Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சவாரிக்குப் பயன்படுத்திய குதிரை முல்லைத்தீவு வனப்பகுதியில் காணப்படுகிறதாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சவாரிக்குப் பயன்படுத்திய குதிரை முல்லைத்தீவு வனப்பகுதியில் காணப்படுகிறதாம்!

[Monday, 2011-04-04 14:26:31]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் கருங்குதிரையொன்று முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்குதிரை தன்னந் தனியாக வனாந்திரப் பிரதேசத்தில் சுற்றி வருவதைப் பலரும் கண்டிருக்கின்றார்கள்.

அதில் ஒருவர் மொபைல் போன் ஊடாக குதிரையைப் படம் பிடித்துள்ளார்.ஆயினும் குதிரையை நெருங்கிப் போய் தெளிவாகப் படமெடுக்க முனைந்த போது அது மிரண்டு ஓடியுள்ளது.

இதற்கிடையே முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்பட்ட பிரஸ்தாப குதிரை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய குதிரை என்பதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவர் ஓய்வு நேரங்களில் குதிரைச் சவாரியில் ஈடுபடுவதை பெரிதும் விரும்பியிருந்ததாக விடுதலைப் புலிகளின் பல முக்கியஸ்தர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். அத்துடன் அவர் அவ்வாறு குதிரைச் சவாரி மேற்கொள்ளும் நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முன்னை நாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரிடமும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Seithy.com

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சவாரிக்குப் பயன்படுத்திய குதிரை முல்லைத்தீவு வனப்பகுதியில் காணப்படுகிறதாம்!

[Monday, 2011-04-04 14:26:31]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாக கருதப்படும் கருங்குதிரையொன்று முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அக்குதிரை தன்னந் தனியாக வனாந்திரப் பிரதேசத்தில் சுற்றி வருவதைப் பலரும் கண்டிருக்கின்றார்கள்.

அதில் ஒருவர் மொபைல் போன் ஊடாக குதிரையைப் படம் பிடித்துள்ளார்.ஆயினும் குதிரையை நெருங்கிப் போய் தெளிவாகப் படமெடுக்க முனைந்த போது அது மிரண்டு ஓடியுள்ளது.

இதற்கிடையே முல்லைத்தீவு வனாந்திரத்தில் காணப்பட்ட பிரஸ்தாப குதிரை விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய குதிரை என்பதாக பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அவர் ஓய்வு நேரங்களில் குதிரைச் சவாரியில் ஈடுபடுவதை பெரிதும் விரும்பியிருந்ததாக விடுதலைப் புலிகளின் பல முக்கியஸ்தர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர். அத்துடன் அவர் அவ்வாறு குதிரைச் சவாரி மேற்கொள்ளும் நேரங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முன்னை நாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பலரிடமும் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

Seithy.com

ஐயோ என்ன கரைச்சல் அப்பா...இதெல்லாம் புதினமாக..

வன்னியில் இருக்கிற எல்லா மிருகங்களையும் படம் எடுத்து இனி பிரபாகரன் பாவிச்சார் அவர் வளர்த்தார் என செய்தி தயாரிக்க போறாங்கள்.

தகவலிற்காக..

இயக்கத்தில் தலைவர் பிரபாகரன் இந்தியாவில் இருந்து தாயகம் திரும்ப முன்னரே போராளிகள் குதிரை ஓட்டி வந்துள்ளனர். அதற்கு முன்னரும் அப்படி நடந்திருக்கு..

1982 ஆம் ஆண்டு நெடுந்தீவில் இருந்து ஏழாயிரம் ரூபாவிற்கு கொள்வனவு செய்த இரண்டு குதிரைகள் பொதுமக்கள் சிலர் கொண்டு வந்து வன்னியில் கொடுத்துள்ளார்கள்.

அதைவிட இயக்கத்தில் முதல் முதல் குதிரை ஓட்டியவர் குதிரை வீரன் என செல்லமாக அழைக்கப்படும் இரண்டாம் லெப்ரினன் ஜீவன் ( வெற்றிலைக்கேணி) இவர் 1984 இல் வீரச்சாவடந்தார் என நினைக்கின்றேன். இவர் இயக்கத்திற்கு போகும் போதே ஒரு கறுப்பு ஒரு வெள்ளைக்குதிரையுடனும் கூடவே ஒரு சொட்கண் மற்றும் உறைக்கத்தியுடன் தான் போனவராம்.

இவர் ஒரு விசித்திரமான பேர்வழி... பயிற்சி முடிந்து ஊருக்கு (உள்ளூர் பயிற்சி) வரும் போது குதிரையுடன் அப்படியே வந்துள்ளார். வரும் போது ஊரில் விளையாட்டுப்போட்டி நடந்துள்ளது. அப்போ மாவீரர் ஜீவன் என்பவர். ஸ்பானியா மனிதன் போன்று மாறு வேடம் பூண்டு வினோத உடைப்போட்டியில் பங்கு பற்றிக்கொண்டு முதல் பரிசையும் தட்டிக்கொண்டு சென்று விட்டாராம்.

இவர் வீரச்சாவடைந்த போது அந்த குதிரைகள் இரண்டும் உலாந்தாய் காட்டிற்குள் சென்று விட்டன. பலர் அந்த குதிரைகளை ஊருக்கு கொண்டு வந்து பராமரிக்க முற்பட்டும் அது காட்டிற்குள் சென்று விட்டது.

இவ்வாறாக பல இடங்களில் குதிரைகள், கழுதை, கோவேறு களுதைகள் பயன்படுத்தபப்ட்டு வந்துள்ளன. ஏன் வன்னியில் லோரன்ஸ் திலகர் அண்ணரும் ஒரு குதிரை வண்டில் வைத்திருந்தவர். ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.