Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசமெங்கும் எமது நாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகின்றனர் -கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted by இரும்பொறை on 18/06/2011 in செய்தி

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறு சம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

புலம்பெயர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நுகெகொட ஆனந்த சமரகோன் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று நடைபெற்ற படைவீரர்களின் நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய,

நாடு பெற்றுக்கொண்டுள்ள வெற்றியைக் காட்டிக்கொடுத்து பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு உறுதுணை புரிவோருக்கு எதிராகவும், நாட்டை பாதுகாப்பதற்கும் மக்கள் மீண்டும் அணிதிரள வேண்டுமெனவும் அவர் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் இறைமையையும் மக்களையும் பாதுகாப்பதற்காக 30 வருட காலங்களுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினரை மறந்து செயற்பட்டால் மீட்கப்பட்ட நாடு எம்மிடமிருந்து கைநழுவிப் போய்விடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகள் எமது நாட்டைப் பிளவுபடுத்தி அதனை துண்டாட முயற்சி செய்தனர். தற்போது சர்வதேசத்துக்கூடாக அதனை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

பிரபாகரனுக்கு எதிராகப் போராடிய படையினருக்கு எதிரான வீடியோ கசட்டுக்களைத் தயாரித்து சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளனர். படையினரின் வெற்றி இதன்மூலம் மலினப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறுசம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

கட்டுநாயக்காவில் இடம்பெற்ற சம்பவங்கள் நேரடியாக ஜேர்மன் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசமெங்கும் எமது நாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் ஒரு தரப்பினர் செயற்படுகின்றனர் என்பது இதன்மூலம் தெளிவாகிறது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சனல்-4 வீடியோ காட்சிமூலம் கூறப்படுகிறது. எனினும், கிழக்கில் பௌத்த மத தேரர்கள் கொல்லப்பட்டதையோ, நிராயுதபாணியான 600 பொலிஸாரைக் கொலை செய்ததையோ சாதாரண அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகளைக் கொலை செய்ததையோ சனல்-4 காண்பிக்கவில்லை.

இராணுவத்தளபதி அண்மையில் நடத்திய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் மேற்குலக நாடுகள் அதனை நிராகரித்துவிட்டன.

அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்த முறை மற்றும் சிக்கல்களுக்கு பதிலளிக்கவும் நாம் தயாராகவிருந்தோம். எனினும், எம்மை குற்றஞ்சாட்டுபவர்கள் அம்மாநாட்டுக்கு சமுகமகளிக்கவில்லை. அவர்கள் புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலியினருக்கு உதவிசெய்பவர்கள்.

இவற்றுக்கு எதிராக மீண்டும் நாம் போராடவேண்டியுள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

http://www.eelampress.com/2011/06/27044/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதோ உலகளவில் ரொம்ப நல்ல பேயரோட இருந்த நாடுமாதிரி சொல்லுறாரு கோத்த போடி பையன்.

இபோதுதான் சரியான Protocol (தொடர்பாடல் வழக்கம்?) ஏற்படுத்தப்பட்டுக்கொண்டு வருகிறது. இது முழுமையாகவில்லை. இன்னமும் சரியான முறையை தெரிந்துகொள்ளாவிட்டால் இடைக்கால முறையாக கோபத்தபய தனது குற்றச்சாட்டுகளை இந்திய தூதுவராலயத்தில் பதிந்து கொள்ளாம். சகோதரன் ரூசியவில் தனது குற்றச்சாட்டுகளைப் பதியச்சென்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

கைதுசெய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் கொல்லப்பட்டுள்ளதாக சனல்-4 வீடியோ காட்சிமூலம் கூறப்படுகிறது

கைது செய்யப்பட்ட போராளிகளை செஞ்சிலுவை சங்கத்துக்கோ அல்லது உறவினர்களுக்கோ காட்ட ஏன் தய்ங்குகிறீர்கள் கோத்தா?.மக்களிடம் இருந்து பறித்த நகைகள், காசுகளை பங்கு போடுவதில் தான் உங்களுக்கும் சரத்துக்கும் முரண்பாடு வந்தது அனேகருக்கு தெரியும்.சரத்தை கேட்டால் உள்ளதை சொல்லி விடுவார் என்பதால் அவரை அடைத்து வைத்துள்ளீர்கள்.

இராணுவத்தளபதி அண்மையில் நடத்திய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் மேற்குலக நாடுகள் அதனை நிராகரித்துவிட்டன.

மேற்குலகிடம் இருந்து ஆயுதங்களையும் ஆலோசனைகளையும் பெற்று விட்டு அவர்களுக்கே பாடம் எடுக்க நினைத்தால் அவர்கள் வருவார்களா??

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சிறுசம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத் தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் தெரிவித்தார்.

அந்தளவுக்கு தமிழ் மக்கள் உங்களாட்சியின் மேல் நம்பிக்கை இழந்துள்ளார்கள் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும் திரு.கோத்தா.

நிராயுதபாணியான 600 பொலிஸாரைக் கொலை செய்ததையோ சாதாரண அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகளைக் கொலை செய்ததையோ சனல்4 காண்பிக்கவில்லை.

இதனை உங்கள் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சரை கேட்டிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது நாடு அபகீர்த்திக்கு உள்ளாகும் வகையில் சர்வதேசமெங்கும் செயற்படுகின்றனர்

ஒரு காலத்தில் இந்த நிலை வரும் போது ஏலியன்ஸ் உதவியை நாடலாம்..

தேயிலை பயிருக்கு நடுவில் ஊடுருவு ப்யிராக கஞ்சா பயிரிட்டு சட்டவிரோத அரசு நடத்தலாம்

இவனுங்களை தாலீபன் அரசு போல தள்ளிவிட வேண்டியது அனைவரின் செயற்பாடுகளிலே தங்கியுள்ளது

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.