Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன அழிப்புக்காக குறிவைக்கப்படும் தமிழ்ப் பெண்கள் – பொஸ்னியாவின் நிலையே வடக்கில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jun 12, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

இன அழிப்புக்காக குறிவைக்கப்படும் தமிழ்ப் பெண்கள் – பொஸ்னியாவின் நிலையே வடக்கில்

பொஸ்னியாவில் இடம்பெற்ற போரின் போது ஒரு இனத்தின் அடையாளங்களையும், அவர்களின் தாயகத்தையும் சிதைப்பதற்கு பெண்களைத் தான் அரச படையினர் குறிவைத்து அவர்களின் கலாச்சாரத்தை அழித்தனர். அதேபோன்ற ஒரு நடவடிக்கையையே சிறீலங்கா அரசு வடக்கில் மேற்கொண்டு வருகின்றது என கோல்டன் அமைதி ஆதரவுக் குழுவின் ஊடகத்திற்கு எழுதிய பத்தியில் போல் நியூமான் தெரிவித்துள்ளார்.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

தமிழ் பெண்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் வன்முறைகளை அனைத்துலக சமூகம் கவனத்தில் எடுக்காதபோதும், பொதுமக்களை குறிப்பாக பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறீலங்கா அரசு தவறிவருவதாக ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் நிபுணர் குழு தொடர்பில் மறுதலையான கருத்துக்களை அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தும் முகமாக அது தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும், அறிக்கையில் பொய்யான தகவல்கள் அடங்கியுள்ளதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துவருகின்றது.

சிறீலங்காவில் காணாமல்போனவர்களில் பெருமளவானனோர் சிறீலங்கா படையினரிடம் சரணடைந்தவர்கள். சிறீலங்கா அரசின் போரினால் பாதிப்படைந்துள்ள பெண்கள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு பரிவு காட்டும் என எதிர்பார்க்க முடியாது. 80 விகிதமான பெண்கள் குழந்தைகளை உடையவர்கள்.

நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ள 8 பேரில் ஒருவர் பெண் என்பது மட்டுமே அதற்குள்ள தகமை. போரில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் அளிக்கும் போது நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ளவர்களிடம் எந்த உணர்வுகளைளும் காணப்படவில்லை. சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் உறுதிகள் அளிக்கப்படவில்லை. அதன் முழு நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மை அற்றவை.

போரின் இறுதி நாட்களில் பெண்கள் மீதான வன்முறைகளும், பாலியல் துன்புறத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ளது. காணொளி ஆதாரங்களில் காணப்படும் பெருமளவான பெண்களின் உடைகள் அகற்றப்பட்டுள்ளன.

இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்த முகாம்களிலும் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கு பணிபுரிந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும்; கணவர்களை இழந்த 90,000 பெண்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்கள்.

உதவிகள் அற்ற நிலையில் கைவிடப்பட்டுள்ள பெண்கள் மிகவும் கடினமான பணிகளை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பலர் கண்ணிவெடி அகற்றும் தொழிலையும் மேற்கொள்கின்றனர். தமது பிள்ளைகளுக்கு உணவு அளிப்பதற்காக அவர்கள் இந்த தொழிலை மேற்கொள்கின்றனர். மீன்பிடித்தல், விவசாயம், கைத்தொழில் என்பன சிறீலங்கா அரசின் தடைகளால் வடக்கில் பாதிப்படைந்துள்ளன.

குறைந்த ஊதியம், அடிமைபோல நடத்துதல் போன்ற காரணிகளால் பெண்களையே சிறீலங்கா அரச நிர்வாகம் வடக்கு – கிழக்கில் பணிகளில் அமர்த்தி வருகின்றது. ஆண்களுக்கு மதுவையும், போதை பொருட்களையும் கொடுத்து செயற்திறனற்றதாக அது மாற்றி வருகின்றது. இவை அனைத்தும் சிறீலங்கா அரசின் இன அழிப்பின் வடிவங்கள்.

தம்மை திருமணம் செய்யுமாறு வடக்கில் பணியாற்றும் சிறீலங்கா இராணுவத்தினர் தமிழ் பெண்களை பலவந்தப்படுத்தி வருகின்றனர். சிப்பாய்கள் வடக்கில் பணியாற்றும் வரையிலுமே இந்த திருமணம் தொடரும்.

வடக்கை சிங்களமயப்படுத்தும் திட்டதிற்கு அமைவாக தமிழ் பெண்களை திருமணம் செய்யுமாறு சிறீலங்கா அரசு தனது படையினருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றது. ஓரு இனத்தின் தாயகப் பகுதியை அழிக்கும் இந்த நடவடிக்கையே பொஸ்னியாவிலும் மேற்கொள்ளப்பட்டது.

போரில் வெற்றிபெற்ற சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விடுதிகளையும் சிறீலங்கா அரசு வடக்கில் அமைத்து வருகின்றது. உல்லாசப்பணிகளை கவர்வதற்காக வடக்கை தாய்லாந்து போல மாற்றவும் சிறீலங்கா அரசு திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமலையை சிங்களமயப்படுத்தியது போல வடக்கிலும் சிங்களவர்களை குடியமர்த்துவதற்காக சிறீலங்கா அரசு வீடுகளை அமைத்து வருகின்றது.

1881 ஆம் ஆண்டு திருமலையில் சிங்களவர்கள் 3.3 விகிதமும், தமிழ் மக்கள் 66 விகிதமும் வாழ்ந்தனர். ஆனால் தற்போது இரு இனத்தவர்களும் அங்கு 33 விகிதங்களாகும்.

முன்னாள் போராளிகள் மீது சிறீலங்கா படையினர் தொடர் கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதேசங்களில் படை அதிகாரிகள் மாற்றப்படும்போது, முன்னாள் போராளிகள் மீது சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் துன்புறுத்தல்களை மீண்டும் மீண்டும் மேற்கொள்கின்றனர்.

தமது பாலியல் தேவைகளுக்கும் சிறீலங்கா படையினர் முன்னாள் பெண் போரளிகளையே பயன்படுத்தி வருகின்றனர். வீடுகளில் உள்ள பெண்களை தமது தேவைகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்துடன் சிறீலங்கா இராணுவத்தினர் ஆண்களை பலவந்தமாக தடுப்புக்காவலிலும் வைத்து வருகின்றனர்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணைகளுடன் மட்டும் அனைத்துலக சமூகம் நின்றுவிடாது, அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அவர்கள் முன்வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pathivu

  • 3 weeks later...

இதன் ஆங்கில வடிவம். முகநூளில் இணைக்கலாம் ; உரியவர்களுக்கு அனுப்பலாம்...

What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women

During the war in Bosnia, the world was horrified by stories of war babies as women were the prime target of marauding soldiers who were out to change the demography of the land. A similar undercurrent with the aid of the Sri Lankan State is happening in northern Sri Lanka.

Though the world has ignored this gross injustice committed on the Sri Lankan women, the report of the UN panel of experts released last month brought to light the failure of the Sri Lanka state to perform its sovereign duty of protecting civilians, especially women.

Now the Sri Lankan authorities take every opportunity to call the report as ‘flawed’ and ‘biased’, thus casting a negative impression on the panel and its contribution to humanity.

http://www.theweekendleader.com/Causes/514/Preying-on-women.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.