாகும் என்பதே

நன்றி

தினக்குரல்

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=10369:2011-03-31-03-40-08&catid=72:article&Itemid=100

  • தொடங்கியவர்

இதில் இருந்து நான் கற்ற பாடம் என்னவென்றால் 1947ல் ஜின்னாவிற்கு இருந்த அறிவு இந்த மேதாவிகளுக்கு ஏன் இல்லாமல் போனது? ஒரே இரவில் ஒரு நாட்டையே பெறமுடிந்த ஜின்னாவின் தொலை நோக்குப் பார்வை எங்கே? எங்கள் பண்டிதர்கள் எங்கே?அன்று தொடங்கிய இந்த "அதிமேதாவி பண்டிதத் தனம்" செல்வாவில் இருந்து அமுதர் ஊடாக இன்றுவரை தொடர்வது தான் கசப்பான நிஜம். ஆக ஒவ்வொரு காலகட்டத்திலும் வடிவங்கள் தான் மாறியதே ஒழிய உள்ளுடன் ஒன்றாகவே இருந்தது. இதற்கு விலையாக 60 களுக்குப் பின்பான தலைமுறையை முற்று முழுதாகப் பறிகொடுத்துள்ளோம் என்பதும் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.