Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகக் கோப்பை நமக்கு ஒரு கேடா..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை நமக்கு ஒரு கேடா..?

நேற்று இரவு முதல் இந்திய நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். கும்மாளங்கள்..! ஏதோ இந்திய நாட்டின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டதாம்..! அதனால் சந்தோஷமாம்..!

நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு..

என்னிக்கு இவனுக கிரிக்கெட்டை சர்வதேச வியாபாரமா மாத்தினாங்களோ.. அன்னிக்கே கிரிக்கெட் மேல இருந்த பைத்தியமும் போயிருச்சு.. போதாக்குறைக்கு மேட்ச் பிக்ஸிங்ன்னு ஒண்ணை உறுதிப்படுத்திய நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது கொலை வெறிதான் வந்திருக்கு.

ஊர், ஊருக்கு இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களை தனி அமைப்பின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில, பல பணக்கார முதலைகளின் கைகளில்தான் உள்ளது. அவர்களது பொழுது போக்குக்காக கூடும் கிளப்பிற்கு இன்னொரு பெயராகத்தான் இந்தியக் கிரிக்கெட் வாரியம் காட்சியளிக்கிறது.

கோடிகளை வாரிக் குவித்தாலும் பிச்சைக்காரத்தனமாக அத்தனைக்கும் வரிவிலக்கு கேட்கிறார்கள் இந்த உலக மகா பிச்சைக்காரக் கோடீஸ்வரர்கள்..! ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களே தனி அமைப்பை வைத்துக் கொண்டு இவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு எப்பாடுபட்டாலும் அரசு இதில் தலையிடாத வண்ணம் பார்த்துக் கொள்வதில்தான் சூட்சுமமே இருக்கிறது..

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தை வருடத்திற்கு சில ஆயிரம் ரூபாய்க்குத்தான் அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது..! ஒரு போட்டி நடந்தாலே கோடிக்கணக்கில் கல்லா கட்டும் இந்தக் கொள்ளையரிடமிருந்து கூடுதலான தொகையை வசூல் செய்ய எந்த அரசுகளுக்கும் மனமில்லை. வாங்கிக் கொடுக்கவும் எந்த புரோக்கர் அதிகாரிகளுக்கும் மனமில்லை. அந்த அதிகாரிகளின் வீட்டம்மா, சின்ன வீடு, கொழுந்தியாள், மாமியார், மைத்துனர்களுக்கெல்லாம் வீடு தேடிப் போய் கிரிக்கெட் டிக்கெட்டுகளை பிச்சை போட்டுவிடுவதால் அவர்களுக்குக் கவலையில்லை..

இதேபோல் அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் அவரவர்க்குச் சொந்தமான வீடுகளையோ, நிலங்களையோ இதேபோல் மிகக் குறைந்த விலைக்கு விற்கச் சொன்னாலோ, குத்தகைக்குக் கொடுக்கச் சொன்னாலோ கொடுத்துவிடுவார்களா..? கணக்குப் போட மாட்டார்கள்..?

ஆனால் இதில் மட்டும் கேட்க மாட்டார்கள். ஏனெனில் இது ஊரான் வீட்டுக் காசு. மக்களுடைய காசு.. இதனை வைத்துத்தான் அந்த அயோக்கியர்கள் வாழ வேண்டியிருக்கிறது.. அதிகார வர்க்கமும், பணக்கார வர்க்கமும் இணைந்து, இயைந்து ஒட்டி உரசிப் போவதுகூட இதனால்தான்..!

கலைஞர் டிவிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலமாக கிடைத்த 214 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தபோதுகூட உடனுக்குடன் கை மாத்தாக இதில் பாதி பணத்தைக் கொடுத்து உதவியிருப்பது கிரிக்கெட் வாரிய செயலாளர், 'மெட்ராஸ் சிமெண்ட்ஸ்' சீனிவாசன்தான் என்கிறார்கள்..

அரசு தானே தலையிட்டு தேர்வு செய்யும் வேலையைச் செய்தால் எத்தனை வில்லங்கங்கள் நடக்குமோ அதையெல்லாம் இப்போது இந்த முதலைகளே செய்து வருகிறார்கள். அத்தனை மாநில கிரிக்கெட் அமைப்புகளின் பின்னணியிலும் இருப்பது சில அரசியல்வியாதிகள்தான். அவர்களுக்கு ஏற்ற பதவிகளைக் கொடுத்து காக்கா பிடித்து வைத்துக் கொண்டு அவர்கள் விரும்பும் சிலரை ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்து சரிக்கட்டும் வேலையையும் செய்து வருகிறார்கள்..!

கிரிக்கெட் என்பது இங்கு மதமாக ஆக்கப்பட்டுள்ளது. சினிமாவைப் போல இதுவும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது. எனது சிறு வயதில் நேரத்தைச் செலவழிக்க எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால் நான் அழகுத் தமிழில் கேட்ட கிரிக்கெட் வர்ணனை என்னை கிரிக்கெட் வாசம் நோக்கி இழுத்துச் சென்றது..

இப்போதுதான் மூன்றாவது பாராவில் சொன்னதுபோல புத்தி வந்து தெளிந்திருக்கிறது..! இப்போதும் எந்தக் கவலையும் இல்லை என்பார்களுக்கு கிரிக்கெட் என்பது விளையாட்டாகத்தான் தெரிகிறது..!

நேற்று ஒரு நாளில் மட்டும் ட்விட்டரிலும், பிற இணையத்தளங்களிலும் இவர்கள் உதிர்த்த தேச பக்தியை பார்க்க வேண்டுமே..? இது போல் ஒரு நாள்கூட தங்களது தமிழ் பாசத்தைக் இவர்கள் காட்டியிருக்கவே மாட்டார்கள்..!

இந்தியா, இந்தியா.. என்பவர்களின் இந்திய தேசியம் உண்மையில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ஈழத்தில் நடந்த கடைசிப் போர் எனக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது..!

பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் மோதலில் எத்தனையோ தமிழர்கள் இந்தியாவுக்காக தங்களது உயிரை இழந்து பிணமாக கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தேசியம் பேசும் இந்தியவாதிகள், தமிழ் ஈழப் பிரச்சினையில் தமிழர்கள் சாகும்வரை வேடிக்கை பார்த்தபடியே கையைக் கட்டிக் கொண்டார்கள்..!

இந்திய தேசியத்துக்காக உயிரைக் கொடுக்கிறான் தமிழன். அவனுக்காக நானும் இனவெறி பிடித்த இலங்கையை புறக்கணிக்கிறேன் என்று இந்திய நாடும் சொல்லவில்லை. இந்தியாவின் கிரிக்கெட் வாரியமும் சொல்லவில்லை.

என்ன செய்தாலும் அவர்களுக்குத் தனி நாடு கொடுத்துவிடக் கூடாது என்பதில் இந்திய ஏகாதிபத்தியம் வரிந்து கட்டிக் கொண்டு நின்றது.. இப்போதும் அப்படியே நிற்கிறது..! பதவிக்கும், பணத்துக்கும் சோரம் போன தமிழர்களே இதற்கு ஒத்து ஊத, அவர்களுக்கு வேண்டியதை தள்ளிவிட்டு அவர்கள் செய்யும் விபச்சாரத்தையும் ஊக்குவித்து வருகிறது இந்திய தேசியம்..!

வாரியத்துக்குத் தேவை இந்தியா முழுவதும் கிரிக்கெட்டை கொண்டாடுவதினால் கிடைக்கின்ற பணம்.. அதில் முத்துக் குளிக்கும் அவர்கள் இந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஆனால் இளிச்சவாயன் தமிழன்தான்..!

மும்பை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மும்பையில் விளையாடக் கூடாது என்று சிவசேனா அமைப்பு இன்றுவரையில் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறது..! ஆனால் அப்படியொரு சின்ன எதிர்ப்பைக்கூட தமிழனால் இங்கே சொல்ல முடியவில்லை. இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணியுங்கள்.. இந்தியாவில் விளையாட அனுமதிக்காதீர்கள் என்ற கோஷம்கூட தீவிர இயக்கத்தினர் சிலர் மட்டும்தான் சொல்லி வருகிறார்கள். இப்படி முன் வருபவர்களை முன் மொழிபவர்கள்கூட குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கேடு கெட்ட அரசும், கேவலங்கெட்ட அதிகார அமைப்பும் பணத்தைத் தவிர வேறு எதுவும் தங்களுக்குத் தேவையில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இதனைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்..!

இவர்களுக்கு பக்கத்து வீட்டில் நடப்பது விருந்து என்றும் தன் வீட்டில் நடந்தால் அது சாவு என்பதுமான மனநிலை.. இந்த மனநோய் பிடித்த மனநிலையில் இருந்து இந்த தமிழன் என்றைக்கு வெளியே வருவது..?

வெங்காயம் கிலோ என்ன விலை விக்குது..? ஏற்றுமதி செய்யலாமா? கூடாதா? கையிருப்பு எவ்வளவு உள்ளது..? என்றெல்லாம் ஒரு நாள் மீட்டிங் போட்டு தெரிந்து கொள்ளத் துப்பில்லாத ஒரு விவசாயத் துறை அமைச்சர்தான் தற்போது கிரிக்கெட் வாரியத் தலைவரா நாள் முழுக்க, கிரிக்கெட் வேலையையே பார்த்துக்கிட்டிருக்கிறாரு..

ஆனா இந்தாளுக்கு கவர்ன்மெண்ட்டு சம்பளம், காரு, பங்களா.. ஊர் சுற்ற அரசு காசு.. இதே மாதிரி கவர்ன்மெண்ட்டுல சாதாரண ஊழியம் பார்ப்பவர்கள், “நாங்க பார்ட் டைமா எல்.ஐ.சி. பாலிஸி பிடிக்குற வேலைக்குப் போறோம்.. அப்பப்ப வந்து எங்க வேலையைப் பார்க்கிறோம்”னு சொல்லிட்டுப் போனா நீங்க விட்ருவீங்களா..?

தாசில்தார் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் இன்ன பிற அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை இல்லை. அரசு அலுவலர்கள் யாரும் மிகச் சரியான நேரத்துக்கு வருவதில்லை.. ஒழுங்கா வேலை பார்க்கிறதில்லை என்றெல்லாம் புகார் மனுவை நீட்டும் மிஸ்டர் காமன்மேன்கள் இந்த பெருச்சாளிகளான கபோதி அமைச்சர்களை மட்டும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

ஆனா அந்தக் கபோதி மந்திரி இப்படித்தான் இப்போதும் ஊர் சுத்திக்கிட்டிருக்காரு. இந்தாளு என்னிக்கு தனது துறையைக் கவனிச்சிருக்காரு..? நேத்துகூட இந்தாளுதான் கோப்பையைத் தூக்கிக் கொடுக்குறாரு.. இது மாதிரி தனது துறை வேலையை ஒரு நாள்கூட இந்தாளு பார்த்திருக்க மாட்டிருக்காரு.. உலகக் கோப்பை நடந்த இத்தனை நாட்களும் இந்த அமைச்சர் ஸ்டேடியங்களைத்தான் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் தினத்துக்கு 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல லட்சணத்தில் நாடு இருக்கின்ற நிலையில் அவர்களது குறைகள் என்ன? கோரிக்கைகள் என்ன என்றெல்லாம்கூட காது கேட்க முடியாத இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்களை அமைச்சராக்கி நமக்கென்ன புண்ணியம்..? நம்ம மன்னமோகனசிங்குக்கு தான்தான் பிரதமர் அப்படீன்றதே சில சமயம் மறந்து போகுது.. இதையும் அவர்கிட்ட சொல்லி என்னாகப் போகுது..? இந்த லட்சணத்துலதான் இவனுக ஆட்சி நடத்துறானுக..!

இதுல உங்களுக்கு உலகக் கோப்பை ஒரு கேடு..!

அடப் போங்கப்பா.. நீங்களும் உங்க இந்தியப் பாசமும்..!

http://truetamilans.blogspot.com/2011/04/blog-post_03.html

எதையும் அளவோடு இரசிப்பது நல்லது, விளையாட்டு உட்பட. ஆனால், இன்று இவ்வாறான விளையாட்டுக்கள் ஒருவித "போதைபொருளாக" சர்வதேச வியாபார நிறுவனங்களால் மாற்றப்பட்டுள்ளன. சராசரி மக்கள் தம்மை அறியாமலேயே இதற்கு அடைமையாகிவிடுகின்றனர்.

ஆனால், மக்களை மட்டும் குறை கூற முடியாது. உண்மையான மாற்று தெரிவுகள் மக்களுக்கு முன்னால் வைத்தால் மட்டுமே இதற்கு தீர்வை காணலாம். அது அரசியல்வாதிகளின் கைகளிலேயும் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.