Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதாவைப் பார்த்து பயந்து நடுங்கும் மு.க.அழகிரி.

Featured Replies

தி.மு.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ‘காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறும்’ முடிவை தி.மு.க. எடுக்கும் என்றுதான் தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் வழக்கம்போல் கருணாநிதி தொண்டர்களை ஏமாற்றி விட, ‘தலைவரின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை’ என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதும் உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டினார், கருணாநிதி.

இதையடுத்து, தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் கடந்த 10-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியேறிவிடும் என்று உடன்பிறப்புகள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு மாறான சாதாரண தீர்மானங்களை நிறைவேற்றியது. கூட்டத்தில் நடந் தது என்ன என்பது குறித்து தி.மு.க. நிர்வாகிகளுடன் பேசினோம். ‘‘தி.மு.க. அவசர உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் மாலை 4.30 மணிக்குத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அனைத்து நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி மட்டும் முப்பது நிமிடம் தாமதமாக வந்தார்.

அன்றைய தினம் சமச்சீர் கல்வி நிறுத்தம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பின் முழு விவரத்தை அறிந்த பின்னரே தலைவர் அறிவாலயத்திற்கு வந்தார். கூட்டம் தொடங்கியவுடன் ‘இன்றைக்கு நமக்கு மகிழ்ச்சியான நாள். சமச்சீர் கல்வியைத் தொடர வேண்டுமென்று நீதிமன்றம் கூறியுள்ளது’ என்று மகிழ்ச்சி பொங்க கூறினார். இதனைத் தொடர்ந்து முதல் தீர்மானத்தை பேராசிரியர் வாசித்தார். தொடர்ந்து பத்துத் தீர்மானங்களும் வாசிக்கப்பட்டது.

சி.பி.ஐ.க்கு எதிரான கண்டனத் தீர்மானம் எல்லாம் இருக்க, காங்கிரஸுக்கு எதிராக ஒரு வார்த்தையும் இல்லாதது எங்களை அதிர்ச்சியடைய வைத்தது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் எழுந்து, காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பேச ஆரம்பித்தார். ‘இனியும் நாம் காங்கிரஸ் கூட்டணியில் தொடர வேண்டுமா? காங்கிரஸ் நமக்கு செய்து வரும் துரோகத்திற்கு சரியான பாடம் புகட்டியாக வேண்டும்’ என்று கோபமாகப் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட கருணாநிதி, ‘காங்கிரஸ் நம்மோடு நேரடியாக பகைமை காட்டவில்லை. ஆதலால் நாமும் மறைமுகமாகவே காய்களை நகர்த்துவோம். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விளக்கி ஒவ்வொரு பகுதியிலும் பொதுக்கூட்டம் நடக்கும்போது காங்கிரஸுக்கு எதிராக எவ்வாறு பேசவேண்டும் என்பதை முரசொலியில் உடன்பிறப்புக் கடிதம் மூலம் எழுதுகிறேன் அதனை நீங்கள் ஒவ்வொருவரும் படித்து விட்டு அதற்கேற்ப பேச வேண்டும்’ என்று சொன்னார்’’ என்று கூட்டத்தில் நடந் ததை விளக்கினார் அவர்.

‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், பொதுக்குழு முடிவு வேறு மாதிரியாக இருக்கும்’ என்றார் மூத்த நிர்வாகி ஒருவர்.

செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் அர்த்தமில்லாத தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதே என்று கேட்டபோது, ‘கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க. இல்லை’ என்றார் ஒரு தி.மு.க. நிர்வாகி. ஆச்சரியத்தோடு அவரை கவனிக்க, ‘‘ஜனநாயகம் காக்கப்படுகின்ற கட்சி என்று பெயரெடுத்த தி.மு.க.வில் இன்று ஜனநாயகமும் இல்லை. கட்டுப்பாடும் இ ல்லை. முன்பெல்லாம் தலைவர் ஒரு செயலில் இறங்கிவிட்டால் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்காமல் அதனை முடித்துக் காட்டுவார். இப்போது குடும்ப உறுப்பினர்களின் பிடியில் சிக்கித் திணறுகிறார்.

கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட போது, டெல்லியிலிருந்து ராஜாத்தி அம்மாள் கொடுத்த நெருக்கடியால்தான் தலைவர் இந்தக் கூட்டத்தை கூட்டினார். மத்திய அமைச்சரவையில் இருந்து விலகவும் முடிவெடுத்திருந்தார். ஆனால், கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கருணாநிதியைச் சந்தித்த அழகிரி, ஒருமணி நேரம் பேசியுள்ளார். ‘எனக்கு மந்திரி பதவி இல்லை என்றால் மதுரையில் என்னால் இருக்க முடியாது. என் உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஜெயலலிதா என்மீது இல்லாத, பொல்லாத வழக்குகளையெல்லாம் போட்டு என்னை சிறையில் அடைத்து விடுவார்’ என்று புலம்பியுள்ளார்.

‘பா.ஜ.வுடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த போதே நள்ளிரவில் நம்மைக் கைது செய்தவர்தான் இந்த அம்மையார். இப்போது மத்திய அமைச்சரவையில் இல்லை என்றால் என்ன கூத்தெல்லாம் நடக்கும் என்பதை யூகித்துக் கூட பார்க்க முடியாது. புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் முறைகேடு நடந்திருப்பதாக இப்போதே விசாரணைக் கமிஷன் எல்லாம் போட்டுள்ளார். இதையெல்லாம் யோசித்துப் பாருங்கள்’ என்றும் அழகிரி கூறியுள்ளார்.

அதன்பின்புதான் காங்கிரஸ் உறவில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற மனநிலைக்கு தலைவர் வந்துள்ளார். பிள்ளைகளின் தலையீட்டால் கட்சியில் ஒரு நிலையான முடிவு எடுக்க முடியாமல் தயக்கம் காட்டுகிறார்.

ஏற்கெனவே ஈழப் பிரச்னையில் தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தது, சட்டசபைத் தேர்தல் நேரத்தில் 63 சீட்டுகள் கேட்டு காங்கிரஸ் அடம்பிடித்த போது மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்தது எல்லாம் கருணாநிதி தலைமையில் எடுத்த முடிவுதான். இதெல்லாம் நடக்காமல் போனதற்குக் காரணம் யார் என்பது ஊருக்கே தெரியும்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கட்சி அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்போதே இந்த நிலை என்றால் வருங்காலத்தில் கட் சியின் நிலை என்ன ஆகுமோ?’’ என்று ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார் அந்த நிர்வாகி.

தேர்தல் தோல்விக்குப் பிறகும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தை தலைவரால் கட்டுப்படுத்த முடியவில்லையே என்பதுதான் தொண்டர்களின் வேதனையாக இருக்கிறது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

இச்செய்தி குறித்த படம் பார்க்க....

http://www.thedipaar.com/news/news.php?id=29581

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.