Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலங்களைப் பறித்தவர்கள் வாக்குகளையும் பறிக்கத்தொடங்கியுள்ளார்கள் !

Featured Replies

வன்னிப் பகுதியில் சர்வதேசத்தின் வழிநடத்தலில் சிங்களத்தின் கோரத் தாண்டவம் உச்சம்பெற்று அப்பாவி உயிர்கள் ஒரே நேரத்தில் காவுகொள்ளப்பட்டு குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெற்று, வரும் 18 ஆம் நாள் இரண்டு ஆண்டுகளை எட்டுகின்றன. ஆனால், வன்னிப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் உள்ளனர்.

அப்பாவி மக்களை, குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடு ஏதுமின்றி வகை தொகையின்றி துடிக்கத் துடிக்கக் கொன்றொழித்த சிங்களக் கொடுங்கோல் அரசின் இராணுவத்தினர், அந்த மக்களுக்குரிய சொத்துக்களை சூறையாடித் தனதாக்கிக் கொண்டுள்ளனர்.

குழந்தைகள் உட்பட உணவின்றி, தாகத்திற்கு நீர்கூட இன்றி, உறவுகளை இழந்த துன்பம் ஒருபுறம் வாட்ட செய்வதறியாது நிர்க்கதியாக நிராயுத பாணியாக கொட்டும் மழை, கொளுத்தும் வெய்யிலில் நின்ற எம் இனத்தின் மீது சர்வதேசத்தின் மௌனத்துடன் சிங்களம் குண்டுமாரி பொழிந்து வேடிக்கை பார்த்தது.

அவர்கள் துடிதுடித்து இரத்தம் வளிந்தோட மாண்ட நிலங்களை இன்று சிங்களம் கையகப்படுத்தி தனது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றது. அதில் பெரும்பாலானவற்றை சுற்றுலாத் தலங்களாக மாற்றியுள்ளது.

அங்கு நாளும் சிங்களவர்கள் வந்து குவிகின்றனர். அவர்களுக்கு தங்குமிட வசதிகள் உட்பட தடபுடலான வரவேற்புகள் அங்கு நடந்தேறுகின்றன. ஆனால், அப்பகுதிகளில் எம்மக்கள் மீளக் குடியமர்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீளக் குடியமர்வதற்கு மட்டுமல்ல அங்கு தமது நிலங்களை சென்று பார்வையிடுவதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்னும் முகாம்களிலும் சிறைகளிலும் எம் உறவுகள் சித்திரவதைகளுக்கு மத்தியில் வாடும் நிலை தொடர்கதையாக இருக்க, அவர்களின் சொந்த நிலங்களில், சிங்களம் இன்று துடுப்பாட்டம் ஆடுகின்றது. இது வரலாற்றுக் கொடுமை. இதனை சிங்கள ஊடகங்களே நிழற்படங்களுடன் வெளியிட்டமை, சிங்களவர்களின் அத்துமீறல்களை அடையாளப் படுத்துகின்றது.

சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னோடியாக வன்னிப் பகுதியில் அதிகளவான பிரதேசங்களை தற்போது இராணுவம் தமது தேவைகளுக்காக கையகப் படுத்தியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக, சமய நிறுவனங்கள் குரல்கொடுக்க வேண்டும். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பிரமுகரும் தமிழ்த்துறைப் பேராசியர் இரா.சிவசந்திரன் யாழ்ப்பாணத்தில் வைத்து மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்

கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது. கிழக்கில் அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதியில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வவுனியாவிலும் 30 வீதமான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

மன்னார் பூநகரி வீதி (ஏ32) நவீன முறையில் செப்பனிடப்பட்டு வருகிறது. அந்தப் பிரதேசத்தில் சிங்களக்குடியேற்றம் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. பூநகரியில் மரமுந்திரிகை செய்கைக்காக 2 ஆயிரம் பரப்பளவு நிலத்தை இராணுவம் கையகப் படுத்தியுள்ளது. மல்லாவி, துணுக்காய்ப் பகுதியில் விவசாயப்பண்ணைக்கு என அதிகளவு நிலத்தை இராணுவம் எடுத்துள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகரை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 70 ஆயிரம் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேவேளை அங்கு 70 ஆயிரம் பொதுமக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்

ளனர். மக்களும் இராணுவமும் சம அளவில் உள்ளனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் எப்படி மக்கள் நிம்மதியாக வாழமுடியும்.

எனவே வன்னிப் பெருநிலப்பரப்பில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுதந்திரமாகச் சென்று பணியாற்ற அனுமதி கிடைக்க வேண்டும். இவற்றுக்காக பல நிறுவனங்கள், அமைப்புகள் உருவாகிக் குரல் கொடுக்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மறக்கப்பட முடியாதவை. தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஆவணப்படுத்தப்படவேண்டும் - இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், யாழ்.மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வின்படி சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவுள்ளனர் என யாழ்.தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் 93 ஆயிரம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மீளாய்வுப் பணிகளின் அடிப்படையில் இத்தகைய தரவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் உத்தியோகபூர்வமான இறுதித் தரவுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியாகும் என்றும் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் யூன் மாத இறுதியுடன் செல்லுபடியற்றதாகிறது. இதன் பிரகாரம் 2010 ஆம் ஆண்டுக்குரிய புதிய வாக்காளர் இடாப்பு மீளாய்வுப்பணிகள் கடந்த 6 மாதங்களாக இடம்பெற்று வருகின்றன. இதுவரை மீளாய்வின் 90 வீதமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று விடும். மீளக்குடியமர்ந்தவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என சுமார் 93 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் புதிதாக இணைக்கப்படுகின்றனர். புலம் பெயர்ந்தவர்கள், மரணமானவர்கள், வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் போன்றோரே 2009 ஆம்ஆண்டு இடாப்பில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.

2010 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பு எதிர்வரும் ஜ?ன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில்8 லட்சத்து 16ஆயிரத்து 5 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 35 ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விடயம் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், இரட்டைப் பிரஜாவுரிமை கோரி விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்களை கடுமையான முறையில் பரிசீலிப்பதற்கான திட்டங்களை அரச அதிகாரிகள் கொண்டுள்ளதாக அதிகாரியருவர் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குரிய பொறுப்பு கோத்த பாய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இனி நாட்டுக்கு விசுவாசமுள்ளவர்களுக்கும் தமது வரிகளைச் செலுத்துவதன் மூலம் நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளிப்பவர்களுக்கும் மட்டுமே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார். சிங்களத்தின் இந்த கபடத்தனத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள தமிழ் மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படவேண்டிய நேரம்.

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி - ஈழமுரசு

http://www.tamilkathir.com/news/4832/58//d,full_article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.