Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடா நாடாளுமன்றத்திற்கு தெரிவான ராதிகாவிற்கும், இலங்கை அதிகாரி கரு பரணவிதாரனவிற்கும் இடையே இரகசிய சந்திப்பு!

Featured Replies

கனடாவில் ஸ்கார்பரோ தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத் தமிழருமான ராதிகா சிற்சபேசனுக்கும் கனடாவிற்கான இலங்கை அதிகாரி கரு பரணவிதாரனவிற்கும் இடையே இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபசேன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்தும் தரப்பினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையின் புரியப்பட்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஆராய கனேடிய நாடாளுமன்ற சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவொன்றை அமைக்க வேண்டுமெனக் கூறியிருந்தார். இந்தக் கருத்தே இலங்கையின் தேசப்பற்றாளர்கள் எனக் கூறிக்கொள்ளவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்களையும், அழுத்தங்களை சமாளிப்பதற்கு புலம்பெயர் வாழ் தமிழர்களுடன் உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டுமென ஒரு சாரார் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதற்கமைய அரசாங்கத் தரப்பினர் புலம்பெயர் தமிழர்களில் சில பிரிவினருடன் தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கனடாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனைச் சந்தித்துப் பேச்சு நடத்துமாறு ஜனாதிபதிக்கு நெருக்கமானவரும், கனடாவிற்கான இலங்கை அதிகாரியுமான கரு பரணவிதாரனவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக்கமைய அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ராதிகா சிற்சபேசனை, ஜனாதிபதிக்கு நெருக்கமான கரு பரணவிதாரன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது ராதிகாவின் வெற்றிக்கு மகிந்த ராஜபக்~ தெரிவித்த வாழ்த்தும் கரு பரணவிதானவினால் பகிரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராங்கனி வாஹிஸ்வரா தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

படம்:

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1778:2011-05-13-03-03-44&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியில் உள்ள படம் வெட்டி ஓட்டபட்டுள்ளது ...தலைப்பும் அதிவிசெடமாக தயாரிக்கப்பட்டுள்ளது....கிளம்பிட்டாங்க குழப்ப..

செய்தியை பார்த்தால் வெட்டி ஒட்டினவர் மனநிலை விளங்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப் பகிரங்கமாகப் போடுகின்றார்கள்.. பிறகென்ன இரகசியச் சந்திப்பு!!

2 தினங்களுக்கு முன் ஒரு இணைய ஊடகம் எனச் சொல்லிக் கொள்பவர்கள், வேறோரு இணையத்துக்கு அவர் பேட்டி வழங்கி விட்டாராம், தங்களுக்கு வழங்கவில்லை. நடுநிலமை தவறி விட்டார் என ஒப்பாரி... ராதிகா ஏன் தேர்தலில் நின்றேன் என்று யோசி;ககுமளவு நம்மவர்களின் நடவடிக்கை!!

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து அந்த கனடிய நாடாளுமன்ற உறுப்பினரை சுதந்திரமாக செயற்பட விடுங்கள். அதேவேளை அவர் தமிழ் மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே தான் தீர்மானிக்க வேண்டும். வாக்குப் போட்ட மக்களை மதிக்கா விட்டால் என்ன நிலை என்பதை அவர்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் விளங்கிக் கொள்ள மக்கள் வகை செய்ய வேண்டுமே தவிர.. அவரை இவரை சந்திக்காத என்று மக்கள் சொன்னாலும்.. அவர்கள் செய்யாமல் இருக்கமாட்டார்கள். சந்திப்புக்கள் வாக்குப் போட்ட மக்களின் நலனை விருப்பை பாதிக்காமல் இருப்பின்.. அதுவே நன்று. இன்றேல்... மக்களே அடுத்த தடவையும் வாக்குக் கேட்டு வரும் நிலையில்... அதற்கு பதில் அளிப்பர். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.