Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

60 வருடகாலம் பெறமுடியாத தீர்வை மூன்று வருடங்களில் பெற்றுத் தருவாராம்;இப்படிக் கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

எதிர்ப்பரசியல் மூலம் பெறமுடியாத தீர்வை இணக்க அரசியல் மூலம் பெறமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருப்பதனால் தான் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறேன். எனவே, அனைத்து மக்களும் அணிதிரண்டு எமது கரங்களைப் பலப்படுத்தினால் 30+30 வருடங்களாகப் பெறமுடியாத தீர்வை மூன்று வருடங்களில் பெற்றுத் தருவோம்.

இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆனைக்கோட்டைச்சந்திக்கு அருகில் உள்ள துரைராசா மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது கூறினார்.

மானிப்பாய்,வட்டுக்கோட்டைத் தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்த அமைச்சர் தொடர்ந்து பேசுகையில் போது மேலும் தெரிவித்தவை வருமாறு:

கடந்த காலங்களில் எமக்குக் கிடைத்த அரியnவாய்ப்புக்களைச் சரியாகப் பயன்படுத்தத் தவறியதனால்தான் தமிழினத்துக்கு இந்த அழிவு ஏற்பட்டது. த.தே.கூ. சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றது. ஆனால், எமது கட்சி பொதுநல நோக்குடன் செயற்படுகிறது. அதனால்தான் நாங்கள் நாட்டைவிட்டு வெளியேறாமல் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறோம்.

1950 ஆம் ஆண்டிலிருந்து 1980 ஆம் ஆண்டுவரை ஜனநாயக வழியில் காலம் வீணாக் கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1980 இல் இருந்து 2009 வரை ஆயுதப் போராட்டம் மூலம் காலம் வீணாக்கப்பட்டது. இதனால் இருந்த உரிமைகளையும் இழந்து பின்தள்ளப்பட்டுள் ளோம். தமிழ் மக்களுக்கு இழந்த உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அரசுடன் இணைந்து செயற்படுகிறோம்.

வழக்கு எமக்குச் சாதகமாக வரும்

ஒத்திவைக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிக விரைவில் நடை பெறவிருக்கின்றது. எமது கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு மிகவிரைவில் வெளியாக இருப்பதுடன், எமக்குச் சாதகமாகவும் அது அமைய விருக்கிறது. எனவே, 19 உள்ளூராட்சிச் சபைகளின் அதிகாரங்களையும் நாங்கள் கைப்பற்ற வேண்டும். அதற்கு எல்லோரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அடுத்த மாதம் பிற்பகுதி யில் தேர்தல் நடைபெறலாம் என்ற நம்பிக்கை எமக்கிருக் கிறது. தேர்தல் பிரசாரத்துக்கு ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் இங்கு வரவிருக்கிறார்கள். எமது இலக்கு அபிவிருத்தியும் அதிகாரப் பகிர்வும்தான்.

பொது நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதாரத் திட்டங்கள், அபிவிருத்தி வேலைகள்யாவும் அரசஅங்கீ காரத்துடன் தான் இடம்பெறு கின்றன என்பதை மக்கள் அறியவேண்டும் என்றார்

http://onlineuthayan.com/News_More.php?id=1832

Laughing_hard.gifLaughing_hard.gifLaughing_hard.gif

... இந்த நூற்றாண்டின் தலை சிறந்த நகைச்சுவை ...

Edited by நிழலி
செய்தியை முழுமையாக இணைக்க

  • கருத்துக்கள உறவுகள்

60 வருடகாலம் பெறமுடியாத தீர்வை மூன்று வருடங்களில் பெற்றுத் தருவாராம்;

இப்படிக் கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ்

Laughing_hard.gif
  • கருத்துக்கள உறவுகள்

60 வருடகாலம் பெறமுடியாத தீர்வை மூன்று வருடங்களில் பெற்றுத் தருவாராம்;

இப்படிக் கூறுகிறார் அமைச்சர் டக்ளஸ்

இவ்வளவு திறமை இவரது தாடிக்குள் மறைந்து கிடந்திருக்கின்றது! இவ்வளவு நாளும் எமக்குத் தெரியாமல் போய் விட்டது!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.