Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்ததென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்ததென்ன?

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்துபேசக் கூடியவர்கள், போராடுபவர்கள் என்பதை உணர்ந்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியுள்ளார்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்று சொல்லி, ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க மிகப் பெரிய போரை சிறிலங்க அரசு நடத்தியபோது, அந்தப் போரின் பின்னணியில் டெல்லி அரசு உள்ளது என்பதை நன்றாக அறிந்தும், அந்த அரசில் இறுதி வரை பங்கேற்றது மட்டுமின்றி, போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சியை முன்னின்று (தனக்கே உரித்தான அரசியல் தந்திரத்தால்) முறியடித்தவர் கருணாநிதி என்பது விவரமறிந்த தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.

“அய்யகோ ஈழத் தமிழினம் அங்கே அழிகிறதே” என்று சட்டப் பேரவையில் தீர்மானம் போட்டுவிட்டு, டெல்லி அரசிற்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் - அழுத்தம் கொடுப்பது போல் நடத்தி - போரை தடையின்றித் தொடர எல்லா வகையிலும் உதவியர் கருணாநிதி என்பதற்கு அவர் கடற்கரையில் நடத்திய சில மணி நேர பட்டினிப் போராட்டம் ஒன்றே சான்றாகும்.

e973cb2ab862ea9c943ad74fe7f858b7.jpg

2009ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி திங்கட்கிழமை காலை சென்னை கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடத்தின் முன்பு சென்று ஒரு படுக்கை ஏற்பாடு செய்து ‘போரை நிறுத்து’ என்ற ஒற்றை கோரிக்கையுடன் கருணாநிதி பட்டினிப் போராட்டத்தைத் ‘திடீரென்று’ தொடங்கியபோது, இதுவும் அவர் அரங்கேற்றும் ஒரு நாடகம் என்பதை ஒருவரும் அறிந்திருக்கவில்லை - அவரை நன்கறிந்த அரசியலாளர்களைத் தவிர. ஆனால் இவர் பட்டினிப் போராட்டம் தொடங்குவதற்கு முன்னரே, அதிகாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்து கொழும்புவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு செல்கிறது. இந்தியாவின் அயலுறவுச் செயலராக இருந்த (தற்போது தேச பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும்) ‌சி‌வ்சங்கர் மேனன், தமிழினத்திற்கு எதிரான இனப் படுகொலை யுத்தத்தை முழு வெறியுடன் நடத்திக்கொண்டிருந்த சிறிலங்க பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறார்.

7a92dd7bdc8e36a6fedc976c2fc4-medium.jpg

“கோத்தா நமக்கு ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது” என்று கூறி, தமிழக முதல்வர் போர் நிறுத்தம் செய்யக்கோரி பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக சி‌வ்சங்கர் மேனன் கூறுகிறார். அதைக் கேட்ட கோத்தபய ராஜபக்ச, உடனடியாகத் தான் அதிபர் ராஜபக்சவிடம் பேசுவதாகவும், பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சியை தொடங்கியதாகவும் பதில் கூறுகிறார். தமிழ்நாட்டிலுள்ளோருக்கு அண்ணா சமாதியில் கருணாநிதி சென்று படுத்த பிறகுதான் அவர் போராட்டம் பற்றித் தெரியவந்தது. அவரது மனைவிக்குக் கூட அதுபற்றித் தெரியவில்லை. ஆனால், டெல்லியில் இருந்த சி‌வ்சங்கர் மேனனுக்கு முன்னரே தெரிந்து, அவர் கோத்தபய ராஜபக்சவை உஷார் படுத்துகிறார்!

“உடனடியாக நடவடிக்கைகளைத் தொடங்கினோம். அதிபரிடம் பேசினோம். இந்திய அரசை தொடர்பு கொண்டு விவாதித்தோம். மிகச் சுலபமாக பிரச்சனைக்குத் தீர்வு கண்டோம்” என்று போர் முடிந்தபிறகு கோத்தபய ராஜபக்ச ஒரு பேட்டியில் சிலாகித்துக் கூறினார்.

போர் நிறுத்தப்பட்டதாக சிதம்பரம் கூறினார்!

P_Chidambaram_300.jpg

எப்படி பிரச்சனையை சமாளித்தார்கள்? பட்டினி போராட்டத்தை கருணாநிதி துவங்கி ஒரு 4 மணி நேரம் ஆகியிருக்கும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, போரை நிறுத்த ராஜபக்ச ஒப்புக்கொண்டுவிட்டார் என்று செய்தி சொன்னாராம். உடனே “போர் நின்றுவிட்டது” என்று துள்ளி எழுந்த கருணாநிதி மதிய உணவிற்கு வீட்டிற்குத் திரும்பினார்.

அதே நேரத்தில் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ராஜபகச்வின் செய்தித் தொடர்பாளர், “போர் நிறுத்தப்படவில்லை, கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்றுதான் உறுதியளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். அந்தச் செய்தி அதே நாள் மாலை நாளிதழ்களில் வந்தது! ஆனால் கருணாநிதி கூறினார்: போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்று!

“மழை நின்றுவிட்டது, தூவாணம் நிற்கவில்லை”

30nkiuf.jpg

சில நாட்களுக்குப் பிறகு தமிழக மக்கள் அனைவருக்கும் தெளிவாகிவிட்டது போர் நிறுத்தப்படவில்லை என்கிற உண்மை. அங்கு மக்கள் பாதுகாப்பு வளையத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது இரவு, பகலாக குண்டு மழை பொழிந்தன சிறிலங்க படைகள். கருணாநிதியிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டதற்கு, “மழை நின்றுவிட்டது, தூவாணம் நிற்கவில்லை” என்று பதில் கூறினார். அதாவது போர் நின்றுவிட்டதாம், சாதாரண அளவில் சண்டை மட்டும் நடக்கிறது என்று கூறினார்!

கருணாநிதியின் இந்த பட்டினிப் போராட்டத்திற்குப் பிறகுதான் உச்சகட்டத் தாக்குதல் தொடங்கியது. உலக அளவில் தடை செய்யப்பட்ட வெப்பக் குண்டுகள், கிளஸ்டர் பாம்ஸ் என்றழைக்கப்படும் கொத்துக் குண்டுகள், ஆளை எரிக்கும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றைப் பொழிந்து ஈழத் தமிழர்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்தது, டெல்லியின் முழு ஆதரவு பெற்ற சிறிலங்காவின் முப்படைகள்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த நேரம் அது. ஆனால் தாக்குதல் தொடர்ந்து கடுமையானது. ஏனென்று அப்போது தெரியவில்லை. பின்னாளில், “போரை வேகமாக நடத்தி முடிக்குமாறு இந்தியா அழுத்தம் தந்த காரணத்தினாலேயே கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன” என்று சிறிலங்க அரசுத் தரப்பு தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் எழுதின.

மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதி முடிந்து, 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டு, மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்பது உறுதியானவுடன், ஈழத்தில் தாக்குதல் மேலும் கடுமையானது. அடுத்த இரண்டு நாட்களில் மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உலகமே அதிர்ந்தது. அமெரிக்காவில் இருந்து ஆஸ்ட்ரேலியா வரை எல்லா பத்திரிக்கைகளும் எழுதின. இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பெரும் கூக்குரல் எழுந்தது.

ஆனால் இவை எதையுமே கண்டுகொள்ளாமல், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதுபோல், தனது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சரவையில் பதவிகளைப் பெறுவதற்காக டெல்லிக்கு சென்று போராடிக்கொண்டிருந்தார். இதை தமிழினத்தின் வரலாற்றை எழுதுபவர்கள் நிச்சயம் குறிப்பிடுவார்கள்.

ஈழத் தமிழினம் கொன்று குவிக்கப்பட்ட அந்த‌த் தருணத்தில் டெல்லியில் பதவிக்காக போராடிக்கொண்டிருந்தவர் கருணாநிதி. ஒருவேளை அந்தப் போராட்டத்தைத்தான் இப்போது ‘இலங்கைத் தமிழர்களை அடகு வைத்து தனது பதவிப் போராட்டத்தை என்றைக்கும் தி.மு.க. நடத்தும்’ என்று கூறுகிறாரோ?

http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1104/08/1110408029_2.htm

  • கருத்துக்கள உறவுகள்

“மழை நின்றுவிட்டது, தூவாணம் நிற்கவில்லை”

அந்தத் தூவானமே இந்த நரியைத் தூக்கி எரியட்டும் தோழரே!!!

உங்களை மாதிரி நாலு பேர் இந்த நெருப்பை அனைய விடாது வைத்திருப்பதால் தான் தமிழ் நாட்டில் இன்று மழையே பெய்கின்றது.

உங்கள் தலைமுறையாவது, வ.உ.சிதம்பரப்பிள்ளை பிறந்த தமிழ் நாட்டின் தன் மானத்தைத் தூக்கி நிறுத்தட்டும்!!!

சினிமா சீரியல்கள் சரித்திரம் படைத்ததாக வரலாறு இல்லை.

ஆனால் அரை நிர்வாணப் பக்கிரி காந்தி, இந்தியாவை ஒருங்கிணைப்பதில்'ஓரளவு' வெற்றியும் கண்டார்.

அவருக்குக் கிடைத்த மிகப் பெரும் ஆதரவு தமிழ் நாட்டில் இருந்து தான் கிடைத்தது.'வட நாட்டில் இருந்து அல்ல'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.