Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜனி மீது தமிழகமக்கள் காட்டும் அக்கறையை ஈழத்தமிழினம் மீது காட்டவில்லையே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published on May 29, 2011-10:43 am

செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகின்றன செய்திகள்.

ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன் மொத்த தமிழகமும் பட வேண்டும்?

அவர் ஒரு நடிகர், அவர் தன் நடிப்பிற்காக கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கின்றீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா

அப்படி என்ன? இவர் பெரும் சமூகப்போராளியா? எந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?

செகுவார, பெடல் காஸ்ட்ரா போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!!

காவிரிச் சிக்கலில்

கன்னடர்களால் தமிழர்கள் வஞ்சிக்கப் பட்டபோது , தமிழர்களான பாரதிராசா , சத்தியராசு , போன்றவர்கள் நடத்திய கண்டனப் பேரணியை புறக்கணித்து , மட்டம்தட்டி, ஓரம்கட்டி, கன்னட நடிகன் அம்பரீஷ் ( இவர் கர்நாடக மாண்டியாவில் தேர்தலில் நின்றபோது பல கோடிகள் செலவு செய்தது ரசினிதான். 1991 இல் காவிரிக் கலவரம் நடைபெற்றபோது பல்லாயிரம் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது கன்னடர்கள் சார்பாக நடந்துகொண்டதும் இந்த ரசினிதான் ) , சுப்ரமணிய சாமி போன்றவர்களின் ஏவலின்படி தனித் தவில் வாசித்து , அந்த போராட்ட வேகத்தை மந்தபடுத்தி, அதன் கூர்மையை மழுங்கடித்தவர்தான் ரஜனிகாந்த்

உரிமையை பிரச்சனையாகி காவிரியாற்றிலே தண்ணீர் வரவேண்டுமா ? இல்லை செந்நீர் வரவேண்டுமா ? என்று பேசி , கன்னட வெறியர்களின் வன்கொலை வெறி உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதிலே குளிர்காய்ந்தவர்தான் ரஜனிகாந்த்

இந்த ரசினிகாந்து ! வெளுத்ததெல்லாம் பாலாகாது ; என்பதை தமிழர்களே சிந்தியுங்கள் !

இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்?

ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்?

இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.

உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?

உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.

உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களைப்போய் பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள்,

முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.

அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள். எழுதுங்கள்

அதைவிட்டு விட்டு ரனினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன்… பேசினேன்… இப்படி அறிக்கைகள் பறக்கின்றன. மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள்.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போய் பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு(!) கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட இல்லை.

இதை பற்றி எழுதுங்கள்,

கவலைப்படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வெற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை எப்போது மாறும்? நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.

தமிழ்நாட்டிலிருந்து எல்லைத்தமிழன்.

source:thinakkathir.

... புண்ணாக்குத்தனமான கட்டுரை ... இப்போதெல்லாம் கண்ட கண்ட குப்பையெல்லாம் யாழில் கொட்டப்படுகின்றது ...

... புண்ணாக்குத்தனமான கட்டுரை ... இப்போதெல்லாம் கண்ட கண்ட குப்பையெல்லாம் யாழில் கொட்டப்படுகின்றது ...

உண்மை தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... புண்ணாக்குத்தனமான கட்டுரை ... இப்போதெல்லாம் கண்ட கண்ட குப்பையெல்லாம் யாழில் கொட்டப்படுகின்றது ...

நெல்லையன் அண்ணாவுக்கு ஒரு பச்சை. :)

YARLIL RAJINI RASIKARKAL ROMPA PER IRUPPANKA POLA.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... புண்ணாக்குத்தனமான கட்டுரை ... இப்போதெல்லாம் கண்ட கண்ட குப்பையெல்லாம் யாழில் கொட்டப்படுகின்றது ...

அவரவர் பார்க்கும் பார்வையை பொறுத்தது, சிலருக்கு சரியாக படுவது மற்றவருக்கு பிழையாக இருக்கும்.

''மொத்தத்தில் பார்வையை பொறுத்தது''

Edited by tamil arasu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.