Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெல்ஜியத்தில் எனது பேச்சைக் கேட்டு ஐரோப்பியர்கள் கண்ணீர் வடித்தார்கள்.

Featured Replies

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நடந்த மாநாட்டில் உரை வீச்சு நடத்தி, ஈழத் தமிழர் பிரச்னையை ‘பளிச்’ என பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அங்கு நடந்த அனுபவங்கள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி...

‘‘லண்டனில், 2008-ம் ஆண்டு நடந்த ‘மாவீரர் நினைவு நாள்’ தான் வெளிநாட்டில் நான் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதன்பின்னர், பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்தும் வெளிநாட்டுக் கூட்டங்களில் பங்கேற்பைத் தவிர்த்து வந்தேன்.

ஆனால் இம்முறை என்னால் தட்டமுடியவில்லை. அதற்குக் காரணம்... ‘தமிழ் ஈழ மக்களின் அனைத்துலக தலைமைச் செயலகம்’ ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான பெல்ஜியத்தின் ‘பசுமைக் கட்சி’யிடமிருந்து வந்த அழைப்புதான்.இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் கட்சி அது. அக்கட்சி நிர்வாகி பால் மர்ஃபி என்பவர் என்னுடன் பேசினார்.

தொடர்ந்து,ஐரோப்பிய யூனியன் நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்,‘எங்கள் வாழ்க்கையை இந்த மாநாட்டில் நீங்கள் பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் சர்வதேச நாடுகளின் கவனம் எங்கள் பக்கம் திரும்பும்!’ என்று சொன்னார்கள். அதனால் ஒப்புக்கொண்டேன்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரம். உலகில் பத்திரிகையாளர்கள் அதிகம் வாழ்வது அங்குதான். ஜெர்மன், பிரான்சு, டச்சு மொழிகள்தான் பிரதானம். அங்குள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில்தான் கூட்டம்.

கலிங்கப்பட்டியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் நான்.இன்று, உலகின் மிகப் பெரிய நாட்டில், அழிக்கப்பட்ட எனது தமிழ் இனத்துக்காகப் பேசப் போகிறேன் என்று நினைத்தபோது விழிகளில் லேசான கண்ணீர்!’’ சற்றே உணர்ச்சிவசப்பட்டவராகச் சொல்கிறார்.’’

மாநாடு எத்தனை நாட்கள் நடந்தது?

‘‘ஒரே நாள்தான். ஆனால் நான் அங்கு ஒரு நாளைக்கு முன்பே போய்விட்டேன். குறுகிய கால அவகாசம் மட்டுமே இருந்தது. அதனால் விமானப் பயணத்தின்போதே உரையை தயார் செய்யவேண்டிய கட்டாயம்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒரு சௌகரியம் உண்டு. அங்குள்ள ஒரு நாட்டுக்குச் செல்பவர் அதன் மற்ற உறுப்பு நாடுகளுக்குச் செல்ல தனியே ‘விசா’ எடுக்க வேண்டிய கட்டாயமில்லை. அதனைப் பயன்படுத்தி, நான் பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கும் சென்றேன். பிரஸ்ஸெல்ஸிலிருந்து இரண்டரை மணி நேர கார் பயணம். பாரிஸில் ஈழத் தமிழர்களைச் சந்தித்தேன். அவர்கள் மனதில் இருக்கும் காயத்தின் வடுக்கள், முகத்தில் தெரிந்தது வேதனை.

இருந்தாலும் மாநாட்டில் நான் பேசவேண்டும் என்பதால் உடனே பிரஸ்ஸெல்ஸ் திரும்ப வேண்டிய நிலை.

இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னை உருவான வரலாறு;போருக்குப் பின்னர் உருக்குலைந்து போயிருக்கும் அவர்களது தற்போதைய நிலைமை; நிரந்தரத் தீர்வுகள்... என மூன்று தலைப்புகள். இதில் எனக்கு மூன்றாவது தலைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பேச ஒதுக்கப்பட்ட நேரம் எவ்வளவு தெரியுமா? பத்து நிமிடங்கள். மற்றவர்களுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டுமே.

ஆங்கிலத்தில் பேசிய நான் முதல் மூன்று நிமிடங்களில் ஈழத் தமிழர்கள் பட்ட துயரங்களை, வேதனைகளை, ஆனையிறவு முதல் முள்ளிவாய்க்கால் வரை நடந்த மனிதப் படுகொலைகளை படுவேகமாகப் பட்டியலிட்டேன். எனது வார்த்தைகளில் வெளிப்பட்ட வலி கூட்டத்தை அசைத்துப் பார்த்திருக்கவேண்டும். அத்தனை அமைதி. தொடர்ந்து, ஈழத்தில் தமிழர்கள் மறு குடியமர்த்தப்பட வேண்டும்; வடக்கு, கிழக்கில் சிங்களர்கள் குடியேற்றம் தடுக்கப்படவேண்டும்; கொசாவோ, சூடான், கிழக்கு தைமூர் உள்ளிட்ட பிற நாட்டுப் பிரச்னைகளில் தலையிட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கும் உலக நாடுகள் தனிஈழம் மலர உதவவேண்டும் என்றேன்.

அதற்குள் பதினைந்து நிமிடங்கள் ஆகிவிட்டது. அப்போது மாநாட்டு அமைப்பாளர்களில் ஒருவரான சாரா எலிரிட்ஜ் என்கிற பெண்மணி என்னையும், கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்தார். நான் பேச்சை நிறுத்தவில்லை. முடிவில்... தமிழர் பகுதிகளில் உள்ள சிறை முகாம்கள் அழிக்கப்பட வேண்டும், ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்; தனிநாடு கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் ஈழத்தில் தேர்தல் நடத்தப்பட்டு,அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்கிற தீர்மானங்களைச் சொல்லி முடித்தேன். அதற்குள் பதினேழு நிமிடங்கள் கடந்துவிட்டது. கூட்டத்திலிருந்த ஐரோப்பியர்களின் கண்களிலும் கண்ணீர். அரங்கத்தில் மீண்டும் அமைதி.’’

சரி. இங்கே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ராஜபக்சேவுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாரே?

‘‘வரவேற்கிறேன். ஒரு விஷயம் தெரியுமா? இப்படி ஒரு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலத்திலேயே நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். அதை இப்போது செயல்படுத்தியதில் திருப்தி.’’.

நன்றி. குமுதம்.காம்

இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க...

http://www.thedipaar.com/news/news.php?id=29654

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.