Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை _

வீரகேசரி இணையம் 6/28/2011 10:59:34 AM Share

புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்:,

யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும் விடுவிக்கப்படாத நிலையில் எஞ்சியுள்ளனர்.

இவர்களையும் கூடிய விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வார இறுதியில் மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 600 போராளிகள் அவர்கள் உறவினர்களுடன் இணைக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளதுடன் தொழில்சார் கல்விகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண வாழ்விற்கு திரும்பியதன் பின்னர் இவர்கள் தமது வாழ்வில் பொருளாதார பிரச்சினைகளை சீர் செய்துக் கொள்ள முடியும் எனக் கூறினார். _

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32409

  • கருத்துக்கள உறவுகள்

Posted Yesterday, 03:54 PM

2009 மே மாதம் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு தடுப்பு முகாம்களில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்படுவதாகக் கூறிவரும் இலங்கை, இச்செயல்முறை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது எனத் தெரிவித்துள்ளது. தற்போது எட்டு முகாம்களில் 3512 முன்னாள் புலிகள் இருப்பதாகவும் அவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் புனர்வாழ்வின் ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு ஜூன் அல்லது ஜூலை மாதத் தொடக்கத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட 600 பேர் விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பது பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

600 போராளிகளை விடுவிக்கிறோம் என்று கூறி 200 பேரையும், 900 போராளிகளை விடுவிக்கிறோம் என்று கூறி 343 போராளிகளையும் சமீபத்தில் இலங்கை அரசு விடுவித்தது யாவரும் அறிந்ததே. சுமார் 16,000 போராளிகள் தடுப்பு முகாமில் இருப்பதாகக் கூறிவந்த இலங்கை அரசு, அவர்களைக் கொத்துக் கொத்தாக விடுவிப்பதுபோல பல தடவைகள் சர்வதேசத்துக்கு கூறினாலும், தாம் அறிவித்ததில் பாதிப்பேரையே ஒவர் முறையும் விடுவித்து வந்துள்ளது. இவர்களில் பலர் மீண்டும் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். இந் நிலையில் திடீரென தம்மிடம் மீதமாக சுமார் 3,000 போராளிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

தம்மிடம் இருக்கும் போராளிகளை இலங்கை அரசு எப்போதுமே பட்டியலிட்டது இல்லை. இவ்வாறானதொரு நிலையில் இந்த 3000 போராளிகளை விடுவித்தால் இனித் தம்மிடம் எந்த ஒரு விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களும் இல்லை என இலங்கை அரசு கையை விரிக்கவுள்ளது. புலிகளின் பல முக்கியஸ்தர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் சரணடைந்த பின்னரே காணாமல் போயுள்ளனர். இவர்களின் கதி என்ன ? இது குறித்து தமிழ் அமைப்புகளும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும்.

http://www.eeladhesa...view=article

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.