Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும்: பழ.நெடுமாறன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும்: பழ.நெடுமாறன்

ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்களை படுகொலை செய்தது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளைக் கொன்றது, போர் முடிந்த பிறகு சித்ரவதை, முகாம்களில் அடைத்து படுகொலை, பாலியல் வன்முறை நிகழ்த்தியது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, அரசுக்கு எதிரான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை படுகொலை செய்தது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு சுமத்தியுள்ளது.

2010 ஜனவரியில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ராஜபட்சே அரசாங்கத்தை போர்க் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததோடு சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. இப்போதும் ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் ராஜபட்சே அரசை போர்க் குற்றவாளிகள் என சுட்டிக் காட்டியுள்ளன.

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிலிருந்து ராஜபட்சேவை காப்பற்றியதன் மூலம், அவரது கொடுஞ்செயல்களை மூடி மறைக்க இந்தியா துணை நின்றது.

இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்ததால், ராஜபட்சேவின் அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு முயன்றது. இப்போது உலக அரங்கில் ராஜபட்சே போர்க் குற்றவாளி என்பது அம்பலமாகியுள்ளது.

இனியாவது தனது கடந்த காலத் தவறுகளுக்கு இந்திய அரசு மன்னிப்புக் கேட்பதுடன், ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முன் வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=52064

விடுதலையை முன்னிறுத்த வேண்டும், பழிவாங்கலை பிறகு நாம் யோசிக்கவேண்டும்.

சோனியாவையும் அவர்களுடன் துணைபோனவர்களை பழிவாங்குதலையும், ஒட்டுமொத்த இந்தியாவின் மன்னிப்பையும் விடுதலைக்கு உந்துசேர்க்கும் எனில் அதை பாவிக்கலாம். ஆனால், அதன் மூலம் எமது இலக்கை தவறவிடுவதோ இல்லை மேலும் எதிர்ப்பை சம்பதிப்பதோ எனில், அது நம்மை மேலும் சிக்கலில் ஆழ்த்திவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையை முன்னிறுத்த வேண்டும், பழிவாங்கலை பிறகு நாம் யோசிக்கவேண்டும்.

சோனியாவையும் அவர்களுடன் துணைபோனவர்களை பழிவாங்குதலையும், ஒட்டுமொத்த இந்தியாவின் மன்னிப்பையும் விடுதலைக்கு உந்துசேர்க்கும் எனில் அதை பாவிக்கலாம். ஆனால், அதன் மூலம் எமது இலக்கை தவறவிடுவதோ இல்லை மேலும் எதிர்ப்பை சம்பதிப்பதோ எனில், அது நம்மை மேலும் சிக்கலில் ஆழ்த்திவிடும்.

இதில் நாங்கள் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சோனியா விரும்பினால் தமிழனை அழிச்சு தன் பலிவாங்கலை காட்ட முடிகிறது. ஆனால் தமிழனுக்கு சோனியாவில் தங்கி இருக்க வேண்டிய நிலை என்ற ஒன்றையும் நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் தவறானது. சோனியாவைப் பொறுத்தவரை அவர் இந்திய நலனை.. தனது குடும்ப நலனோடு இணைத்த நிகழ்ச்சி நிரலைக் கொண்ட ஒரு அரசியல்வாதி. அவரிடம் பணிந்து போவதால் மட்டும் தமிழர்களுக்கு சார்ப்பான நிலைப்பாடு வந்திடுமா என்பதும் கேள்விக்குரியது.

இந்தியா விடயத்தில் தமிழர்கள் எதிர்ப்பும்.. சார்ப்பும் என்ற ஒரு இரட்டை அணுகுமுறையை தான் கையாள வேண்டும். காரணம்.. இந்தியாவும் அப்படியே தான் தமிழர்களைக் கையாள்கிறது. தனக்கு தேவை என்றால் அரவணைக்கும். தேவை இல்லை என்றால் எதிரிகளோடு சேர்ந்து அழிக்கும்..! இந்த நிலையில் இந்தியாவை எமது நிலைப்பாட்டை ஆதரிக்க என்று கொண்டு வருவதற்கு எமக்கும் இரண்டு வழிகளும் தேவைப்படுகிறது. நாம் இந்தியாவிற்கு இளிச்ச வாயர்களாக இருந்தாலும் எமக்கு ஆபத்துதான். இந்தியாவை தொடர்ந்து எதிர்த்து நின்றாலும் சிக்கல் தான்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையை முன்னிறுத்த வேண்டும், பழிவாங்கலை பிறகு நாம் யோசிக்கவேண்டும்.

அகூதா அண்ணா சொல்வது சரிதான்.ஆனாலும் மனம் கேட்கவில்லையே!!! ஒன்று இரண்டல்ல, ஐம்பதினாயிரம் அப்பாவி உயிர்கள். அவை பறிக்கப் பட்ட விதம் மிகவும் கொடுமை.துடிக்கத் துடிக்க அவை கொல்லப்பட்ட்டன.தற்செயலாக நடந்த செயல் அல்ல.திட்டமிட்டு அரங்கேற்றப் பட்ட கொலைகள்.அதாவது விபத்து அல்ல. கொல்லப் பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகக் கொல்லப் பட்டவை. தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டவை. இங்கே தான் மனது வலிக்கின்றது. இந்தியாவால் இவற்றைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.கேர்னல் 'டயர்' நடத்திய அந்தக் கொலைகள் தான் இந்தியாவின் சுதந்திரத்திற்கே வழி கோலியது.இந்தக் கொலைகள் எங்கள் விடுதலைக்கு எம்மை இட்டுச் செல்ல வேண்டும்.இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும்!!!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.