Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைகள்

Featured Replies

¯í¸Ç¡ø ÓÊ󾡸 þÅ÷¸ÙìÌ µÕ ¦Á¢ø ±Ø¾¢ô§À¡Îí¸.

ÀÄý þÕì̧Á¡ ¦¾Ã¢Â¡Ð. ÓÂüº¢¦ºö§Å¡õ.

UNICEF:- http://www.unicef.org/infobycountry/sri_la...ka_contact.html

தொடர்புபட்ட செய்திகள்.

http://www.nitharsanam.com/?art=17276

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18118

Å¢Á¡Éò¾¡ì̾Ģø ºõââø ¦¸¡øÄôÀð¼Å÷¸û.

http://www.eelavision.com/?photo=8864

http://www.eelavision.com/?photo=8856

.

  • Replies 126
  • Views 24.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுபத்திரன் நன்றி. நான் முதலே அனுப்பிவிட்டேன். யாழில் எழுத வர நேழ்கள் எழுதிவிட்டீர்கள். மிக்க நன்றி. எதேபோல் எல்லோரும் எழுதவும். நாம் யார் எனக்காட்டுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதே வேளை இச் சம்பவங்கள் தொடர்பாக வெளியுலகத்திற்கு அறிவிக்கப்பட்டவுடன், சிறிலங்கா அரசு புலிகள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமக்கு அவப் பெயரை ஏற்படுத்த புலிகள் தான் செய்ததாக கதை கட்டி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.

ஊர்காவற்துறை என்பது ஈபிடிபியோடு, கடற்படை தனது முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்கும் இடம். இங்கிருந்து வெளியேறுவதற்கு கடல், மற்றும் வண்ணைப் பாலம் மட்டுமே இருக்கின்றது. அப்படியிருக்க தாங்கள் கொலைகாரர் இல்லை என்று கதை விடும், சிங்கள அரசு அவர்களைப் பிடிப்பதற்கு எவ்வித நடவடிக்கையை எடுத்தது.

மேலும் கொல்லப்பட்டவர்களின் வீட்டில் இருந்து, 200 தூரத்தினுள் கடற்படை முகாம் ஒன்று இருக்கின்றது. துப்பாக்கிச் சத்தம் கேட்டபோது ஏன் எவ்வித இராணுவமும் வரவில்லை?

எனவே கொலைகாரர்களிடம் நீதியை பற்றிப் பேசமுடியாது. அவர்களின் வாய்களில் இருந்து வருவது எல்லாம் தம் இரத்தவெறியை புூசி மெழுகும் வார்த்தைகளே. இதை சர்வதேச உலகம் புரிந்து கொள்ளவேண்டும்.

MP saddened by UNICEF, UNHCR's silence on Children's killing

[TamilNet, May 15, 2006 02:35 GMT]

"I am deeply concerned and saddened by the silence of the premier world organizations that advocate rights of children, the United Nations Childrens Fund (UNICEF) and the UNHCR, on the escalating number of children being killed in the NorthEast in Sri Lanka by the State's security forces," said Pathmini Sithamparanathan, Tamil National Alliance (TNA) parliamentarian for Jaffna, speaking to the press Monday.

Parliamentarian Ms Padmini Sithamparanathan

Ms Sithamaparanathan said: "Thirty seven civilians have been killed in the NorthEast during the last three days. After Geneva-I more than 180 civilians have been killed by the Sri Lanka Government security forces and the collaborating paramilitaries.

"Last Friday a four-month old child and a four year old boy was murdered by the Sri Lanka Navy soldiers and paramilitary cadres in Jaffna Islets. In the aerial bombardment by the Sri Lanka AirForce in Sampoor, Muttur East on the 25-26th April eight children under 16 years were killed. Two similar aged children were killed in Batticaloa and in Jaffna recently.

"Hardly a word condemning the killing of children has come out of UNICEF's, UNHCR's offices in the last several weeks.

"On the issue of child recruitment, however, UNICEF, UNHCR and other rights organizations worldwide, have shown unusual vigor and assertiveness, in demonizing the Liberation Tigers.

"Vulnerable groups that depend on the support and voice of such world organizations, are left helpless, when these organizations remain silent when States perpetrate dastardly crimes," Mrs Sithamparanathan said.

நானும் அனுப்பிவிட்டேன்.

இந்த இணைப்பில் உள்ள வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் அனுப்புங்கள்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=2667

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே சில அமைப்புக்களுக்கு அனுப்பிவிட்டேன்

யாழ்கள உறவுகளே, உடனடியாக அனுப்புங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் கொலைவெறியாட்டம்!

பிஞ்சுக் குழந்தைகள் இருவர் உட்பட 15 அப்பாவிகள்

கண்மண் தெரியாமல் கோரமாகச் சுட்டுப்படுகொலை!!

யாழ். குடாநாட்டில் கடந்து சென்ற 16 மணி நேரத்திற்குள் இரு பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 15அப்பாவிப் பொது மக்கள் மிகக் கொடூரமாக மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமாக கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். தீபகற்பப் பகுதியி லும் வலி.கிழக்குப் பகுதியிலும் சீருடையினர் இந்தக் கோர வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர்.

தீவுப் பகுதியில் உள்ள அல்லைப்பிட்டி, புளியங்கூடல், வங்களாவடி ஆகிய இடங்களில் 13 பேரும் பத்தமேனி, ஆவரங்கால் ஆகிய இடங்களில் தலா ஒவ்வொருவரும் கொல்லப்பட்டுள்ளனர். திடீரென வந்த ஆயுததாரிகள் எந்தக் கேட்டுக்கேள்வியும் இன்றி அப்பாவிகள் மீது இந்த வெறியாட்டத்தைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அல்லைப்பிட்டியில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் நடந்தப்பட்ட வெறி யாட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 8 பேர் அந்த இடத்திலேயே பலியாகினர். அவர்களில் 6 மாதக் குழந்தை ஒன்றும் 4 வயதுக் குழந்தை ஒன்றும் அடங் கும். மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். அவர்கள் யாழ். போதனா வைத் தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர் களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார்.

இரவு 9 மணியளவில் தீடீரென அப்பகுதி யில் தோன்றிய சீருடைதரித்த ஆயுததாரிகள் முதலில் வீதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். பின்னர் குறித்த வீட்டிற் குள் புகுந்து கண்மூடித்தனமாகச் சுட்டு மனித உடல்களைச் சல்லடைகளாக்கினர்.

படுக்கையில் இருந்தவர்களையும் வானொலி கேட்டுக்கொண்டிருந்தவர்களை யும் முற்றத்தில் காற்று வாங்கிக்கொண்டிருந் தவர்களையும் பறந்துவந்த ரவைகள் துளைத் துச் சென்று சிதறடித்தன. அனைவரும் அந் தந்த இடங்களிலேயே வீழ்ந்து உயிரை விட் டனர்.

இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான பாலசாமி கேதீஸ்வரன் (வயது 28), அவரது மனைவியான கேதீஸ் வரன் அனட்ஸ்ரா (வயது 24), அவர்களது குழந்தைகளான தனுசாந்தன் (வயது 4), யதுர்ஷன் (6 மாதங்கள்) ஆகியோரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான யோசப் அன் ரனிமுத்து (வயது 64), நான்கு பிள்ளைகளின் தந்தையான கணேஷ் நவரட்ணம் (வயது 50), மூன்று பிள்ளைகளின் தந்தை யான ஏப்பிரகாம் றொபின்சன் (வயது 28), ஒரு பிள்ளையின் தந்தையான செல்லத்துரை அமுததாஸ் (வயது 28) ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சின்னத்துரை சிவனேசன் (வயது 46) வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மரணமானார். அவ ருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

நேற்றைய அழிப்பு நடவடிக்கையின் போது அல்லைப்பிட்டியில் இருந்த கடை ஒன்றும் கொலையாளிகளால் எரிக்கப்பட் டுள்ளது. முதலில் கடைக்குள் கிரனேட்டை வீசிய அவர்கள் பின்னர் தீவைத்தனர் என்று கூறப்படுகின்றது. குறித்த கடை காயமடைந்து பின்னர் உயிரிழந்தவரான சிவனேசனுக்குச் சொந்தமானது.

புளியங்கூடல், வங்களாவடி

இந்தக் பயங்கரம் நிகழந்து மூன்று மணி நேரம் கடந்த பின்னர் அடுத்த பயங்கரம் நிகழந்துள்ளது. புளியங்கூடல் சந்தியை அண் மித்த பகுதியில் இருந்த வீடு ஒன்றிற்குள் நுழைந்த சீருடையினர் அங்கிருந்த மூவரை யும் சுட்டுக் கொன்றனர். முருகேசு சண்முக லிங்கம் (வயது 72), அவரது மனைவியான சண்முகலிங்கம் பரமேஸ்வரி (வயது 65), அவர்களது கடைசி மகனான காந்தரூபன் (வயது 22) ஆகியோரே அங்கு உயிரிழந்த னர்.

சந்தியில் இருந்த தொலைபேசி நிலை யம் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்ப னவும் கொலைகாரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற அதே நேரத் தில் வேலணை, வங்களாவடி, இராசையா வீதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப் பட்டார். அதே சந்தியில் கடை வைத்திருப் பவரான இரத்தினம் செந்தூரன் (வயது24) என்பவரே உயிரிழந்தவராவார்.

கொலையாளிகளில் பலர் தமது முகங் களைத் துணியால் மூடிக்கட்டிக் கொண்டிருந் தார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. சம்ப வத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் வீடுகளில் விளக்குகளை அணைக்கு மாறு மிரட்டினர் என்றும் கூறப்படுகின்றது.

நேற்றுப் பகல் ஊர்காவற்றுறை நீதிவான் ஜெயராமன் ரொக்ஸி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டன. சட்டவைத்திய பரிசோதனைக்காக அவை வைத்தியசாலைப் பிரேத அறையில் வைக் கப்பட்டுள்ளன.

அச்சுவேலி, ஆவரங்கால்

வலி.கிழக்குப் பகுதியில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் இருவரைச் சுட்டுக்கொன் றனர்.

அச்சுவேலி, பத்தைமேனியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளி யான பசுபலிங்கம் காண்டீபன் (வயது 25) என்பவர் அவரது வீட்டிற்குச் சமீபமாகச் சுட் டுக்கொல்லப்பட்டார். தலையின் பின்புறம் சுடப்பட்ட இவர் அந்த இடத்திலேயே உயிரி ழந்தார்.

இந்தச் சம்பவத்தின் பின் அரைமணி நேரத்தில் பருத்தித்துறை வீதியில் ஆவரங் கால் என்ற இடத்தில் மற்றொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே இவரையும் சுட்டுக்கொன்ற னர். கடலை வியாபாரம் செய்பவரான இரா மச்சந்திரன் சுரேந்திரன் (வயது 30) என் பவரே கொல்லப்பட்டார். கால் ஊனமடைந் தவரான இவர் மதகு ஒன்றில் அமர்ந்திருந்த சமயம் கொலையாளிகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

மிதிவெடியில் ஒரு காலை இழந்தவரான இவர் செயற்கைக்கால் பொருத்தியுள்ளார்.

இந்த இரு மரணங்கள் குறித்து மல்லாகம் நீதிவான் திருமதி ச.இளங்கோவன் மரண விசாரணைகளை நடத்தினார். சம்பவ இடங் களைப் பார்வையிட்ட அவர் பிரேதபரி சோதனையின் பின் சடலங்களை உறவினர் களிடம் கையளிக்கும்படி உத்தரவிட்டார்.

எம்.பிக்கள் ஆறுதல்

சம்பவத்தைக் கேள்விப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப் பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு வந்து சடலங் களைப் பார்வையிட்டனர். உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

இத்தகைய கொலைகளைத் தாம் வன்மை யாகக் கண்டிக்கிறார்கள் என்றும் தெரிவித்த னர்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

பலன் இருக்குதோ என்று பாராமல் எல்லோரும் அனுப்புங்கள். பி.பிஸி, சி.என்.என், உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்புங்கள்.

அனுப்பியவர்களுக்கு நன்றி.

சிறுதுளி பெருவெள்ளம்.

ஆனால், இந்த அமைப்புக்களுக்கும,; வெளிநாடுகளுக்கும், கண்துடைப்பு குழுவுக்கும் ஆயுதங்களுடன் உள்ள படையினரின் உயிரை விட நிராயுதபாணிகளான பொதுமக்கள், அரசியல்போராளிகளின் உயிர் ஒன்றும் பெரிதில்லை.

இராணுவத்தின் குண்டுவீச்சின் போது பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்தபோதும,; இறந்தபோதும் வாயைத்திறக்காதவை. படையினர்க்கு ஆபத்தெண்டவுடன் பறந்துகட்டிக்கொண்டிக்கொண்ட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இனம் தெரியாதோரினால் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் உந்துளியில் வந்த இருவர் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு அருகில் பேருந்து நிலையத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.

கொல்லப்பட்டவர் கனகசசை வீதி காங்கேசன்துறை எனும் முகவரியைக் கொண்ட 35 அகவையுடைய செல்வதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் தற்பொழுது அளவெட்டியில் வசித்து வருபவர் என்பது இங்கே குறிப்பிடக்கூடியது.

இவரது சடலத்தை யாழ் மாவட்ட நீதியாளர் சிறீநிதி நந்தசேகரன் பார்வையிட்டதோடு மரண விசாரணைக்காக சடலம் யாழ் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தவறும் தகவல் சுதந்திரம்

""சர்வதேச சமூகத்திற்கும், தென்னிலங்கைக்கும் உண்மையை எடுத்துச் சொல்லுங்கள். கட்டுக்கதைகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.''

இவ்வாறு தென்பகுதியைச் சேர்ந்த ஐந்து ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன்.

இலங்கைத் தீவின் தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கும் இனப்பிணக்குக்கு அமைதி வழியில் சமாதான முறையில் தீர்வு காண்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் ஒரு முக்கிய அம்சத்தை தொட்டுக்காட்டி யிருக்கின்றார் புலிகளின் அரசியல் பொறுப்பாளர்.

கடந்த வருட இறுதியில் லண்டனில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் அந்தப் பேச்சின் நடுவே சிலேடையாக ""சிங்களவர்களுக்கு மேல்மாடி இல்லை'' என்று ஒரு பேச்சுக்குக் கூறிவைத்தார். தென்னிலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் மதியுரைஞர் பாலசிங்கம் கூறியமை போன்று அரசியல் தெளிவின்மையும், யதார்த்தத்தை உணராத போக்கும், உண்மை அறிவற்ற தன்மையும் ஆழ்ந்து வேரூன்றுவதற்குக் காரணமாக அமைந்தவை இந்த ஊடகங்கள்தாம் என்பதை இன்னும் கூட தென்னிலங்கை உணர்ந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வியப்புக் குரியது.

தலைவர் பிரபாகரன் உயிரிழந்தார் என்று கண்மூடித்தனமாக செய்திகளை அவ்வப்போது வெளியிடுவதில் தொடங்கி, இப்போது இருப்பவர் பிரபாகரனின் "டூப்' என்று பகிரங்கமாக அறிவிப்பது வரை தலைவர் பிரபாகரனுக்குக் குறைந்தது ஐந்து தடவைகளாவது மறுவாழ்க்கை கொடுத்த தென்னிலங்கை ஊடகங்களின் குறிப்பாக சிங்கள ஊடகங்களின் பொய்ப் புரட்டும், பித்தலாட்டமும் அளவு கணக்கற்றவை.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் பகுதியில் பெரிய குண்டுச் சத்தம் ஒன்று கேட்டதாம் என்ற தகவலை மாத்திரம் வைத்துக் கொண்டு அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு "செத்த வீடு' நடத்தி விடுகின்ற கைங்கரியம் சிங்கள ஊடகங்களினால் மட்டும்தான் முடியும்.

தம்மையே முழுதும் நம்பியிருக்கும் இந்தப் பெரும்பான்மை இன மக்களை தமது பொறுப்பற்ற செயற்பாடுகளினால் முழு முட்டாள்களாக்கி, தவறாக வழிநடத்தும் இந்த ஊடகங்கள் தம்மைத் திருத்திக் கொள்ளாதவரை பெரும்பான்மையினம் திருந்துவதற்கோ, இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கு நீதி, நியாயமான தீர்வு ஒன்று அமைதி வழியில் சமாதான முறையில் கிட்டுவதற்கோ வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

கோமரசன்கடவலவில் வயல்வேலைக்குச் சென்ற ஐந்து சிங்களவர்கள் வெட்டிக் கொல்லப்பட்டால் அவர்களைக் கொன்றவர்கள் புலிகளே என்று ஒரு நிமிடத்தில் தீர்க்க மான முடிவுக்கு வந்து விடுகின்ற இந்த ஊடகங்களினால், கடற்படையினர் மற்றும் ஈ.பி.டி.பியினரின் உச்சப் பிரசன்னப் பிரதேசமான அல்லைப்பிட்டியில் தமிழ்ப்பொதுமக்கள் குரூரமாகப் படுகொலை செய்யப்படும்போது மட்டும் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது தெரியவே வருவதில்லை. சில சமயங்களில் யாரேனும் ஓர் அதிகாரியை மேற்கோள் காட்டி இக்கொலைகளையும் கூட புலிகள் மீது சுமத்தித் தம் கைவரிசையைக் காட்டி விடுவதன் மூலம் உண்மை நிலைவரத்தைத் தென்னி லங்கைக்கும், சர்வதேச சமூகத்துக்கும் மூடி மறைத்துக் குழிதோண்டிப் புதைத்து சமாதான சாதனை புரிந்து விடுகின்றது இந்த ஊடகக்கலாசாரம்.

"கருணா இல்லாததால் பிரபாகரன் தொலைந்தார். கருணா மிகப் பெரிய சக்தி. அவர் பிரிந்து சென்று விட்டதால் பிரபாகரனின் ஆட்டம் காலி'' என்ற சாரப்பட சிங்கள மக்க ளுக்கு கயிறு கொடுத்து நம்ப வைப்பது போன்ற பல்வேறு திரிப்புக்களை தென்னிலங்கை ஊடகங்கள் கனகச்சிதமாக நிகழ்த்தி வருகின்றன.

இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சிறுபான்மை தரப்பினரான தமிழர்களின் பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் கொடூரங்கள் அடக்கு முறைகள் நெருக்குவாரங்கள், தமிழர்களின் உண்மையான போராட்ட வலிமை, களத்தில் அவர்கள் புரியும் சாத னைகள், அந்த சாதனைகளுக்கு அடிநாதமாக விளங்கும் அவர்களின் இலட்சியப் பற்று, தமது இலக்கில் அவர்களுக்கு உள்ள திடசங்கற்பம் போன்றவை பற்றிய உண்மை நிலைவரங்களை மூடி மறைத்து, இது விடயத்தில் தென்னிலங்கையை ஒரு மாயையான சிந்தனைக்குள் ஆழ்த்தி வைத்திருக்கும் இந்த ஊடகக் கலாசாரமே இனப்பிணக்கு என்ற இந்தப்புண் பெரும் சீழ் பிடித்த விவகாரமாக இன்று உருவெடுக்க முக்கிய காரணமாகும்.

ஒரு சிறிய கரந்தடிக் குழுவாக முகிழ்ந்த தமிழர்களின் விடுதலைப் போராட்ட முனைப்பு, இன்று ஒரு தேசியத்தின் பெரும் விடுதலைப் போராட்ட சக்தியாக பரிணமித்து விஸ்வரூபம் எடுத்திருக் கின்றது என்றால், அதை ஊக்கு வித்து வலுவடையச் செய்வதற்குப் பொருத்தமான களச்சூழ்நிலையை ஏற்படுத்திய சிறப்பும் இந்தத் தென்னிலங்கை ஊடகங்களுக்கும்உரியது.

தேசியப் பிரச்சினைகளில் "இடித்துரைத்து நியாயம் கூறும் மந்திரியாக' செயற்பட வேண்டிய ஊடகங்கள் இங்கு "வீடு எரிக்கும் இராசாவுக்கு நெருப்பு எடுத்துக் கொடுக்கும் அமைச்சர்களாக' மாறிச் செயற்பட்டதன் விளைவே இன்றைய அவல நிலையாகும்.

இனியாவது திருந்துமா தென்னிலங்கை ஊடகங்கள்

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் மீதான இலங்கை இராணுவத்தின் தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு தலையிட வேண்டும்-வைகோவின் கூட்டத்தில் தீர்மானம்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த உடனடியாக இந்தியா தலையிட வேண்டுமென வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அதிலேயே தமிழ் மக்கள் மீதான இராணுவத் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் படுகொலைகள்,தாக்குதல்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்ட இலங்கை இராணுவத்தின் இவ்வாறான செயல்களுக்கு கடுமையான கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

-தினக்குரல்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் படையினரால்; இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

- பண்டார வன்னியன் - Snkathi கல்வியங்காட்டுச்சந்தியிலுள

யாழில் படையினரால் இரு இளைஞர்கள் படுகொலை

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இளைஞர் இருவரை சிறிலங்கா படையினர் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர்.

திருநெல்வேலி பழச்சந்தி முருகன் வீதியில் இளைஞர்கள் இருவர் உந்துருளியில் பிற்பகல் 1 மணியளவில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்த இளைஞர்கள் மீது சிறிலங்காப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படையினர் ஒரு அரணில் மறித்தபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றதாகவும் அதனால் அடுத்த அரணில் அவர்களை மறித்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்

படுகொலையானவர்களில் ஒருவர் அரியாலை நடுத்தெருவைச் சேர்ந்த மகேந்திரன் பிரதீபன் (வயது 22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து கைத்துப்பாக்கியை எடுத்ததாக படையினர் தெரிவித்துள்ளனர்.

புதினம்

யாழில் மூன்று வர்த்தகர்கள் சுட்டுக்கொலை- ஒருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மூன்று வர்த்தகர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

யாழ். அச்சுவேலியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் பலசரக்ககுக் கடை வர்த்தகரான சின்னதுரை புவிராஜ்(வயது 40) சுட்டுக்கொல்லப்பட்டார்.

அச்சுவேலி நகரில் உள்ள சியாம் ஸ்டோர்ஸ் உரிமையாளரன சின்னத்துரை புவிராஜ், வலிகாமம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட பிரதேசத்தில் தனது வீட்டில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது உறவினரான சதாசிவம் ரவிக்குமார்(வயது 27) படுகாயமடைந்துள்ளார். அவர் அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி, புத்தூர், நீர்வேலி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இத்தகைய கொலைச் சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முன்னதாக அரியாலையில் நேற்று இரவு 7.45 மணியளவில் பொன்னம்பலம் வீதியில் வீடியோ வாடகைக் கடை நடத்தி வந்த புவனேந்திரன் போல்டெர் மயூரன்(வயது 27) சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் குழுவினரால் அவர் படுகொலை செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாவீரர் நாள் நிகழ்வுச் செயற்பாடுகளை அப்பகுதியில் முன்னெடுத்து செயற்பட்டவர் புவனேந்திரன் என்றும் தெரியவந்துள்ளது.

அதேபோல் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நீர்வேலியில் எல். யசோதரன்(வயது 35) என்ற வர்த்தகர் சுட்டுக்கொல்லப்பட்டர்.

யாழ்.- பருத்தித்துறை வீதியில் நீர்வேலி பகுதியில் தனது கடை முன்பாக நேற்று மாலை 5 மணிக்கு யசோதரன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த யசோதரன் யாழ்ப்பாண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிந்தார்.

நீர்வேலியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்றாவது வர்த்தகர் யசோதரன்.

புதினம்

அக்கரைப்பற்றில் தமிழ் பொதுமகன் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு அக்கரைப்பற்றி நாராயணபிள்ளை கனகசூரியன்(வயது 29) என்ற வர்த்தகர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

அக்கரைப்பற்று ஆயிசா பலிகா மகா வித்தியாசலம் அருகே நேற்று இரவு 10.30 மணியளவில் நாராயணபிள்ளை கனகசூரியன் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் ஒரு குழந்தையின் தந்தையாவார். அக்கரைப்பற்று கோலாவில் பகுதியில் அவர் வசித்து வந்தார்.

சுட்டுக்கொல்லப்பட்ட நாராயணபிள்ளையின் உடல் அக்கரைப்பற்று மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதினம்

யாழில் த.தே.கூ.. வேட்பாளர் சுட்டுக்கொலை

யாழ். அச்சுவேலியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி பயித்தோலைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் மாதர் செல்லத்துரை (வயது 75) என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது வீட்டுக்கு உந்துருளியில் சென்ற சிறிலங்கா இராணுவத்தினரின் துணை இராணுவக் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இவரை வீதிக்கு அழைத்துச் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி சபை வேட்பாளர் சுட்டுக்கொல்லபட்ட போது அப்பகுதிக்கு சிறிலங்கா அரசினால் வழங்கப்படும் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இச்செயலானது இராணுவத்தினரது திட்டமிட்ட நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

புதினம்

கரூர் ஜவுளி வியாபாரி இலங்கையில் சுட்டுக்கொலை

சின்னாளபட்டிஇ மே.31-

ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்ற கரூர் வியாபாரி ஒருவர் அகரூர் ஜவுளி வியாபாரி இலங்கையில் சுட்டுக்கொலை

சின்னாளபட்டி, மே.31-

ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்ற கரூர் வியாபாரி ஒருவர் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜவுளி வியாபாரத்துக்கு

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்று வருகிறார்கள்.

தற்போது இலங்கையில் விடுதலைப்புலிகள், ராணுவம், கருணா கோஷ்டியினரிடையே சண்டை மூண்டுள்ளதால் சின்னாளபட்டியில் இருந்து இலங்கை சென்ற வியாபாரிகள் திரும்பி வந்து கொண்டு உள்ள நிலையில் சுமார் 300 பேரின் கதி என்னவென்று தெரிய வில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

சுட்டுக்கொலை

இதனிடையே சின்னாளபட்டி அஞ்சுகம் காலனியில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் மகளை திருமணம் செய்த கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த சுமோ விஜயகுமார் என்பவர் தனது மாமனாருடன் இலங்கைக்கு ஜவுளி வியாபாரத்திற்கு சென்றிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

அவரது உடலை கரூருக்கு கொண்டு வந்து மருமகனை இழந்த நாகராஜ் கரூரில் இறுதி சடங்குகள் நடத்தினார். ஈமசடங்கை முடித்து விட்டு நேற்று சின்னாளபட்டி வந்தார்.

உருக்கமான பேட்டி

நான் கடந்த 3 ஆண்டுகளாக இலங்கைக்கு ஜவுளி வியாபாரத்திற்கு சென்று வருகிறேன். எனது மகள் மல்லிகாவை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கரூர் சுமோ விஜயகுமாருக்கு திருமணம் செய்து வைத்தேன். மருமகன் டிரைவராக இருந்தார். சரியாக வருமானம் கிடைக்காததால் இவரையும் ஜவுளி வியாபாரம் செய்ய இலங்கைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்து, கடந்த 11-ம் தேதி காலை விமானம் மூலம் மட்டகளப்பு போய்

சேர்ந்தோம்.அங்கு என்.எஸ்.பி. என்ற லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினோம். அந்த லாட்ஜில் சின்னாளபட்டியை சேர்ந்த மேலும் 40 ஜவுளி வியாபாரிகள் தங்கி இருந்தனர். ஒவ்வொருவரும் இந்திய ரூபாயில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் வியாபாரத்திற்காக கொண்டு சென்றிருந்தோம்.

தேடி அலைந்தோம்

இங்கிருந்து தான் தமிழர் வாழும் கிராமங்களுக்கு தனித்தனியாக வியாபாரம் செய்ய செல்வோம். அதே போல் தான் கடந்த 17-ம் தேதி எனது மருமகன் விஜயகுமார் எனது செல்போனை எடுத்து கொண்டு வியாபாரத்திற்கு சென்றார். நாங்கள் வியாபாரம் செய்யும் பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதால் வியாபாரத்தை முடித்து விட்டு மாலை 4 மணிக்கெல்லாம் லாட்ஜிக்கு வந்து விடுவோம்.

ஆனால் எனது மருமகன் மாலை 6 மணி ஆகியும் வராததால் மற்றவர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அடுத்த நாள் 18-ந் தேதி முழுவதும் நானும் சின்னாளபட்டியை சேர்ந்த செந்தில் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தேடினோம். ஆனால் கிடைக்க வில்லை. இதனால் பயந்து போன நாங்கள் வாழைசோனை காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டு வந்து

விட்டோம்.தொடர்ந்து 19-ம் தேதியும் 3 பேரும் சேர்ந்து மீண்டும் வாழைசேனை பகுதிக்கு சென்று விசாரித்தோம். அப்போது பஸ் நிலையத்தில் இருந்த டீக்கடைகாரர் எனது மருமகன் வந்ததையும், ஆனால் மீண்டும் பஸ் ஏற வரவில்லை என்றும் கூறினார்கள். பின்பு அங்குள்ள பகுதிகளில் தேடினோம். அப்போது பல இடங்களில் குண்டு வெடித்ததால் பொதுமக்கள் நிலைமை மோசமாக இருக்கிறது. ஓடி விடுங்கள் என்று கூறி எங்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.

மீண்டும் 20-ந் தேதியும் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தோம்.

எச்சரிக்கை

வாழைசோனை பகுதியில் பொதுமக்களிடம் கேட்ட போது 4 பேர் கொண்ட கருணா குழுவினர் உங்களது மருமகனை பிடித்து சென்றனர் என்று கூறினார்கள். உடனடியாக மட்டகளப்பில் உள்ள கருணா குழுவின் அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு இருந்த சத்திரியர் என்ற ஒருவர் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் எனவும், கரடிநாத் பகுதியில் உள்ள இ.பி.டி.பி. அமைப்பிடம் கேட்குமாறு கூறினார்கள். அங்கு சென்று கேட்டோம். சரியான தகவல் இல்லை.

தொடர்ந்து விடுதலைப்புலிகள் அலுவலகத்திற்கு சென்று கேட்டோம். அது போல் நாங்கள் செய்ய மாட்டோம் என கூறி, அவர்களது புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து தகவல் தருவதாக கூறினார்கள்.

இதனிடையே பொதுமக்கள் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை குறிவைத்து தாக்குதல் நடக்கிறது. ஓடி விடுங்கள் என எச்சரித்து அனுப்பினர்.

பிணம் புதைப்பு

அப்போது வாழைசேனை போலீசில் இருந்து ஒரு உடல் கிடைத்துள்ளதாகவும், வந்து அடையாளம் காட்டும்படியும் கூறினார்கள். உடனடியாக வாழைசேனை போலீஸ் நிலையத்துக்கு சென்றோம். அங்கு இடுப்பில் அணியும் அரைஞாண் கயிற்றையும் காண்பித்தார்கள். அதில் எங்களது பெட்டி சாவி இருந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த துண்டு எனது மருமகன் பயன்படுத்தியது என்பதை அடையாளம் காட்டினோம். உடனே ஒரு கையெழுத்து போட சொன்னார்கள். உடலை பார்க்காமல் கையெழுத்து போட மாட்டேன் என்றேன்.

உடல் ஆஸ்பத்திரியில் இருப்பதாக கூறினார்கள். நாங்கள் பார்க்க வேண்டும் என கூறி 25 பேர் சேர்ந்து தனியாக வேன் பிடித்தோம். எங்களுக்கு முன்பு ஒரு ராணுவ வண்டியும், ஒரு உயரதிகாரி வண்டியும் சென்றது. ஒரு காட்டுக்குள் இரவு 8 மணிக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு முழங்கால் அளவு ஆழத்தில் எனது மருமகனை புதைத்து வைத்து மேலே தென்னை மட்டையை போட்டு இருந்தார்கள். உடலை தோண்டி எடுத்து காண்பித்தார்கள்.

துப்பாக்கி குண்டு

தொண்டையில் துப்பாக்கியால் சுடப்பட்டு, தலை வழியாக குண்டு வெளியேறி இருந்தது. மேலும் உடல் முழுவதும் சித்ரவதை செய்த காயம் இருந்தது. ஒட்டு துணி இல்லாமல் புதைக்கப்பட்டு இருந்தது.

உடனடியாக நாங்கள் ஆழமாக குழி தோண்டி புதைக்க முயன்றோம். அதற்குள் ஆங்காங்கே குண்டு வெடித்ததால் அதிகாரிகள் எங்களை அழைத்து கொண்டு மட்டகளப்பு புறப்பட்டனர். 200 அடி செல்வதற்குள் எங்களது வேன், ராணுவ வண்டி, உயர் அதிகாரி வண்டிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். எங்கள் வேனை சுட்டவர்கள் மீது ராணுவ ஹெலிகாப்டரில் வந்து குண்டு போட்டனர். ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி யாருடைய உடலிலாவது குண்டு பாய்ந்துள்ளதா என சோதனை செய்தனர்.

ஆனால் நாங்கள் வந்த வேன் மீது குண்டு பாயவில்லை. ராணுவ உயர் அதிகாரி வந்த வேன் மீது 8 இடங்களில் குண்டு பாய்ந்து இருந்தது. அப்போது வேப்பமரத்தில் குண்டு படாமல் இருந்திருந்தால் உங்களது வேன் குண்டடிபட்டு நொறுங்கி இருக்கும். தப்பித்துக் கொண்டீர்கள் என ராணுவத்தினர் கூறினார்கள்.

தமிழகம் திரும்பினோம்

இதனை தொடர்ந்து தூதரகத்துக்கு புகார் செய்து இறப்பு சான்றிதழ் பெற அழைத்தோம். ஆனால் நாங்கள் 3 பேர் பல இடங்களில் எனது மருமகனை தேடி அலைந்ததால், எங்களை எனது மருமகனை கொலை செய்த குழுவினர் அடையாளம் பார்த்து வைத்துள்ளதாகவும், எனவே இந்தியா சென்று விடுங்கள் என கூறினார்கள். பின்பு மற்ற நண்பர்கள் மூலம் இறப்பு சான்றிதழ் பெற்று தமிழகம் திரும்பினோம்.

இவ்வாறு நாகராஜ் கூறினார்.

--

சுட்டுக்கொல்லப்பட்ட சுமோ விஜயகுமாருக்கு பிறந்து 5 மாதம் ஆன பிரியதர்சனி என்ற குழந்தை உள்ளது.

ங்கு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜவுளி வியாபாரத்துக்கு

திண்டுக்கல் மாவட்டம்இ சின்னாளபட்டியில் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் ஜவுளி வியாபாரத்திற்காக இலங்கை சென்று வருகிறார்கள்.

தற்போது இலங்கையில் விடுதலைப்புலிகள்இ ராணுவம்இ கருணா கோஷ்டியினரிடையே சண்டை மூண்டுள்ளதால் சின்னாளபட்டியில் இருந்து இலங்கை சென்ற வியாபாரிகள் திரும்பி வந்து கொண்டு உள்ள நிலையில் சுமார் 300 பேரின் கதி என்னவென்று தெரிய வில்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

சுட்டுக்கொலை

இதனிடையே சின்னாளபட்டி அஞ்சுகம் காலனியில் வசிக்கும் நாகராஜ் என்பவரின் மகளை திருமணம் செய்த கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த சுமோ விஜயகுமார் என்பவர் தனது மாமனாருடன் இலங்கைக்கு ஜவுளி வியாபாரத்திற்கு சென்றிருந்த போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

அவரது உடலை கரூருக்கு கொண்டு வந்து மருமகனை இழந்த நாகராஜ் கரூரில் இறுதி சடங்குகள் நடத்தினார். ஈமசடங்கை முடித்து விட்டு நேற்று சின்னாளபட்டி வந்தார்.

உருக்கமான பேட்டி

நான் கடந்த 3 ஆண்டுகளாக இலங்கைக்கு ஜவுளி வியாபாரத்திற்கு சென்று வருகிறேன். எனது மகள் மல்லிகாவை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கரூர் சுமோ விஜயகுமாருக்கு திருமணம் செய்து வைத்தேன். மருமகன் டிரைவராக இருந்தார். சரியாக வருமானம் கிடைக்காததால் இவரையும் ஜவுளி வியாபாரம் செய்ய இலங்கைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்துஇ கடந்த 11-ம் தேதி காலை விமானம் மூலம் மட்டகளப்பு போய்

சேர்ந்தோம்.அங்கு என்.எஸ்.பி. என்ற லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினோம். அந்த லாட்ஜில் சின்னாளபட்டியை சேர்ந்த மேலும் 40 ஜவுளி வியாபாரிகள் தங்கி இருந்தனர். ஒவ்வொருவரும் இந்திய ரூபாயில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் வியாபாரத்திற்காக கொண்டு சென்றிருந்தோம்.

தேடி அலைந்தோம்

இங்கிருந்து தான் தமிழர் வாழும் கிராமங்களுக்கு தனித்தனியாக வியாபாரம் செய்ய செல்வோம். அதே போல் தான் கடந்த 17-ம் தேதி எனது மருமகன் விஜயகுமார் எனது செல்போனை எடுத்து கொண்டு வியாபாரத்திற்கு சென்றார். நாங்கள் வியாபாரம் செய்யும் பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதால் வியாபாரத்தை முடித்து விட்டு மாலை 4 மணிக்கெல்லாம் லாட்ஜிக்கு வந்து விடுவோம்.

ஆனால் எனது மருமகன் மாலை 6 மணி ஆகியும் வராததால் மற்றவர்களின் செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால் செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அடுத்த நாள் 18-ந் தேதி முழுவதும் நானும் சின்னாளபட்டியை சேர்ந்த செந்தில் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தேடினோம். ஆனால் கிடைக்க வில்லை. இதனால் பயந்து போன நாங்கள் வாழைசோனை காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டு வந்து

விட்டோம்.தொடர்ந்து 19-ம் தேதியும் 3 பேரும் சேர்ந்து மீண்டும் வாழைசேனை பகுதிக்கு சென்று விசாரித்தோம். அப்போது பஸ் நிலையத்தில் இருந்த டீக்கடைகாரர் எனது மருமகன் வந்ததையும்இ ஆனால் மீண்டும் பஸ் ஏற வரவில்லை என்றும் கூறினார்கள். பின்பு அங்குள்ள பகுதிகளில் தேடினோம். அப்போது பல இடங்களில் குண்டு வெடித்ததால் பொதுமக்கள் நிலைமை மோசமாக இருக்கிறது. ஓடி விடுங்கள் என்று கூறி எங்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்.

மீண்டும் 20-ந் தேதியும் பல இடங்களில் தேடிக் கொண்டிருந்தோம்.

எச்சரிக்கை

வாழைசோனை பகுதியில் பொதுமக்களிடம் கேட்ட போது 4 பேர் கொண்ட கருணா குழுவினர் உங்களது மருமகனை பிடித்து சென்றனர் என்று கூறினார்கள். உடனடியாக மட்டகளப்பில் உள்ள கருணா குழுவின் அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு இருந்த சத்திரியர் என்ற ஒருவர் நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் எனவும்இ கரடிநாத் பகுதியில் உள்ள இ.பி.டி.பி. அமைப்பிடம் கேட்குமாறு கூறினார்கள். அங்கு சென்று கேட்டோம். சரியான தகவல் இல்லை.

தொடர்ந்து விடுதலைப்புலிகள் அலுவலகத்திற்கு சென்று கேட்டோம். அது போல் நாங்கள் செய்ய மாட்டோம் என கூறிஇ அவர்களது புலனாய்வுத்துறைக்கு தெரிவித்து தகவல் தருவதாக கூறினார்கள்.

இதனிடையே பொதுமக்கள் இந்தியர்களை குறிப்பாக தமிழர்களை குறிவைத்து தாக்குதல் நடக்கிறது. ஓடி விடுங்கள் என எச்சரித்து அனுப்பினர்.

பிணம் புதைப்பு

அப்போது வாழைசேனை போலீசில் இருந்து ஒரு உடல் கிடைத்துள்ளதாகவும்இ வந்து அடையாளம் காட்டும்படியும் கூறினார்கள். உடனடியாக வாழைசேனை போலீஸ் நிலையத்துக்கு சென்றோம். அங்கு இடுப்பில் அணியும் அரைஞாண் கயிற்றையும் காண்பித்தார்கள். அதில் எங்களது பெட்டி சாவி இருந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த துண்டு எனது மருமகன் பயன்படுத்தியது என்பதை அடையாளம் காட்டினோம். உடனே ஒரு கையெழுத்து போட சொன்னார்கள். உடலை பார்க்காமல் கையெழுத்து போட மாட்டேன் என்றேன்.

உடல் ஆஸ்பத்திரியில் இருப்பதாக கூறினார்கள். நாங்கள் பார்க்க வேண்டும் என கூறி 25 பேர் சேர்ந்து தனியாக வேன் பிடித்தோம். எங்களுக்கு முன்பு ஒரு ராணுவ வண்டியும்இ ஒரு உயரதிகாரி வண்டியும் சென்றது. ஒரு காட்டுக்குள் இரவு 8 மணிக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு முழங்கால் அளவு ஆழத்தில் எனது மருமகனை புதைத்து வைத்து மேலே தென்னை மட்டையை போட்டு இருந்தார்கள். உடலை தோண்டி எடுத்து காண்பித்தார்கள்.

துப்பாக்கி குண்டு

தொண்டையில் துப்பாக்கியால் சுடப்பட்டுஇ தலை வழியாக குண்டு வெளியேறி இருந்தது. மேலும் உடல் முழுவதும் சித்ரவதை செய்த காயம் இருந்தது. ஒட்டு துணி இல்லாமல் புதைக்கப்பட்டு இருந்தது.

உடனடியாக நாங்கள் ஆழமாக குழி தோண்டி புதைக்க முயன்றோம். அதற்குள் ஆங்காங்கே குண்டு வெடித்ததால் அதிகாரிகள் எங்களை அழைத்து கொண்டு மட்டகளப்பு புறப்பட்டனர். 200 அடி செல்வதற்குள் எங்களது வேன்இ ராணுவ வண்டிஇ உயர் அதிகாரி வண்டிகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். எங்கள் வேனை சுட்டவர்கள் மீது ராணுவ ஹெலிகாப்டரில் வந்து குண்டு போட்டனர். ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி யாருடைய உடலிலாவது குண்டு பாய்ந்துள்ளதா என சோதனை செய்தனர்.

ஆனால் நாங்கள் வந்த வேன் மீது குண்டு பாயவில்லை. ராணுவ உயர் அதிகாரி வந்த வேன் மீது 8 இடங்களில் குண்டு பாய்ந்து இருந்தது. அப்போது வேப்பமரத்தில் குண்டு படாமல் இருந்திருந்தால் உங்களது வேன் குண்டடிபட்டு நொறுங்கி இருக்கும். தப்பித்துக் கொண்டீர்கள் என ராணுவத்தினர் கூறினார்கள்.

தமிழகம் திரும்பினோம்

இதனை தொடர்ந்து தூதரகத்துக்கு புகார் செய்து இறப்பு சான்றிதழ் பெற அழைத்தோம். ஆனால் நாங்கள் 3 பேர் பல இடங்களில் எனது மருமகனை தேடி அலைந்ததால்இ எங்களை எனது மருமகனை கொலை செய்த குழுவினர் அடையாளம் பார்த்து வைத்துள்ளதாகவும்இ எனவே இந்தியா சென்று விடுங்கள் என கூறினார்கள். பின்பு மற்ற நண்பர்கள் மூலம் இறப்பு சான்றிதழ் பெற்று தமிழகம் திரும்பினோம்.

இவ்வாறு நாகராஜ் கூறினார்.

--

சுட்டுக்கொல்லப்பட்ட சுமோ விஜயகுமாருக்கு பிறந்து 5 மாதம் ஆன பிரியதர்சனி என்ற குழந்தை உள்ளது.

¯ó¾ Á¡¾¢Ã¢Â¡É ƒ×Ç¢ Ţ¡À¡Ã¢¸Ç¢¼õ ŢƢôÀ¡¸

þÕìÌÁ¡Ú żìÌ ¸¢ÆìÌ ¾Á¢ú Áì¸ÙìÌ Å¢Îì¸ôÀ𼠫ȢŢò¾ø ´ýÚ ÓýÒ þ½Âò¾Çõ ´ýÈ¢ø ÀÊò¾Ð »¡À¸õ ÅÕÌÐ...

ƒ×Ç¢ Ţ¡À¡Ã¢¸û ±ýÈ §À¡÷¨Å¢ø

þó¾¢Â ÒÄÉ¡ö×òШÈ¢É÷ ±ýÈ ¾¨ÄôÀ¢ø...

  • கருத்துக்கள உறவுகள்

முருகா ஒருபேப்பரிலும், பரபரப்பிலும் இவர்களினைப்பற்றிய செய்திகள் வந்தது

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் படையினர் வெறியாட்டம் - ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வர் பலி

http://sankathi.com/content/view/3366/26/

  • கருத்துக்கள உறவுகள்

வங்காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிப் படுகொலை.

மன்னார் வங்காலை தோம்ஸ்புர்யில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சிறிலங்காப் படையினரால் கோரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இன்று அதிகாலை இந்த சம்பவம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி இருபிள்ளைகள் உட்பட்ட நால்வர் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளனர்

-பதிவு

மன்னார் மாவட்டம் வங்காலை தோமாஸ்புரியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வரை சிறிலங்காப் படையினர் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வங்காலையின் தோமாஸ்புரியின் எல்லைப்பகுதி வீடு வசித்து வந்த மூர்த்தி மார்ட்டின் (வயது 35), அவரது மனைவி மேரி மெடலின் என்ற சித்ரா (வயது 27), மகன் ஆன் நில்க்சன் (வயது 07), மகள் ஆன் லூக்சியா (வயது 09) ஆகியோரை நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்.

கொல்லப்பட்ட மார்ட்டினின் மனைவியான மேரியின் சகோதரி இன்று காலை 7 மணியளவில் மார்ட்டின் வீட்டில் இருந்து ஒருவரையும் காணவில்லை என்று பார்ப்பதற்காகச் சென்றுள்ளார்.

அங்கு எதுவித நடமாட்டமும் இல்லாத நிலையில் வீட்டினை உறவினர்களின் துணையுடன் உடைத்து உள்நுழைந்த போது வீட்டினுள்ளே சித்திரா நிலத்தில் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

வீட்டின் உள்ளே மார்ட்டினும் அவரது பிள்ளைகளும் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர்.

]09_08_06_03_vankalai_2.jpg

இவர்கள் பாரிய சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டே தூக்கில் தொங்க விடப்பட்டதாக சம்பவ இடத்தைப் நேரடியாகப் பார்வையிட்ட புதினம் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மார்ட்டின் தச்சுத் தொழிலாளி என்றும், அவர் தொழிலுக்குப் பயன்படுத்தும் உளி போன்ற கருவிகளாலேயே அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மெக்ரனின் சித்திரா, சிறிய கத்தி ஒன்றின் மூலமே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கும் அவர், அப்பெண் படையினரால் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து அப்பகுதியில் கிராம மக்கள் திரண்டுள்ளனர். மக்கள் கொதிப்படைந்த நிலையில் காணப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் கலகம் அடக்கும் சிறிலங்கா காவல்துறையினரும், சிறிலங்காப் படையினரும் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சந்திப்பகுதியில் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ரயர் எரித்து எதிர்ப்பினைத் தெரிவிக்க முற்பட்ட போது படையினருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

சுகந்தபுரி, தோமாஸ்புரி, பஸ்புரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து அயல் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

வெளிக்கிராமங்களில் இருந்து உட்செல்லும் மக்களையும், ஊடகவியலாளர்களையும் உட்செல்ல படையினர் அனுமதிக்கவில்லை என்றும் கடும் பிரயத்தனத்தில் மத்தியிலேயே ஊடகவியலாளர்கள் உள்நுழைந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

இதனிடையே கொலை நடைபெற்ற பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது சிறிலங்காப் படையினர் சீருடையில் அணியும் இராணுவ அடையாளச் சின்னம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் இராணுவ சப்பாத்து அடையாளங்களும் பெருமளவில் காணப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தினை மன்னார் மாவட்டத்துக்கான சிறிலங்காவின் மேலதிக நீதிபதி பிரபாகரன் சென்று பார்வையிட்டதுடன், கண்டெடுக்கப்பட்ட இராணுவச் சின்னம் படையினரது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

puthinam.com, sankathi.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.