Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தடுக்க பேராபத்தை நாடுகிறது இலங்கை

Featured Replies

தனக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தடுக்க பேராபத்தை நாடுகிறது இலங்கை!

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-29 07:21:44| யாழ்ப்பாணம்]

இலங்கையில் இடம்பெற்ற வன்னிப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழு, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கை முழுமையாக வெளிவருவ தைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசு கடும் பிரயத்தனம் செய்த நிலையில், அறிக்கை முழுமையாக வெளிவந்தாயிற்று.வன்னியில் நடந்த யுத்தக் குற்றம் தொடர் பில் இதுவரை சர்வதேச ஊடகங்களும், மனித வுரிமை அமைப்புக்களுமே தகவல்களை வெளியிட்டு வந்தன. இப்போது ஐ.நா. சபையும் போர்க் குற்றம் தொடர்பில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைக்கு எதிரானது. அதனை ஏற்க முடியாது என இலங்கை கூறிவருகின்ற போதிலும், அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விடயங்கள் குறித்து உரிய- தகுந்த விளக்கம் முன் வைக்கப்படாவிடில் அறிக்கையின் குரல்கள் ஒருபோதும் அடங்கப் போவதில்லை என்பது நிறுத்திட்டமான உண்மை.எனவே அவரைப் பிடித்து இவரைப் பிடித்து அறிக்கையின் பலத்தை அடக்கிவிட முயற்சிப்பது குறுங்காலத்திற்கு உகந்ததாக இருப்பி னும் நீண்டகாலத்திற்கு அது உதவமாட்டாதெ ன்பது தெளிவு. இலங்கை மிகச் சிறிய நாடு. அந்த நாட்டிற்கு சீனாவின் நட்பும், ரஷ்யாவின் ஆதரவும் நன் மையானவையாக இருக்கும் என ஒரு போதும் நினைத்தலாகாது.

போர்க் குற்றம் தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழு விடுத்த அறிக்கையால் ஏற்படக் கூடிய இடர்பாடுகளை சீனாவின் உதவியுடன் தீர்க்க முற்படும்போது,சீனாவால் ஏற்படக் கூடிய உபத்திரம் இலங் கைக்குள் நுழைகிறது என்பதை ஆளும் தரப்பு உணரவேண்டும். ஏனெனில் இலங்கைக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தின் தோற்றுவாய் சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இலங்கை மீது கொண்ட பற்றின் காரணமாக ஏற்பட்டதல்ல. மாறாக இலங்கையை தனது ஆதிக்கத் தின் கீழ்- கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள் நோக்கம் கொண்டதாகும்.

இதேபோன்றுதான் இந்தியாவும். இந்தியாவுக்குப் புலிகளை அழிக்கும் நோக்கம், அந்த நோக்கம் இலங்கையைப் பாதுகாக்கும் எண் ணம் சார்ந்ததல்ல.தனது சுயநலத்தின் அடிப்படையில் புலிகள் மீதான போருக்கு உதவிசெய்த இந்தியா இப்போதும் இலங்கைக்கு ஆதரவு வழங்கவே முற்படும்.வன்னியில் நடந்த போரில் தனக்கு இருக் கக் கூடிய பங்கு மற்றும் இலங்கை சீனாவு டன் கொண்டுள்ள உறவை தடுத்தல் ஆகிய இரு நிலைகளில் இந்தியாவின் ஆதரவும் இருக்கும். ஆனால் இலங்கை சீனாவோடு உறவை நீடித்துக் கொள்ளுமாயின் இந்தியா சினம் கொள்ளும்.

இந்தியாவின் சினம் கண்டு சீனாவின் நட் பை துண்டித்துவிட இலங்கை நினைத்தால், சீனா பகைத்துவிடும். ஆக, ஐ.நா. அறிக்கைக்காக இலங்கை அரசு ஆதரவுவேண்டி நிற்கும் சீனாவும், இந்தியா வும் அறிக்கை விவகாரத்திற்குப் பின் இலங் கைக்கு அடிபோடும் நிலைமைக்கும் தள்ளப் படலாம். அப்போது, அட! அறிக்கையில் குறிப்பிட்ட ஆலோசனையை அமுலாக்கியிருக்கலாம் என்ற ஞானம் பிறக்கும். அந்த ஞானத்தால் என்ன பயன்?

http://www.valampurii.com/online/viewnews.php?ID=18568

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலே கூறப்பட்ட விடயம் மிகவும் உண்மையானது. இலங்கையின் நிலை ஆப்பிழுத்த குரங்கு போலவும், இரதலைக்கொள்ளி எறும்பு போலவும் இக்கட்டான நிலைமையில் இல்ங்கை மாட்டிக்கொண்டுள்ளது. எந்தப்பக்கம் அரக்கினாலும் 'செக்" சொல்லக்கூடிய வாய்பபு அதிகமாகி இருப்பதால் இலங்கை ஒலு பொறிக்குள் விழுந்துவிட்டது. இப்பொறியைத் தமிழர்கள் தங்கள் வாய்ப்புக்குத்திருப்பிக்கொள்ள புத்தி சாதூரியமாக நடந்து கொள்ளவேண்டும்

  • தொடங்கியவர்

கூட்டமைப்பு தங்களுடன் சிங்களம் ஈடுபடும் பேச்சுவார்த்தை நிகழ்வுகளை அது சர்வதேசத்திடம் ஏமாற்றும் நோக்கில் பயன்படுத்துவதை அனுமதிக்கப்போவதில்லை என கூறியுள்ளது.

இந்த பேச்சுவர்த்தை உட்பட இன்றுவரை சிங்களம் இதையே இந்தியா உட்பட்ட நாடுகளின் ஆதரவுடன் செய்துவந்தது. தொடர்ந்தும் இந்தியா இந்த நாடகம் அரங்கேற அனுமதிக்குமா என்பது இன்றைய காலகட்டத்தில் உற்று நோக்கப்படவேண்டியது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.