Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இந்துக்கல்லூரி உடற்கல்வி ஆசிரியை வீட்டில் கொலை

Featured Replies

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 10, 2011

யாழ்.நகரில் பிரபல கல்லூரியைச் சேர்ந்த இளம் ஆசிரியையின் மரணத்தில் சந்தேகங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. சில்லாலை, சாந்தைப் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா அனுஷா (வயது 27) என்ற யாழ்.இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியையின் சடலமே நேற்றுமுன்தினம் வீட்டில் சாறியினால் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டது.

உடலில் நகக் கீறல் காயங்கள் காணப்படும் அதேசமயம், வேறு சில தடயங்களும் இருப்பதால், இவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வீட்டிலுள்ள ஏனையோர் கோயிலுக்குச் சென்றுவிட்டனர். மரணமான ஆசிரியை பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அதன் பின்னரே அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. கோயிலுக்குச் சென்றிருந்த இவரது குடும்பத்தவர்கள் திரும்பி வந்துள்ளனர். அப்போது யுவதி வீட்டில் இருக்கிறார் என்பதற்கான எந்த அறிகுறியோ அசுமாத்தமோ இருக்கவில்லை. அதையடுத்து, வீட்டார் உள்ளே சென்று பார்த்தபோது கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் அவரின் சடலம் காணப்பட்டது.

முழந்தாள் நிலத்தில் பட்டும் படாமலும் மடிந்த நிலையில் சடலம் கிடந்தது. கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுக்கமாக அன்றி இளகிய நிலையில் காணப்பட்ட தாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.நேற்றையதினம் மல்லாகம் பதில் நீதிவான் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்குமாறும் உடற் கூற்றுப் பரிசோதனை நடத்தி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தினார்.உடலில் கீறல் காயங்கள் காணப்படுவதாலும் வேறு சில தடயங்கள் இருப்பதாலும் இந்த யுவதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று விசாரணைகளின் பின்னர் தெரிவிக்கப்பட்டது. சடலம் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

My link

சட்ட வைத்திய அதிகாரி

மரணமான ஆசிரியையின் தந்தை

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வடக்குக் கிழக்கு இருந்தப்போ.. இப்படியான குற்றச் செயல்களை அறியவே முடியவில்லை. அந்தளவுக்கு வெகு குறைவு. சிங்கள இராணுவத்தினதும்.. தேச விரோதக் கும்பல்களினதும் ஆக்கிரமிப்போடு தேசம் போரால் மட்டுமல்ல.. சமூக வன்முறையாலும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு கட்டாவிட்டால்.. வடக்குக் கிழக்கு வன்முறைகள் படுகொலைகள் கொள்ளைகள் சட்டவிரோத நடவடிக்கைகள் மலிந்த இடமாக மாறிவிடும். சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு இதனை கொண்டு வந்து சிறீலங்கா அரசின் சிவில் நிர்வாகத் தோல்வியை இனங்காட்டி எமது தேசத்தை நாமே சர்வதேச ஒத்துழைப்போடு ஆளவும் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் சட்ட ஒழுங்கை பேணவும் வழிவகை செய்ய வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களின் காவல்துறை செயற்பட்ட அளவிற்கு சிறீலங்காவிடம் ஒரு தரமான சிவில் நிர்வாக கட்டமைப்புக்களும் அவற்றை அமுல் படுத்தும் துறைகளும் இல்லை. அல்லது தமிழர் தேசத்தில் அவை வன்முறைகளை ஊக்குவிக்கும் துறைகளாக இயங்குகின்ற என்ற காரணத்தை சர்வதேசத்தின் முன் சான்றுகளோடு முன் வைக்க வேண்டும்.

கடாபி சொந்த மக்களை வதைக்கிறார் என்று நடவடிக்கை எடுக்கும் சர்வதேசம்.. இந்த மாதிரியானவற்றை விட்டு வைத்து வேடிக்கை பார்ப்பதற்கு இந்த மாதிரியான நடவடிக்கைகளை இட்டுச் செயலற்றுப் போயிருக்கும் நாமும் ஒரு காரணம். இவை சாதாரண காதல் அல்லது குடும்பப் பிரச்சனைகள் அல்ல. 0.4 மில்லியன் மக்கள் வாழும் ஒரு பகுதியில் மாதம் ஒன்றுக்கு 50 பேர் கொல்லப்பட்டு 150 பேர் காணாமல் போவதென்பது சாதாரணமல்ல. அசாதாரணம். 40 மில்லியன் வாழும் லண்டனில் கூட இந்த நிலை இல்லை. :unsure::(:o

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.