Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு ஜெயலலிதா பொறுத்தமானவர்: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில்,

இலங்கையில் ஈழத் தமிழர்கள் அரை நூற்றாண்டு காலமாக விடியலுக்காக போராடி வருகிறார்கள். இலங்கையில் குடியேற சென்றவர்கள் எப்படி அந்த நாட்டு மண்ணுக்கு சொந்தம் கொண்டாட முடியும் என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ஈழம் தமிழர்களின் தமிழ் மடி அவர்கள்தான் அம்மண்ணின் மைந்தர்கள் ஈழத் தமிழர்களின் கடந்த கால வரலாற்றின் துயரம் நிறைந்ததாகவே இருந்துள்ளது. கோட்டையை ஆண்ட ஈழத் தமிழர்கள் இன்று கோணிப்பையை சுற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.

இலங்கையில் நடந்த இறுதிப்போரில், தமிழர்கள் மீது கொத்து கொத்தாக குண்டுகள் போடப்பட்டன. இப்போர் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே மட்டும் நடைபெறவில்லை.

இலங்கைக்கு ஆதரவாக 20 நாடுகள் போர்க்களத்தில் நின்றன. லிபியா நாட்டில் ஒரு பிரச்சினை என்றதும் அங்குள்ள மக்களுக்காக அமெரிக்காவும், மற்ற நாடுகளும் ஓடோடிச் சென்றன. ஆனால் ஈழத்தில் இனப்படுகொலை நடந்த போது எந்த நாடும் கண்டு கொள்ளவில்லை.

சட்டமன்ற தேர்தலின் போது இரட்டை இலை துளிர்த்தால் ஈழம் மலரும் என்று நான் பிரசாரம் செய்தேன். பலர் என்னை பார்த்து ஏளனம் செய்தார்கள். இன்று நாம் நினைத்தது போல, ஜெயலலிதா முதல் அமைச்சராகி வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.

8 கோடி தமிழக மக்களின் பிரதிநிதியான முதல் அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை ஒரு அமைச்சரை வைத்து முன்மொழிய சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஈழத் தமிழர்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தின் முக்கியத்துவம் கருதி சட்டமன்றத்தில் அவரே தீர்மானத்தை முன் மொழிந்து பேசினார். துணிச்சல் மிக்க பெண்மணி அவர்.

இதற்காக நன்றி என்ற வார்த்தையோடு நாம் நிறுத்திக் கொள்ளக்கூடாது. புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு அவர் பொறுத்தமானவர். அவரை புரட்சித் தலைவி என்று அழைப்பதற்காக தமிழர்களாகிய நாம் பெறுமைப்பட வேண்டும்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்த போதும் ஜெயலலிதா வற்புறுத்தினார். இலங்கையில் தமிழ் ஈழம் மலர்வதற்காக அவர் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் துணை நிற்போம். அவரது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த என் தம்பிமார்கள் அனைவரும் அணி திரள வேண்டும்.

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா பொறுத்தவரை எந்த காரியத்தில் இறங்கினாலும் அதனை நிறைவேற்றாமல் விடமாட்டார். தமிழ் ஈழத்தையும் அவர் பெற்றுத் தருவார். இதற்காக இறுதிவரை நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=56302

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவை வீரமங்கை வேலு நாச்சியாராக பார்க்கிறேன்: சீமான்

ஈழத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவை வீரமங்கை வேலு நாச்சியாராக பார்க்கிறேன் என்று சீமான் பேசினார்.

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசுகையில்,

எம் தமிழ் இனம் அழிவதற்கு காரணமாக இருந்தவர்கள் செத்தால் என்ன? இருந்தால் என்ன? எனக்கு கவலையில்லை. இலங்கைக்கு பொருளாதாரத் தடைவிதித்தால் இலங்கையில் உள்ள தமிழன் துன்பப்படுவான் என்று சவுந்தரராஜன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இப்போது கூறுகிறார்கள்.

போர்க் களத்தில் ஏற்பட்ட துன்பத்தைவிடவா பொருளாதாரத் தடை விதித்ப்பதால் தமிழனுக்கு ஏற்பட போகிறது. இலங்கையில் இருந்து வரும் எந்த பொருளையும் தமிழன் வாங்கக் கூடாது.

போர்க்களத்தில் இங்கிலீஷ்காரன் பீரங்கி குண்டுகளால் தன்னை சுட்டுக் கொன்றுவிடுவான் என நன்றாக தெரிந்திருந்தும் தைரியமாக அவனை எதிர்த்து போராடியவர் வேலு நாச்சியார். தற்போது நம் தமிழர்களுக்குக்காக தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை வேலு நாச்சியார் உருவில் பாக்கிறேன். அவர் தைரியமானவர். எம்ஜிஆரிடம் வீரம் இருந்தது. அதே வீரம் ஜெயலலிதாவிடம் உள்ளது. காரணம் அவர் கதாநாயகன். இவர் கதாநாயகி.

எடுத்து காரியத்தை செய்து முடிப்பார். ஆகவே தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் செயல் வடிவம் பெற நாம் ஜெயலலிதாவிற்கு ஊக்கம் கொடுப்போம் என்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புரட்சித் தலைவி என்ற பட்டத்துக்கு ஜெயலலிதா பொறுத்தமானவர்:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.