Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் இராணுவத்தால் ஒரு சிவிலியன் கூடக் கொல்லப்படவில்லை-முன்னாள் எம்பி கனகரத்தினம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இராணுவத்தால் ஒரு சிவிலியன் கூடக் கொல்லப்படவில்லை-முன்னாள் எம்பி கனகரத்தினம்!

Posted by uknews On April 21st, 2011 at 5:00 am

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்பியும், தற்போது மகிந்த ராஜபச்சவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் எம்.பி. எஸ். கனகரத்தினம் ஏசியன் டிரிபியூன் இணையத்திற்கு செவ்வி ஒன்றை வழங்கியிருக்கிறார். அதில் அவர் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை திரிபுபடுத்தப்பட்டிருப்பதாகவும் புலிகளே பொதுமக்களை கொலை செய்யதாகவும் தெரிவித்துள்ளார்.

2008 ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருந்த போதும் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைப் படையினரால் ஒரு சிவிலியன் கூட கொலைசெய்யப்படவில்லை என கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை குறித்து ‘ஏசியன் டிரிபியூன்’ இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியிலே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாக பயன்படுத்தி தடுத்து வைத்திருந்த போது இவரும் (கனகரத்தினமும்) பொதுமக்களுடன் புதுமாத்தளத்தில் தங்கியிருந்தார். அங்கு நடந்த சம்பவங்களை ஐ.நா. செயலாளரின் நிபுணர்கள் குழு திரிபுபடுத்தி கூறியிருப்பதை மறுத்துள்ள அவர், நிபுணர் குழுவின் அறிக்கை தவறானதென்றும் திரிபுபடுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ. நா. செயலாளரின் பழிவாங்கும் மனப்பான்மையையே இந்த அறிக்கை சித்தரிப்பதாகவும் மேற்கு நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் மேற்கு நாட்டு தலைவர்களின் கருத்தை பிரதிபலிப்பதையே வெளிப்படுகிறது எனவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னியில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து விளக்கியுள்ள அவர் பொதுமக்களுடன் தங்கியிருந்து தான் நேரில் கண்டவற்றை முதற் தடவையாக பகிரங்கப்படுத்தியுள்ளார்.

வன்னி மக்களின் பிரதிநிதி என்ற வகையில் அந்த மக்களுடன் தங்கியிருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதாக குறிப்பிட்டுள்ள அவர் உக்கிர யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்கள் துப்பாக்கி ஏந்திய புலிகளினால் கட்டாக்காலி நாய்கள் போன்று ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

உச்சக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்க உத்தரவையும் மீறி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கியிருந்ததாக முன்னாள் எம்.பி. கனகரத்தினத்திற்கு எதிராக அரசாங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள், பாரதூரமான கொலைகள் பற்றிய நேரடி தகவல்களை ஐ. நா.வோ மேற்கு நாடுகளோ அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார்.

மூன்றாவது அல்லது நான்காவது நபருக்கூடாக வெளியான அறிக்கைகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் மற்றும் அவர்கள் தொடர்பில் அக்கறையுள்ள அமைப்புகள் மூலம் கிடைத்த முறையற்ற தகவல்கள் என்பவற்றின் அடிப்படையிலே நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை உறுதிபடக் கூற முடியுமா என அவர் ஐ. நா. நிபுணர்கள் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இருந்த மக்கள் பங்கர்களில் இருந்து வெளியே வர முடியாதிருந்தனர். வெளியில் வந்த மக்கள் புலி துப்பாக்கிதாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த மக்கள் பற்றிய நேரடி தகவல் எதுவும் வெளிவந்திருக்க முடியாது எனவும் முன்னாள் எம்.பி. கனகரத்தினம் கூறியுள்ளார்.

வெள்ளைக்கொடி ஏந்தி வந்த புலித் தலைவர்கள் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.முக்கிய புலி தளபதிகள் எவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்வதை பிரபாகரன் விரும்பவில்லை. அவர்கள் எப்பொழுதும் பிரபாகரனின் ஆயுதக் குழுவினால் சுற்றிவளைக்கப்பட்டே இருந்தனர். யாராவது புலித் தலைவர் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்ல முயன்றால் அவரை சுடுமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

புலி உறுப்பினர்களுக்கு பிரபாகரன் சயனைட் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். படையினரைத் தோற்கடிக்க முடியாத நிலையில் சயனைட் வில்லைகளை கடித்து தற்கொலை செய்யுமாறு பணிக்கப்பட்டிருந்தனர். இதனை எவரும் மீறுவதை பிரபாகரனால் சகிக்க முடியாதிருந்தது.

நடேசனும் மற்றும் தலைவர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு செல்லும் நம்பிக்கைத் துரோகத்தை பிரபாகரன் ஒருபோதும் ஏற்றிருக்க மாட்டார். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரபாகரன் அவர்களை சுட்டுக்கொன்றிருக்கக் கூடும் என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

1983 ஆம் ஆண்டு தின்னவேலியில் (திருநெல்வேலி) வைத்து இராணுவ படையணி மீது நடத்திய தாக்குதலையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அந்தத் தாக்குதலில் பிரபாகரன், கிட்டு, ஐயர், புலேந்திரன், சந்தோசம், செல்லக்கிளி, அப்பையா ஆகியோர் தொடர்புபட்டிருந்தனர்.

செல்லக்கிளி தனது இளைய சகோதரன் என்று கூறியுள்ள கனகரத்னம், இந்த தாக்குதலின் போது அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக கூறினார். இந்த சம்பவத்தையடுத்து தமது குடும்பத்தினர் புலிகளுடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றும் கனகரத்தினம் கூறியுள்ளார்.

தமிழ் செல்வனே தன்னை 2004 பொதுத் தேர்தலின் போது வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக நிறுத்தியதாக தெரிவித்துள்ள அவர் தனது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருப்பதை கண்டு வியப்படைந்ததாகவும் கூறியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானது முதல் தான் வன்னி மக்களுடன் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

saritham.com

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இருந்த மக்கள் பங்கர்களில் இருந்து வெளியே வர முடியாதிருந்தனர். வெளியில் வந்த மக்கள் புலி துப்பாக்கிதாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர். இந்த நிலையில் அந்த மக்கள் பற்றிய நேரடி தகவல் எதுவும் வெளிவந்திருக்க முடியாது எனவும் முன்னாள் எம்.பி. கனகரத்தினம் கூறியுள்ளார்.

சரி உங்கள் கருத்தை ஒரு கதைக்கு ஏற்றுக்கொள்வோம். நீங்களே கூறியுள்ளீர்கள் மக்கள் பங்கர்களில் இருந்து வெளியே வர முடியாதிருந்தனர். இராணுவம் பொது மக்களைக் கொல்லவில்லை எனின்,என் அவர்கள் பங்கர்களில் ஒழிக்க வேண்டும்? புலிகளிடம் 'மிக்' விமானங்களா இருந்தன?

நீங்கள் நேற்று ஒரு அறிக்கையில் புலிகள் அறுநூறு பொது மக்களைக் கொன்றதாகக் கதை அளந்தீர்கள்.இன்று விடிவதற்கிடையில் அறுபதினாயிரம் பொது மக்களுக்கும் கணக்குக் காட்டி விட்டீர்கள்?

அறுபதினாயிரம் பொதுமக்களைக் கொன்ற புலிகள் உங்களை ஏன் விட்டு வைத்தார்கள்?

நீங்கள் சாரத்துடன் வெளியில் வந்தபோது உங்களுக்காகக் கண்ணீர் விட்டவர்கள் தமிழர்கள்!

நீங்கள் இன்னும் உப்புப் போட்டுத்தான் சாப்பிடுகின்றீர்களா? அல்லது 'கிரிபத்' தானா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெளியே வந்த போது இதே சிங்கள அரசபடைகளாலும் அரசாலும் சிறை வைக்கப்பட்டிருந்தவர். புலிகளால் துன்புறுத்தப்பட்டவரை ஏன் இராணுவம் சிறையில் அடைத்தது..??! இராணுவத்திற்கு ஆதரவைச் சொல்லி உடன வெளில வந்திருக்க வேண்டியது தானே. இவர் வன்னியில் இருந்து வெளியே வந்த பின் கூட மக்களோடு வாழ அனுமதி அளிக்கப்படவில்லை. முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிங்கள இராணுவத்தின் கொடூரங்களுக்கு உறவுகளை.. சொந்தங்களை... பறிகொடுத்த ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் வாழ்கின்றனர். உள்நாட்டிலும் வாழ்கின்றனர். நூற்றுக்கணக்கான மக்கள் இராணுவ அச்சுறுத்தலையும் தாண்டி சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னும் இராணுவக் கொடூரங்கள் பற்றி சாட்சியம் அளித்துள்ளனர். தங்கள் உறவுகளை மீட்டுத் தருமாறு கெஞ்சி மன்றாடிக் கொண்டுள்ளனர். அப்படி இருக்க..

இவர் இப்போது கோத்தா எழுதிக் கொடுத்ததற்கு தமிழ் மொழியாக்கம் செய்கிறார். அவ்வளவே..! உலகம் வன்னியில் நடந்தது பற்றிய உண்மையை நன்கு அறியும். நீங்க தப்பிப்பிழைக்க இதுவும் சொல்லத்தான் வேணும்.. இன்னும் சொல்லவும் செய்வீர்கள். அது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் நீங்கள் வாழும் இடம் அப்படி. அங்கு நீதி கிடையாது.. சிங்கள இனவெறி மேலாதிக்க பயங்கரவாதமே மிஞ்சிக் கிடக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய முன்னாள் எம்பி மாதிரிப் பல முன்னாள் போராளிகளும் கதைப்பார்கள்!

ஒரு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளித் தளபதி அவரைச் சிங்கள இராணுவம் சிறையில் அடிக்கவில்லை, ஆனால் அவரது கட்டளைக்குக் கீழ் இருந்த போராளிகள் சிலர் தன்னைத் தாக்கியதாகக் கவலைப்பட்டாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்போது கோத்தா எழுதிக் கொடுத்ததற்கு தமிழ் மொழியாக்கம் செய்கிறார். அவ்வளவே..! உலகம் வன்னியில் நடந்தது பற்றிய உண்மையை நன்கு அறியும். நீங்க தப்பிப்பிழைக்க இதுவும் சொல்லத்தான் வேணும்.. இன்னும் சொல்லவும் செய்வீர்கள். அது ஆச்சரியமான ஒன்றல்ல. ஏனெனில் நீங்கள் வாழும் இடம் அப்படி. அங்கு நீதி கிடையாது.. சிங்கள இனவெறி மேலாதிக்க பயங்கரவாதமே மிஞ்சிக் கிடக்கிறது.

அது சரி நெடுக்ஸ்! கோத்தா கொடுத்ததைத் தான் திரும்பக் கக்குகின்றார். அதில் கொஞ்சம் கூட உமிழ்(தமிழ்)நீர் கலக்காமல் அல்லவா கக்குகின்றார்?

தற்போதைய முன்னாள் எம்பி மாதிரிப் பல முன்னாள் போராளிகளும் கதைப்பார்கள்!

ஒரு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளித் தளபதி அவரைச் சிங்கள இராணுவம் சிறையில் அடிக்கவில்லை, ஆனால் அவரது கட்டளைக்குக் கீழ் இருந்த போராளிகள் சிலர் தன்னைத் தாக்கியதாகக் கவலைப்பட்டாராம்.

தமிழன் என்றுமே 'சூரியனாக' வாழ்ந்து பழக்கமில்லாதவன்! 'சந்திரனாகவே' வாழப் பழகிவிட்டான்!

இதன் உட்கருத்து உங்களுக்குப் புரிகிறதல்லவா கிருபன்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் என்றுமே 'சூரியனாக' வாழ்ந்து பழக்கமில்லாதவன்! 'சந்திரனாகவே' வாழப் பழகிவிட்டான்!

இதன் உட்கருத்து உங்களுக்குப் புரிகிறதல்லவா கிருபன்?

நன்றாகவே புரிகின்றது. இருட்டில் இருப்போர் சந்திரனின் ஒளியை வேண்டாம் என்றும் சொல்லுவதில்லை. <_<

எனக்கு தெரிய கேபி முதல்,வைத்தியர்கள், போராளிகள் நாடாள மன்ற உறுப்பினர்கள் இன்னும் பலர் இவர்கள் மட்டுமல்ல இவர்களின் முழுக்குடும்பமும் துப்பாக்கி முனையில் தான் வாழ்க்கை நடத்திகொண்டிருக்கிறார்கள்

... அங்கிருப்பவர்கள் அதைச்செய்கிறார்கள்/இதைச் செய்கிறார்கள் என்பதில், எவ்வித அர்த்தமும் இல்லை, ஆயுத முனையில் அடுத்த கணம் என்ன நடக்குமோ என உயிர் வாழ போராடுகிறார்கள்!!! .... நெஞ்சை நிமிர்த்தி வீரம் பேசக்கூடிய நிலைமை அங்கில்லை ... இரத்தவெறி பிடித்து சிங்களமும், ஒட்டுக்குழுக்களும் அலையும் நிலையில் ...

ஆனால் ... இந்த கனகரத்தினம் போன்றதுகள் கடந்த காலங்களில் கூட பா.உ ஆக எவ்வித தகுதியும் அற்றதுகள், தமிழ்ச்செல்வனுக்கு பல்லைக் காட்டியதற்கு இவர்களுக்கு கிடைத்த பரிசு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.