Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் இளைஞன் அடையாள உண்ணாவிரதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Apr 29, 2011 / பகுதி: செய்தி /

தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் இளைஞன் அடையாள உண்ணாவிரதம்

போர்க்குற்றம் புரிந்த இனவாத சிங்கள ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காகவும் யேர்மனியில் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்த்தேசிய மனிதனேய செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக்கோரியும் யேர்மனியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அன்ஷ்பாக் (91522 Ansbach) நகர உயர்நீதிமன்றத்தின் முன்பாக 17 வயதுடைய ஐனார்த்தன் அவர்கள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

யேர்மனிய நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது தாய் நாடான ஈழத்தில் இனவெறிபிடித்து தாண்டவமாடி பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்த இலங்கை அரசுக்கு உலகநாடுகள் தண்டனை பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் அத்தோடு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்கள் தொடர்பாக ஜ.நா நிபுணர்குழுவினால் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட அறிக்கையை அடித்தளமாக கொண்டு உலக சட்ட திட்டங்களுக்கு அமைவாக போர் குற்றத்தில் ஈடுபட்டு பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை பலியெடுத்த மகிந்த அரசுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே 17 வயதுடைய ஐனார்த்தன் அன்ஷ்பாக்(91522 Ansbach) நகரில் இன்று தன்னிச்சையாக அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார்.

இதையறிந்த யேர்மன் மக்கள் அவை இவரின் அடையாள உண்ணாவிரதத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதோடு பல விதமான உதவிகளையும் செய்து கொடுத்துள்ளமை வரவேற்க்கத்தக்கதே. அத்தோடு யேர்மன் மக்கள் அவையே குறிப்பிட்ட அடையாள உண்ணாவிரதம் தொடர்பாக எமது ஊடகத்திற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரின் அடையாள உண்ணாவிரதத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாக அன்ஷ்பாக் நகர மக்களும் அதனையண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் ஆன்ஷ்பாக்(91522 Ansbach) முதன்மை நீதிமன்றத்திற்கு முன்பு சென்று ஆதரவு கொடுக்குமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இடம்:

Verwaltungsgericht Ansbach

Promenade 24

91522 Ansbach

Deutschland

Von 06:00 Uhr bis19:00 Uhr

அடையாள உண்ணாவிரதம் இருக்கும் ஐனார்த்தனுடன் தொடர்பு கொண்டு உங்கள் ஆதரரை தெரிவிப்பதற்கு :0049-74 2344998 begin_of_the_skype_highlighting 0049-74 2344998

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேளையில் நல்லதொரு முயற்சி

அவருக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐனார்த்தனனுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.